"நூலைப் போல சேலை
தாயைப் போல சேய்" என்று!
கேளுங்கோவேன்...
"பாலைப் போல வெள்ளை
செயலைப் போல அறிவு" என்று!
பார்த்தீர்களா...
"தேடல் உள்ள வரைக்குந் தான்
பெருக்கிக் கொள்ளலாம் அறிவு" என்பதை!
பாருங்கோவேன்...
"முயற்சி உள்ள வரைக்குந் தான்
வெற்றி எம்மை நாடி வரும்" என்பதை!
அறிந்தீர்களா...
"கேட்பதும் பார்ப்பதும் பொய்
தீர விசாரித்து அறிவதே மெய்" ஆகுமென!
அறியுங்கோவேன்...
"கற்றலும் அறிதலும் முயற்சி
கற்பிப்பதும் அறிவிப்பதும் பயிற்சி" ஆகுமென!
உணர்ந்தீர்களா...
"அப்பனும் அம்மையும் கூடி
உறவுக்கும் ஊருக்கும்
மக்களுக்கும் நாட்டுக்கும்
நற்பணி செய்வதற்கே
எம்மைப் பெற்றது" என்றறிக!
உணருங்கோவேன்...
"ஆணும் பெண்ணும் கூடி
நன்மக்களைப் பெற்றால் போதாது
நல்லறிவைப் புகட்டி
நல்லொழுக்கம் பேணி
ஆளுமை நிறைந்தவர்களாக ஆக்கினாலே
நாளைய தலைமுறை மட்டுமல்ல
தாயக மண்ணும் நலமாக அமைய" என்றறிக!