Friday 20 December 2013

அரசே கேள் – 04

மகாத்மா காந்தித் தாத்தா
உள்நாட்டு உற்பத்திக்கு உயிரூட்டவே
உள்ளூர் கைத்தறி (கதராடை) ஆடை
அணிந்ததைப் பார்த்தாவது
ஆட்சிக்கு வரும் நம்மாளுகள்
வெளிநாட்டு
இறக்குமதிகளைக் குறைத்தலாவது
நம் நாட்டு
உள்ளூர் உற்பத்திகளைப் பெருக்கலாமென
ஆச்சி, அப்பு சொல்லுறது சரியே!
மனித வளங்களை
முறையாகப் பயன்படுத்தாமையால்
மூளைசாலிகள் வெளியேறவோ
பொருண்மிய வளங்களைப் பேண
நம்மாளுகளை விடாமையால்
வெளிநாட்டார் உறிஞ்சிக் கொள்ளவோ
இடமளிக்கின்ற
ஒழுங்காக நாட்டை
ஆளமுடியாத முட்டாள்களால்
நாடும் நாட்டு மக்களும்
பிச்சைக்காரர்களாக மாறுவதாக
ஆச்சி, அப்பு சொல்லுவதை
நினைவூட்ட முனைகிறேன்!
ஓ! அரசே!
அ, ஆ அதற்கு மேலும் படித்த
பழம் தின்று கொட்டை போட்ட
பட்டறிவிலும் பெரிய
ஆச்சி, அப்பு சொற்படி
மனித வளங்கள்
நாட்டைப் பேணவும்
பொருண்மிய வளங்கள்
நாட்டு மக்கள் பயனீட்டவும்
இடமளிக்காமல்
எப்படி
ஆட்சி நடாத்தப் போகின்றாய்?!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.