Saturday 25 April 2015

பட்டறிவும் பிழைப்பும்

நேற்று வரை
நான் படிக்கவில்லை,,,
இன்று தானே
நானே பட்டுக்கெட்டேன்...
நீயாவது எண்ணிப்பாரேன்
அப்பன், ஆத்தாள்
உள்ள வேளை - எனக்கு
ஒரு வேளை உணவுக்கே
தட்டுப்பாடே வந்ததில்லை!
பிறவூருக்குச் சென்ற வேளை
வயிறு கடிக்கக் கை கடித்தது...
கை கடிக்க வயிறு கடித்தது...
நிலைத்த வருவாய் இல்லையேல்
கடிக்குக் கடிதானென
நானே தான்...
பட்டேன்... கெட்டேன்... அறிந்தேன்!
நாளை வரும் நாளில்
நன்மை வந்து சேர
பட்டறிவு புகட்டிய பாடங்கள் வழிகாட்ட
வெற்றி வந்து சேரும் வேளை
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லையே!
பெற்றோர் சொல்லித் தந்ததை
உற்றார், உறவுகள் வழிகாட்டியதை
ஆசிரியர்கள்
அடித்தும் திட்டியும் தந்த பின்னூட்டலை
என் பிடரிக்குள் ஏற்றி
எதிலும் இறங்கி இருந்தால்
எப்படியோ - நான்
இப்படியும் பட்டுக் கெட்டிருக்க மாட்டேனே!
ஒன்றுமில்லாதவராகி
ஒருவருமில்லாதவராகி
பட்டுக் கெட்டவராகி
பட்டறிவு வழிகாட்டும் வழிச் செல்லும்
என் நிலைமையைப் பாரும் - அதுவே
ஊருக்கு அறிவுரை (உபதேசம்) ஆக
பட்டுக் கெட்டுப் பதப்பட்டு - நானும்
பிழைத்துக் கொண்டிருக்கிறேனே!

Monday 13 April 2015

எல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

(படம்: கூகிள் தேடலில்...)
எனது ஏழு வலைத் தளங்களின்
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/ 
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
வாசகர் எல்லோருக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
என் இனிய
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Sunday 12 April 2015

தொலைபேசித் தொல்லை

பணி (வேலை) நேரத்தில்
என்னைக் குழப்பியது
என் நடைபேசி வழியே
தொலைபேசி அழைப்பு ஒன்று!
தொலைபேசியும் தொல்லைபேசியுமென
அழைப்பை ஏற்ற வேளை
எதிர்முனையில் இருந்து
"ஐ லவ் யூ" என
இனிமையான பெண்ணின் குரல்...
பதிலுக்கு
"கூ இஸ் ஸ்பீக்கிங் தெஆர்?" என்றதும்
எதிர்முனையில் இருந்து
"நான் உன்னைக் காதலிக்கிறேன்" என
அதே பெண்ணின் குரல்...
பதிலுக்கு
"நீங்கள் யார்?" என்றதும்
எதிர்முனையில் இருந்து
"மம ஒயாவ ஆதரே கரனவா" என
அதே பெண்ணின் குரல்...
பதிலுக்கு
"ஒயா கவுத?" என்றதும்
அழைப்புத் தூண்டிக்கப்பட்டு விட்டதே!
இலங்கைவாசி என்பதால்  - இந்த
மும்மொழியால தொல்லை
இந்தியத் தமிழகவாசி என்றால்
பதினெட்டு மொழியால - என்
காதைக் குடைந்திருப்பாளே என
என் பணியைத் (வேலையைத்) தொடர்ந்தேன்!
அழைப்பை முறிக்காமல்
தொடர்ந்திருந்தால் - என்
இல்லாள் (மனைவி) இடம் போய் - "உன்
கணவனைக் காதலிக்க இணங்குவீரா?" என்று
ஒப்புதல் (அனுமதி) பெற்றுவரச் சொல்லியிருப்பேன்!
ஓ! நண்பர்களே!
இப்படி எவராச்சும் கேட்டால்
"ஆற்றில் இறங்கினாலும்
ஆழமறிந்தே இறங்குவேன் - எந்த
ஆளோடும் நண்பரானாலும்
ஆளையறிந்தே பழகுவேன் - அந்த
மாதிரியான நான் - உன்னை
முழுமையாய் அறியாமலே
பதிலளிக்க முடியாதே!" என்பதே
உங்கள் பதிலாக இருகட்டுமே!
ஆணாகிய எனக்கு
பெண்ணொருத்தி - இப்படி
தொலைபேசித் தொல்லை
தந்தது போல
பெண்ணாகிய உங்களுக்கு
ஆணொருவன் - இப்படி
தொலைபேசித் தொல்லை தர
வாய்ப்புக் கிட்டினால்
உறைப்பான பதிலளிக்க
காத்திருங்கள் - ஏனென்று
எண்ணிப்பார்த்தீர்களா? - இந்த
தொலைபேசித் தொல்லை தருவோர் - இன்றைய
காளை, வாலை இரு பாலாரிலும்
இருக்கக்கூடும் என்பேன்!

Wednesday 8 April 2015

பழிக்குப் பழி

பலர் முன்னே
ஒருவரை மற்றொருவர்
பிறர் மதிக்காமல் செய்தார்...

நேரில் கண்ட பலரும்
துயரப்பட்டுச் செல்ல
மதிப்பிழந்தவர் மட்டும்
சிரித்துக்கொண்டே சென்றார்...

பார்த்துக்கொண்டிருந்த ஒருவர்
மதிப்பிழந்தவரைப் பார்த்து
"பார்வையாளர் துயரப்பட
பாதிப்புற்றவர் சிரிக்கலாமோ?" என்றாரே!

தங்கத்திலே கரி பூசினாலும் கூட - அது
கழுவினால் போய்விடுமே...
தங்கம் கறுப்பது இல்லையே! - அது போல
எனக்குள்ள மதிப்பை - எவரும்
இழக்கச் செய்தாலென்ன
இல்லாமல் செய்தாலென்ன
எள்ளளவேனும் குறைய
வாய்ப்பில்லைக் காணும் என்றார்
பதிலுக்குப் பாதிப்புற்றவரும்!

என்னை மதிக்காமல் செய்தாரே - அவருக்கே
மதிப்பவர் எவரும் இல்லையே - அங்கே
மதிப்பில்லைக் காணும் அவருக்கே - அதுவே
பழிக்குப் பழி என்றே
பாதிப்புற்றவரும் பகிர்ந்தாரே!