Wednesday 26 August 2015

புதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02

http://www.ypvnpubs.com/

எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.
தூய தமிழ் பேணும் பணி
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்
உளநலப் பேணுகைப் பணி
யாழ்பாவாணனின் எழுத்துகள்
யாழ்பாவாணன் வெளியீட்டகம்
நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்
இவ்வாறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் உங்கள் யாழ்பாவாணனின் புதிய பதிவுகள் யாவும் இப்புதிய தளத்திலேயே இடம்பெறும். எனவே, இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.

http://www.ypvnpubs.com/

இப்புதிய தளத்தில் 45 பக்கங்களும் (Pages) 45 பதிவு வகைகளும் (Categories) பேணப்படுகிறது.
இப்புதிய தளத்தில் ஒவ்வொரு திங்கள் காலையிலும் வியாழன் காலையிலும் புதிய பதிவுகளைத் தர எண்ணியுள்ளேன்.
எனவே, பழைய வலைப்பூக்களுக்குத் தந்த ஒத்துழைப்பை இப்புதிய வலைப்பூவிற்கும் தருவீர்களென நம்புகின்றேன்.

http://www.ypvnpubs.com/

Tuesday 28 July 2015

அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?

அறிஞர் அப்துல்கலாம் அவர்களை
அறியாத எவரும் இங்கில்லை...
அறிஞர் அப்துல்கலாம் அறிந்த
அறிவியலைத் தான் அறிந்தே
ஒவ்வொரு இந்தியன் மட்டுமல்ல
ஒவ்வொரு தமிழனும் முயன்றே
அப்துல்கலாம் போன்று அறிஞராகணும் - அதுவே
அறிஞர் அப்துல்கலாமிற்கு - நாம்
செய்யப் போகின்ற பணியென்பேன்! - ஆம்
என்றே அவரே நெறிப்படுத்துகிறார் - பின்
என்றே திறமையை வளர்க்க
வழிகாட்டிக் கற்கத் தூண்டுகிறாரே!
அப்துல்கலாம் போன்று அறிஞராக
எண்ணிய ஒவ்வொரு உறவும்
என்றே சுட்டிக் காட்டுவது
தன்னம்பிக்கை இருந்தால் - நீ
தலைநிமிர்ந்து நடைபோடு என்றே! - நீயே
என்று எண்ணிக்கொண்டால் - என்றும்
அப்துல்கலாம் போன்று அறிஞராகலாம்
என்பதைக் கருத்திலெடு என்கிறாரே!
அறிஞர் அப்துல்கலாமிற்கு;
நாம் என்ன செய்யப் போகிறோம்?
என்றால் துயர் பகிர்வதல்ல;
அப்துல்கலாம் போன்று அறிஞராகணும்!

படங்கள்: கூகிளில் தேடித் திரட்டியவை

Sunday 26 July 2015

குடித்த பின் விளைவு

குடிகாரன் பேச்சுப் பிழை என்றால்
பார்வையும் அல்லவா பிழைக்கிறதே
"குடி மயக்கியது ஓ!"

குடிகாரியின் பார்வை பிழை என்றால்
தெருவழியே வயிற்றால அடிக்கிறாளே
"குடி கலக்கியது ஓ!"

Thursday 23 July 2015

சுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு


கட கட வென கொத்துற சாப்பாடு
ஆவ் ஆவ் வென வறுக்கிற சாப்பாடு
ஊ ஊ வென உறிஞ்சிற சாப்பாடு
சூ சூ வென சூப்பிற சாப்பாடு
சா சா வென நக்கிற சாப்பாடு
என்றெல்லாம் பலரை இழுக்கிற
தெருத் தெருவாய்
சுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு
என்றவாறு பல உணவகங்கள் இருக்க
ஆங்கொன்றில்
நம்மாளு மூக்குமுட்ட உண்டாராம்...
அடுத்தநாளு
வயிற்றால அடிக்க... வயிற்றால அடிக்க...
மருத்துவரை நாடினாராம்!
மருத்துவரும்
நம்மாளின் நாடி பிடித்துப் போட்டு
நல்ல பேதி  குடித்தாச்சு
இன்னும் நாலு தடவை
வயிற்றால அடிக்கலாம் - அதன் பின்
'அண்ணா' கோப்பி பருக
அல்லது
'அறிவு' தேன் பருக
நின்று விடும் - ஆனால்
நீண்ட ஆயுளுக்குப் பாரும்
ஆறு மாதத்துக்கு ஒருக்கால்
மருத்துவரை நாடி
கடுக்காய்ப் பேதி குடிக்கவேணும்
முடியாவிட்டால்
ஆறு மாதத்துக்கு ஒருக்கால்
வயிற்றால அடிக்க வைக்கிற
சாப்பாடு விக்கிற உணவகங்களில
மூக்குமுட்ட உண்டு களிக்கலாமே!

*பேதி மருந்து - வயிற்றால அடிக்க வைக்கும் மருந்து

Saturday 11 July 2015

அழியுமினம் தமிழினமே!


இந்தியா, இலங்கை இரண்டுமே
ஒரே நிலப்பரப்பாயிருந்த
குமரிக்(லெமூரியா)கண்டத்தில்
சைவமும் தமிழும் தான்
தொடக்கத்தில் காணப்பட்டதாமே!
இந்தியா, இலங்கை இரண்டும்
கடற்கோளால்(சுனாமியால்) துண்டுபட்டும்
சைவமும் தமிழும் தான்
மங்காமல் பேணப்பட்டதாமே!
சித்தார்த்த(புத்த)னின்
நல் வழிகாட்டலை விரும்பியே
சோழ மன்னன் ஆட்சியில் தான்
இந்தியாவில் தமிழர்
பௌத்தத்தைக் கடைப்பிடிக்க முயன்றனரே!
குமரிக்(லெமூரியா)கண்டமீன்ற
இந்தியா அண்ணன் என்றால்
இலங்கை தம்பி போல
இலங்கையரும்
பௌத்தத்தைக் கடைப்பிடித்தனரே!
இந்தியாவில் ஆரியம்
தான் தோன்றித்தனமாக நுழைய
பௌத்தத்தை விரும்பியோர்
சிங்களத்தாலே தான்
பௌத்தத்தைப் பின்பற்ற வேண்டியுமிருந்ததே!
அண்ணன் மாறினால்
தம்பி என்ன செய்வான்?
இலங்கையிலும்
சிங்களத்தாலே தான்
தமிழர் பௌத்தத்தைப் பின்பற்றலாயினரே!
இலங்கையில்
சிங்களத்தாலே பௌத்தத்தைப் பின்பற்றிய
தமிழர் சிங்களவரானது போல
இந்தியாவிலும் பாரும்
தமிழிலிருந்து பிரிந்த மொழிகளால் ஆன
மலையாளி, தெலுங்கர், கன்னடத்தார் என
தமிழர் மாறிவிட்டனர் போலும்!
இன்றைய நிலையில்
இலங்கையில் தமிழர்
சிங்களவராலும்
இந்தியாவில் தமிழர்
மலையாளியாலும்
தெலுங்கராலும் கன்னடத்தாராலும்
துன்புறுவதைப் பார்த்தால்
தமிழராலே
தமிழர் அழிவதாகத் தெரிகிறதே!
நான் நினைக்கின்றேன்
உலகெங்கும்
தமிழர் தான் வாழ்ந்திருப்பார்கள்...
உலகத்தையே
தமிழர் தான் ஆண்டிருப்பார்கள்...
எப்படியிருந்தும்
மதம் மாறியோ மொழி மாறியோ
தமிழரே தமிழராலே அழிந்து
தனக்கென்று
நாடு ஒன்று இன்றியே
அழியுமினம் தமிழினமாச்சே!

முயற்சி செய்


"முடியாது" என்பது
மனித அகரமுதலியில்
இருக்க முடியாது - அப்ப
முடியும் என முடிந்த வரை
முயற்சி செய்!

Friday 3 July 2015

முகநூல் வழிக் கொள்ளை!

வெடிப்பதோ படித்தவர்/நல்லவர் போல
அடிப்பதோ பகற்கொள்ளை பாரும்...
இப்படித் தான் இணையத்தில் உலாவி
எப்படித் தான் ஏமாறுவார் பாரும்...

இந்தக் கவிதைக்கான பாடுபொருள்
அந்தத் தளத்தில் இருக்கே - அதன்
இணைப்பு இங்கே பாரும்...
சொடுக்கியே அங்கே படியும்!
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/07/Cheating-Through-Facebook.html


மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) பற்றியறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
http://paapunaya.blogspot.com/2015/07/blog-post.html

Saturday 20 June 2015

உங்களுக்கு மூளை வேலை செய்கிறதா?


ஒருவன்: மனிதனுக்கு எப்ப மூளை வேலை செய்யும்?
ஒருவள்: இது கூடத் தெரியாதா? - அது
         மனிதனுக்கு
         வயிறு கடிக்கும் போது தான்...

ஒருவன்: மனிதனுக்கு எப்ப மூளை வேலை செய்யாது?
ஒருவள்: இது கூடத் தெரியாதா? - அது
         மூக்குமுட்ட உண்ட மனிதன்
         நீட்டி நிமிர்ந்து படுக்கும் போது தான்...
         இல்லையென்றால் பாரும்
         மூக்குமுட்டக் (மது) குடித்த மனிதன்
         தன்நிலை இழந்து
         தெருவிலே விழுந்து கிடக்கையிலே தான்...
         இல்லையென்றால் பாரும்
         கள்ளக் களவாக
         வாலை ஒருவளுடன் வீழ்ந்து கிடக்கையிலே தான்...
         இல்லையென்றால் பாரும்
         கள்ளக் களவாக
         காளை ஒருவனுடன் வீழ்ந்து கிடக்கையிலே தான்...

Saturday 13 June 2015

எனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 03

சென்ற பதிவில் (http://eluththugal.blogspot.com/2015/05/2015-02.html)
"இயங்குநிலைப் (Animation) படத்தை வைத்து மதுரையில் நான் கண்ட மலையை அடையாளப்படுத்தி விட்டீர்களா? அந்த மலை பற்றிய தங்களுக்குத் தெரிந்த தகவலைப் பின்னூட்டமாகத் தாருங்களேன்." என்றெழுதியதற்கு ஒத்தக்கடைக்கு அப்பால் "ஒற்றைக் கல்லாலான ஆ(யா)னை மலைதான் அது" என்றும் ஆனை மலை பற்றி அறிஞர் கரந்தை ஜெயக்குமார் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார் (http://karanthaijayakumar.blogspot.com/2015/04/blog-post.html) என்றும் அறிஞர்கள் பகிர்ந்தனர்.

நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் செல்லப்பிள்ளைகளைப் பாருங்கள்...

விடிந்தால் தைப்பூசப் பெருநாள்! விடியுமுன்னரே (நடு இரவில்) நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் வீட்டிற்குச் சென்றாச்சு. அங்கே இறங்கியதும் சோதிப் பெருவிழா காலை ஆறரை மணிக்கு முதாலாவது சோதிப் பேரொளி பார்க்க வேண்டும் குளித்து முழுகி வேட்டியைக் கட்டி வள்ளலார் கோவிலில் காலை வைத்தாச்சு. அங்கே இலட்சக் கணக்கான வள்ளலார் விரும்பிகள் (பக்தர்கள்) வந்திருந்தனர். 

வள்ளலார் நிறுவிய சத்திய ஞான திருச்சபைக்கு நுழையும் வழியைப் பாருங்கள்.

தொடரும் சோதி வழிபாட்டில் சோதிப் பேரொளி தெரிகிறது என்று எல்லோரும் வள்ளலார் கூறிய அருள் மொழியான (மந்திரமான) "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி" எனச்சொல்லி சோதிப் பேரொளியைப் பார்க்கத் தலையை உயர்த்தினர். என்னை (நானோ கட்டையன்) நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) தூக்கிச் சோதிப் பேரொளியைக் காட்டினார். நானும் அவ்வாறே அவரைத் தூக்கிக் காட்டினேன்.

அதிகாலைச் சோதிப் பேரொளி பார்க்கக் கிடைத்தது பெரும்பேறு என்று வழிபாட்டை முடித்துக் கொண்டு வீதியை வலம் வரச் சென்றோம். ஞானசபை ஊடாக அன்னதான அறிவிப்பு; வீதி வழியே  "சாப்பிடுங்கோ... சாப்பிடுங்கோ..." என்று பொங்கல், சாதம் எனக் கொடுத்தார்கள். ஆங்காங்கே ஆட்டுக்கால் சூப்பு என்று தந்தார்கள். அதாவது ஆட்டுக்கால் போன்ற வேர், மற்றும் சித்த மருத்துவ மூலிகை கலந்த குடிநீர் தான், அது! அதனைப் பருகினால் உடலிலுள்ள பல நோய்கள் நீங்கும் என்று அங்கு குழுமிய அறிஞர்கள் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு 2015 மாசி தமிழகம் வந்து வடலூர் வள்ளலார் நினைவும் தைப்பூசப் பெருநாள் பற்றியும் எனது எண்ணங்களைப் பகிர்ந்தாலும் எனக்கு நிறைவு இல்லை. ஆகையால், கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி மேலதீகத் தகவலைப் பெறலாம்.

வள்ளலார் சித்தி பெற்ற இடமான வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பத்தில், திரு அறை தரிசனம் இடம்பெறுகிறது. அங்கும் சென்றிருந்தேன். திரு அறை தரிசனம் கடந்து ஓர் நீரோடை இருந்தது. வள்ளலார் அவர்கள் தனது பெருவிரலால் கீறியதால் உருவானதாகச் சொல்லப்படுகிறது. அங்கெடுத்த படங்களே கீழே தரப்படுகிறது.


பிறிதொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
(தொடரும்)




Tuesday 2 June 2015

இலங்கையில் பௌத்தம் பரவுகிறது



பௌத்தத்தின் குறியீடு
அரச மர நிழலல்ல...
வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டு
பட்டறிவால் வெளிப்படுத்திய
சித்தார்த்தனின்(புத்தரின்) வழிகாட்டலே!
புத்தரின் வழிகாட்டலை நம்பியே
உலகத்தார் பௌத்தத்தை விரும்பினர்!
'உயிர்களிடத்தே அன்பு காட்டு'
'உயிர்களைக் கொல்லாதே'
'தவறு செய்தால் மன்னிப்பு வழங்கு'
என்றெல்லாம்
எத்தனையோ புத்தர் சொன்னாலும்
'தமிழரிடம் அன்பு காட்டாதே'
'தமிழரைக் கொல்லு'
'தமிழருக்கு மன்னிப்பு வழங்காதே'
என்றெல்லாம்
இலங்கைப் பௌத்த கோவில்களில்
பிக்குமார் சிங்களவருக்கு வழிகாட்ட
புத்தர் செந்நீர்க் கண்ணீர் வடிக்க
சிங்களவர் தமிழரை அழிக்க
இலங்கையில் பௌத்தம் பரவுகிறதே!
பிந்திக் கிடைத்த தகவலின் படி
கத்தோலிக்கக் கோவில்களை...
இஸ்லாமியக் கோவில்களை...
இந்துக் கோவில்களை...
இடித்துடைத்து
புத்தர் சிலைகளை விதைக்க
இலங்கையில் பௌத்தம் பரவுகிறதே!
இறுதியாகக் கிடைத்த செய்திகளின் படி
அரச மர நிழற் பார்த்து இருக்கும்
பிள்ளையாரைப் பிடுங்கி எறிந்து விட்டு
அரச மரம் இருக்கும் இடமெங்கும் 
புத்தரை நட்டு
பௌத்தத்தின் குறியீடு
அரச மரமெனச் சுட்டிக் காட்டி
இலங்கையில் பௌத்தம் பரவுகிறதே!

Friday 29 May 2015

கண்கள் பேசும் மொழி கூட...



கண்களால் காண்க
கண்டதில் நல்லது எதுவென்றே
கண்களால் கண்ணுற்ற
கண்டதெல்லாம் வழி காட்டுமே
கண்களால் வழிந்தோடும்
கண்ணீரும் கூட மருந்தாகுமே
கண்களால் இணையர்கள் தேடுவதும்
கண்கள் தான் தாம் களிப்புறவே
கண்கள் வழியே தான்
கண்ணுற்ற காதலர்களும் - அவரவர்
உள்ளத்தில் நுழைகின்றனரே
உள்ளதைச் சொன்னால் - உண்மையில்
கண்களின் பெறுமதியை எவரறிவார்?
அறிவார் தம் நலன் மட்டுமே
அறியார் கண்ணற்றவர் நிலையையே
பாட்டெழுதும் பாவலரின்
பாட்டின் பாடுபொருளும் கண்ணாகுமே
ஒன்பது வாசல் எம்முடலில்
ஒன்றாம் வாசல் கண்ணாகுமே
கண்கள் பேசும் மொழி கூட
கண்கள் தான் அறியுமாமே
கண்கள் வழியே நுழைந்தவை தான்
எண்ணங்கள் தோன்றத் துணையாமே
எண்ணிப் பார்த்தீர்களா
கண்ணில்லாதவன் எண்ணத்தில்
எண்ணற்ற துயரப் புண்களையே?
கண்ணொன்றைக் கொடுங்கள்
கண்ணுள்ளவன் அடைந்த மகிழ்வை
கண்ணின்றித் தானடைந்த துயரை
எண்ணி எண்ணி எடுத்துச் சொல்வரே!
நல்ல கண்ணுள்ளவர்களே - நீங்கள்
மெல்லச் சாவடைந்தால் - உங்கள்
கண்களை உரித்தே - பிறர்
கண்ணில் ஒட்டிக்கொள்ள உதவுங்களேன்
கண்ணின்றித் துயருற்றவர்
கண்ணுள்ளவன் அடைந்த மகிழ்வை அடையத்தானே!

குறிப்பு:- கண் மாற்றுச் சிகிச்சை என்பது சாவடைந்து சில மணி நேரத்துக்குள்ளே சாவடைந்தவர் கண்ணில் விழிவெண்படலத்தை உரித்து பார்வை இழந்தவர் கண்ணில் ஒட்டிவிடுதலே! கண் கொடை(தானம்) என்பது ஒருவர் சாவடைந்ததும் தனது கண்ணை பிறருக்கு இவ்வாறு வழங்க உடன்படுதல் ஆகும்.

Monday 25 May 2015

காதலும் ஒரு மருந்து தான்

காதல் - அது
ஒரு உணர்வு தான்
தூய்மையான (புனிதமான) ஒன்று தான்
அதனை மதிப்பவர்களுக்கு...
காதல் - அது
பிற‌ உயிர்களையும்
விரும்ப(நேசிக்க‌)க் கற்றுத் தரும்
அதனைப் புரிந்தவர்களுக்கு...
காதல் - அது
வெட்டி வேலை தான்
அதனைப் பொழுது போக்காக
எண்ணுபவர்களுக்கு...
காதல் - அது
சாவை(மரணத்தை)த் தேடும் வழி தான்
அது தான் பாருங்கோ
விருப்புகளை அடையும் வரை
விரும்புபவர்களாக
நடிப்பவர்களை நம்பியோருக்கு...
காதல் - அது
அருமையான மருந்து தான்
அதாவது
ஒருவரை ஒருவர்
விரும்புபவர்களாக நடிக்காது
உள்ளத் தூய்மையுடன்
ஒருவரை ஒருவர் நம்பி
காதலிப்போருக்கு மட்டுமே!

Thursday 21 May 2015

தீர்வேதும் வழங்காத புத்தரின் பௌத்த வழிகாட்டல்


புத்தர் வரலாறு + படம் : http://ta.wikipedia.org/s/58x

உலகுக்கு சிக்கல் சீனப் பௌத்தர்கள்
தமிழருக்குச் சிக்கல் இலங்கைப் பௌத்தர்கள்
புத்தர் வழிகாட்டலைப் பார்க்கும் முன்
புத்தரின் வாழ்வைப் பாரும்...
நாடு வேண்டாமென்றார்
அரச வாழ்வு வேண்டாமென்றார்
இல்லாள் (மனைவி) வேண்டாமென்றார்
அழகான ஆண்மகனை வேண்டாமென்றார்
அப்படியே
எத்தனையோ வேண்டாமென்ற
சித்தார்த்தன் தான் - தானே
புத்தராகித் தானுரைத்த 
பௌத்த வழிகாட்டலிலே
"விருப்புகளைத் (ஆசைகளைத்) தூக்கியெறிந்தால்
அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த
வாழ்க்கையை வாழலாம்!" என்று
வழிகாட்டியும் இருந்தார்! - அந்த
புத்தரின் வழிகாட்டலைப் பின்பற்றும்
சீன, இலங்கைப் பௌத்தர்களுக்கு
விருப்பங்கள் (ஆசைகள்) அதிகமாம்! - அதுவும்
பெண், பொன் விருப்பம் (ஆசை) இருப்பினும்
சீன - அயல் நாட்டு எல்லைச் சிக்கல்
சுட்டிக் காட்டுவதோ சீனப் பௌத்தர்களுக்கு
மண் விருப்பம் (ஆசை) இருப்பதையும்
இலங்கைப் போர்ச்சூழல் சுட்டிக் காட்டுவதோ
தமிழ்ப் பெண்கள் கற்புப் பறித்தல் 
(பெண் விருப்பம் (ஆசை))
தமிழர் பொன்கள் பொறுக்கி எடுத்தல்
(பொன் விருப்பம் (ஆசை))
தமிழர் மண்ணைத் தமதாக்க எத்தனித்தல்
(மண் விருப்பம் (ஆசை))
எல்லாம் இலங்கைப் பௌத்தர்களுக்கு இருப்பதையும்
உலகெங்கும் ஏற்றுக்கொண்ட உண்மையே!
விருப்புகளை (ஆசைகளை) விலக்கிவிட்டு வழிகாட்டிய
புத்தரின் வழிகாட்டலைப் பின்பற்றாத சிங்களவரால்
இலங்கையில் தீர்வின்றி அமைதியின்மை தொடர
புத்தரின் வழிகாட்டலைப் பின்பற்றாத சீனர்களால்
சீன - அயல்நாட்டு எல்லைச் சிக்கல் தொடர
உலகப் போர் ஏற்பட வாய்ப்புண்டோ?

அறிஞர் பகவான்ஜி எழுதிய பாவினிலே
புத்தராலும் இவர்கள் திருந்தவில்லை என்கிறார்
நான் அதைப் படித்த வேகத்திலே 
நான் இப்படி எழுத முயன்றேன்!
என்னை இப்படி எழுதத் தூண்டிய
அறிஞர் பகவான்ஜி எழுதிய 'சிரி'கவிதை!
கீழ்வரும் இணைப்புகளில் இருந்தாலும் கூட
நானும் கீழே பதிகிறேன்; படியுங்கள்!

ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற 
புத்தரின் கொள்கையை ஏற்றுக் கொண்ட 
சீனர்களும் சிங்களர்களும் 
மண் ஆசையை இன்னும் விட்ட பாடில்லை!

Wednesday 20 May 2015

அழும் முகங்களும் துயர் முகங்களுமாக



எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்
தண்ணீர் தண்ணீராகக் கொட்டும்
கண்ணீர் கண்ணீராக வடிக்கும்
பெண்ணென்ன ஆணென்ன
மண்ணுக்கும் விண்ணுக்குமிடையே
வாழும் போது காண்கிறேன் - நாளும்
எத்தனையோ துயரைப் பாரும் உறவுகளே!
யாரும் வாழ்வில் மகிழ்வடைந்தால்
வெளிப்பட்டு வராது - ஆனால்
வழி நெடுக நான் காணும்
எவர் முகத்திலும் துயரே தெரிகிறதே!
எண்ணி எண்ணிப் பார்த்தேன்
நம்மாளுகள் உள்ளத்திலே
மகிழ்வு வந்து போகிறதே தவிர
துயரம் தான் குந்தி விடுகிறதே!
இன்றைய மகிழ்வைக் கூட
நாளைக்கு வைத்துச் சுவைக்க இடமின்றி
நேற்றைய, முந்திய துயரல்லவா
என்றும் வந்து தடுத்து விடுகிறதே!
எண்ணி எண்ணிப் பார்த்தால்
நம்மாளுகள் தங்கள் உள்ளத்திலே
துயரைச் சுமக்கத் தெரிந்தது போல
மகிழ்வைச் சுமக்கத் தெரியாமல் இருப்பதே
அழும் முகங்களும் துயர் முகங்களுமாக
நம்முன்னே உலாவுகின்றனரே!



Monday 18 May 2015

ஆடைக்குறைப்பு அழகல்ல...


ஆள் வளர ஆடை குறைவதா?
ஆளும் வளர
அறிவு வளருமென்று பார்த்தால்
ஆடையைக் குறைக்கப் போய்
அறிவு மங்கியது தான் மிச்சமா?
இளசுகள் உடுத்தித் திரிவதைக் கண்டு
பெரிசுகள் உங்களை வெறுக்கிறாங்களே!

ஆண்களே! - உங்கள்
கீழ் சட்டை வழுகிக் கீழிறங்கலாமா?
பெண்கள் முகம் சுழிக்கிறாங்களே!
வழுகிக் கீழிறங்கும்
கீழ் சட்டையைப் பார்த்து...
பெண்கள் உங்களை வெறுக்கிறாங்களே!

பெண்களே! - உங்கள்
மேல்-கீழ் சட்டைகள் குட்டையாகலாமா?
ஆண்கள் முகம் சுழிக்கிறாங்களே!
குட்டையான சட்டைக்கு
மேலும் கீழும் தெரிவதைக் கண்டு
ஆண்கள் உங்களை வெறுக்கிறாங்களே!

அழகு என்பது இதுவல்ல
அழகாக மூடி வைக்கப்பட்ட
ஒன்றின் மீது தான்
விருப்பம் மேலோங்குகிறது...
அது பற்றிச் சிந்திக்காமல்
இது தான் அழகென்று
இப்படிக் காட்டுவதால் என்ன பயன்?
இளசுகளே - எல்லோரும்
உங்களை வெறுக்கிறார்களே!

முடிவாக ஒன்று...
ஒரு வேளை கூட
ஒழுங்காகச் சாப்பிட முடியாதவர்கள் கூட
முழு ஆடை அணிந்து மின்ன
பணத்துக்கு மேல் படுக்கின்ற
சில முகங்களே
மேல் நாட்டு விருப்பில்
நம்ம பண்பாட்டை அழிக்கிறார்களே!

Saturday 16 May 2015

இப்படியும் எண்ணத் தோன்றுகிறதே!


கால ஓட்டத்தைக் கண்காணித்தால்
கடவுள் கூடப் பணமென்றால்
நம்ம வீட்டுப் பக்கம்
வருவார் போல எண்ணத் தோன்றுகிறதே!
அங்காடியில் பாரும்
"உறவுக்குப் பகை கடன்" என்று
எழுதித் தொங்க விட்டிருப்பதை...
என் அறிவுக்கு எட்டிய வரை
"பணம் உறவை முறிக்கும் மருந்து" என்று
நாளுக்கு நாள் எண்ணத் தோன்றுகிறதே!
படிப்பு, பள்ளித் தேர்வு என்றாலும்
பணம் தான் குறுக்கே வருகிறது என்றால்
காதல், மணவாழ்வு என
எதற்கெடுத்தாலும்
பணம் இருந்தால் சுகமென
விடிய விடிய எண்ணத் தோன்றுகிறதே!
நட்பு, உறவு என எதுவானாலும்
பணம் உள்ள வரை தான்
பின் தொடர்வோரைப் புரிந்தால்
பணம் இல்லை என்றால்
எல்லாமே இல்லை என்றாகிவிடுமென
தனித்து வாழ்கையில் எண்ணத் தோன்றுகிறதே!
ஊருக்கூர் வீட்டுக்கு வீடு
நம்மாளுகள் வாழ்வதைப் பார்த்தே
நானும்
எண்ணி எண்ணிப் பார்த்தே
தலையைப் போட்டு உடைத்தே
உளவியல் அறிஞரானது தான்
எனக்குக் கிடைத்த பரிசு என
இரவுத் தூக்கத்தில் எண்ணத் தோன்றுகிறதே!
வருவாய், வருவாய் - நீ
தருவாய், தருவாய் என
எத்தனையோ எண்ணித் தானே
காத்திருந்து காத்திருந்து பழகினால்
கடைசியிலே 'பிரிவு' என்ற 'பரிசு' தானே
கண் முன்னே காதுக்கு எட்டியதும்
பணத்தின் வேலையென எண்ணத் தோன்றுகிறதே!
வருவாய், தருவாய் - நீ
உளதாய், தருவதாய் - நீ
அன்பைத் தருவதாய்க் கொடுப்பதாய்
பழகும் உறவல்லவா - நீயென
நாளும் பழகும் உறவுகளில்
நாலு பணம் குறுக்கே வராது
வாழ்வில் 'பிரிவு' என்றும் வராது
அன்பைக் கொடுத்து வாழ்வோரை
காணும் போதெல்லாம் எண்ணத் தோன்றுகிறதே!


தெருவெளிக் குழந்தைகள்

காதல் எனும் தேர்வெழுதப் போய்
அழகு(காமம்) எனும் பெறுபேறு கிடைக்க
அழகில்(காமத்தில்) விருப்பம் மேலோங்க
காதல் நெருக்கம் துணைநிற்க முடிந்தது
"தெருவெளியில் வீசப்படும் குழந்தைகள்!"

Saturday 9 May 2015

யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு - குறும்படம்

வழமை போல் நான் விரும்பும் பதிவர்களின் பதிவுகளை மேய்ந்த போது பாவலர் நா.முத்துநிலவன் ஐயா பக்கம் கண்ணில் பட்டது. நானும் பார்வையிட்டேன். பாவலர் நா.முத்துநிலவன் ஐயா அவர்கள் "தண்ணீர்ப்பஞ்சம் - குறும்படம்" என்ற தலைப்பில் அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
(படம்: வளரும் கவிதை தளத்தில் இருந்து) 

"தண்ணீர்ப் பஞ்சம் காரணமாகவே நான்காம் உலகப்போர் வரலாம்." எனத் தொடரும் அவரது பதிவில் "முடிந்தால் பகிருங்கள். அந்த நண்பருக்கு நன்றியுடன் வாழ்த்தும் கூறுங்கள்." என வழிகாட்டுகின்றார். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

பாவலர் நா.முத்துநிலவன் ஐயா அவர்களின் வழிகாட்டலின் படி நானும் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படம் வெளிவர உந்துசக்தியான அறிஞர் யாழ். மதிசுதா அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்தும் கூறுகிறேன். இவ்வாறான விழிப்புணர்வுப் படங்களை நான் என்றும் வரவேற்கிறேன்.

உலகம் வெப்பமடைதல், வானில் ஓசோன் ஓட்டை எனப் பல காரணங்களை நீட்டி உலகெங்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு வரலாம் என அறிஞர்கள் ஆளுக்காள் பதிவுகளைப் பதிவார்கள் என நம்புகின்றேன். ஆயினும், "யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு" என்ற தலைப்பில் நான் சொல்ல வரும் செய்தி வேறு.

பத்து ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதியில் இருந்து மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. அக்காலப் பகுதியில் மின்பிறப்பாக்கிகளின் (ஜெனரேட்டர்களின்) கழிவு எண்ணெய்களை (கழிவொயில்களை) நிலத்திற்குக் கீழே கருவிகளின் பின்னூட்டத்துடன் செலுத்திக்கொண்டு வந்தனர். 

அதன் தாக்கம் தற்போது நிலத்திற்குக் கீழே நன்நீர்ப் படையுடன் கழிவு எண்ணெய் (கழிவொயில்) கலந்துவிட்டது. அதனால், யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதிக்கு அண்மையாக உள்ள நன்நீர் ஊற்றுக் கிணறுகளில் கழிவு எண்ணெய் (கழிவொயில்) கலந்த நீரே வெளிவருகிறது. இதனால் குடிநீர்த் தட்டுப்பாடும் வேளாண்மைச் செய்கையைத் தொடர முடியாமையும் ஏற்படுகிறது.

இந்நிலை ஏற்படக் காரணம் அறிஞர்கள் தூக்கத்தில் இருந்தமையே! அதென்ன தூக்கம்? அதுதான் நிலத்திற்குக் கீழே செலுத்தியதை நடுக்கடலில் கலக்கவிட்டிருக்கலாம் என மாற்றறிஞர்கள் கருதுகின்றனர். இனியென்ன செய்யலாம்? காலம் கடந்து அறிவு (ஞானம்) வந்தென்ன பயன்?

இதற்கும் அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படத்திற்கும் என்ன உறவு? யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு வலுப்பெற்றால் என்ன நிகழும்? ஒன்றரை மணித்துளியில் உறைப்பாகக் காட்சிப்படுத்திச் சொல்ல வந்த செய்தி என்ன? இவற்றிற்கு விடைகாணக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படத்தைப் பாருங்கள்! முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


நன்நீரைப் பேணுவோம் நம்மவர் வாழ்வை வளப்படுத்துவோம்.



Sunday 3 May 2015

எனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 02


"2015 மாசி தமிழகப் பயணத்திற்கு தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் ஒத்துழைப்பே எனக்கு ஊக்கமளித்தது." என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி சென்ற பதிவைப் படிக்கவும்.
http://eluththugal.blogspot.com/2015/02/2015-01.html

இலங்கையில் கொழும்பிலிருந்து மிகின்லங்கா வானூர்தியில் புறப்பட்டு மதுரைக்குக் கிட்ட நெருங்கியதும் வானூர்தி தள்ளாடியது. அடடே! மதுரை வந்தாச்சோ எனத் தரையைப் பார்த்த வேளை மலை ஒன்று தென்பட்டது. மதுரையிலும் எத்தனை மலை இருக்கோ... மதுரைவாழ் உறவுகளைக் கேட்டு அறிந்து கொள்ளலாம் என எண்ணியவேளை வானூர்தி தரையைத் தட்டியது.


நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களுடன் மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் இருந்து வெளியேறி மாட்டுத்தாவணி பேரூந்தைப் பிடித்தோம். அங்கிருந்து தைப்பூசப் பெருநாள், வள்ளலார் சிறப்பு நாள் என வடலூருக்குச் சென்றுவிடலாம் என்றுதான்... பேரூந்தில் ஏறியதும் தள்ளாடிய வானூர்தியில் இருந்து பார்த்த மலை தான் நினைவுக்கு வந்தது.




பேரூந்து நகர நகர நினைத்த மலை நேரில் பார்க்கக் கூடிய சூழலும் தென்பட்டது. "அந்த மலையைத்தான் வானிலிருந்து பார்த்தேன்" என்றது நண்பர் சுஷ்ரூவா பல ஒளிப்படங்களை எடுத்தார். நகர நகர அந்த மலையைத்தான் சுற்றிப் பேரூந்து நகர்ந்தது போல இருந்தது. அத்தனை ஒளிப்படங்களையும் இயங்குநிலைப் (Animation) படமாக மாற்றினேன். அதனைக் கீழே பார்க்கலாம்.


இயங்குநிலைப் (Animation) படத்தை வைத்து மதுரையில் நான் கண்ட மலையை அடையாளப்படுத்தி விட்டீர்களா? அந்த மலை பற்றிய தங்களுக்குத் தெரிந்த தகவலைப் பின்னூட்டமாகத் தாருங்களேன்.

மாட்டுத்தாவணியில் இறங்கி வடலூருக்குச் செல்லவும் வேறு பேருந்திலே ஏறியாச்சு! ஒருவாறு ஆறு ஏழு மணி நேரத்தில் வடலூருக்குச் சென்றாச்சு. அடுத்த நாள் வள்ளலார் நினைவு இடத்தில் தைப்பூசப் பெருநாள். அவ்விடத்தருகே தான் நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் வீடும். அவரது வீட்டில் தான் ஓர் ஏழல் (வாரம்) தங்கியிருந்தேன்.

பிறிதொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
(தொடரும்)

Friday 1 May 2015

இனிய சிங்கள எதிரியே!

பாடவா - நான்
உன்னைப் பாடவா - நீ
என்னை முடக்கிவிட்டதைக் கண்டு
என்கை கடிக்க வைத்ததைக் கண்டு
என்வயிறு கடிக்க வைத்ததைக் கண்டு
நடுவழியே ஒதுக்கி வைத்ததைக் கண்டு
சூடு வாங்கிக் கட்டிய உடலும்
கேடு எண்ணிப் புண்ணாகிய உள்ளமும்
பட்டதைக் கெட்டதைப் பாடச் சொல்லுதே!

பாடவா - நான்
உன்னைப் பாடவா - நீ
என் உண்மைகளை அழித்ததை
என் வருவாயை உடைத்ததை
என் நம்பிக்கைகளை முறித்ததை
என் விரும்பிகளைப் பிரித்ததை
என் வாழ்க்கையைக் கெடுத்ததை
எண்ணி எண்ணி நொந்ததை
உள்ளத்தில் வலிப்பதைப் பாடச் சொல்லுதே!

பாடவா - நான்
உன்னைப் பாடவா - நீ
சுட்டுச் சென்ற சொல் கணைகள்
விட்டுச் சென்ற உடல் புண்கள்
பட்டுச் சென்ற உள்ளக் கீறல்கள்
தொட்டுச் செல்லும் காற்று உரச
முட்டி மோதும் எண்ணங்கள் - உன்னை
வெட்டு ஒன்று துண்டு இரண்டாக
வெட்டி விட்டாச்செனப் பாடச் சொல்லுதே!




Saturday 25 April 2015

பட்டறிவும் பிழைப்பும்

நேற்று வரை
நான் படிக்கவில்லை,,,
இன்று தானே
நானே பட்டுக்கெட்டேன்...
நீயாவது எண்ணிப்பாரேன்
அப்பன், ஆத்தாள்
உள்ள வேளை - எனக்கு
ஒரு வேளை உணவுக்கே
தட்டுப்பாடே வந்ததில்லை!
பிறவூருக்குச் சென்ற வேளை
வயிறு கடிக்கக் கை கடித்தது...
கை கடிக்க வயிறு கடித்தது...
நிலைத்த வருவாய் இல்லையேல்
கடிக்குக் கடிதானென
நானே தான்...
பட்டேன்... கெட்டேன்... அறிந்தேன்!
நாளை வரும் நாளில்
நன்மை வந்து சேர
பட்டறிவு புகட்டிய பாடங்கள் வழிகாட்ட
வெற்றி வந்து சேரும் வேளை
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லையே!
பெற்றோர் சொல்லித் தந்ததை
உற்றார், உறவுகள் வழிகாட்டியதை
ஆசிரியர்கள்
அடித்தும் திட்டியும் தந்த பின்னூட்டலை
என் பிடரிக்குள் ஏற்றி
எதிலும் இறங்கி இருந்தால்
எப்படியோ - நான்
இப்படியும் பட்டுக் கெட்டிருக்க மாட்டேனே!
ஒன்றுமில்லாதவராகி
ஒருவருமில்லாதவராகி
பட்டுக் கெட்டவராகி
பட்டறிவு வழிகாட்டும் வழிச் செல்லும்
என் நிலைமையைப் பாரும் - அதுவே
ஊருக்கு அறிவுரை (உபதேசம்) ஆக
பட்டுக் கெட்டுப் பதப்பட்டு - நானும்
பிழைத்துக் கொண்டிருக்கிறேனே!

Monday 13 April 2015

எல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

(படம்: கூகிள் தேடலில்...)
எனது ஏழு வலைத் தளங்களின்
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/ 
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
வாசகர் எல்லோருக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
என் இனிய
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Sunday 12 April 2015

தொலைபேசித் தொல்லை

பணி (வேலை) நேரத்தில்
என்னைக் குழப்பியது
என் நடைபேசி வழியே
தொலைபேசி அழைப்பு ஒன்று!
தொலைபேசியும் தொல்லைபேசியுமென
அழைப்பை ஏற்ற வேளை
எதிர்முனையில் இருந்து
"ஐ லவ் யூ" என
இனிமையான பெண்ணின் குரல்...
பதிலுக்கு
"கூ இஸ் ஸ்பீக்கிங் தெஆர்?" என்றதும்
எதிர்முனையில் இருந்து
"நான் உன்னைக் காதலிக்கிறேன்" என
அதே பெண்ணின் குரல்...
பதிலுக்கு
"நீங்கள் யார்?" என்றதும்
எதிர்முனையில் இருந்து
"மம ஒயாவ ஆதரே கரனவா" என
அதே பெண்ணின் குரல்...
பதிலுக்கு
"ஒயா கவுத?" என்றதும்
அழைப்புத் தூண்டிக்கப்பட்டு விட்டதே!
இலங்கைவாசி என்பதால்  - இந்த
மும்மொழியால தொல்லை
இந்தியத் தமிழகவாசி என்றால்
பதினெட்டு மொழியால - என்
காதைக் குடைந்திருப்பாளே என
என் பணியைத் (வேலையைத்) தொடர்ந்தேன்!
அழைப்பை முறிக்காமல்
தொடர்ந்திருந்தால் - என்
இல்லாள் (மனைவி) இடம் போய் - "உன்
கணவனைக் காதலிக்க இணங்குவீரா?" என்று
ஒப்புதல் (அனுமதி) பெற்றுவரச் சொல்லியிருப்பேன்!
ஓ! நண்பர்களே!
இப்படி எவராச்சும் கேட்டால்
"ஆற்றில் இறங்கினாலும்
ஆழமறிந்தே இறங்குவேன் - எந்த
ஆளோடும் நண்பரானாலும்
ஆளையறிந்தே பழகுவேன் - அந்த
மாதிரியான நான் - உன்னை
முழுமையாய் அறியாமலே
பதிலளிக்க முடியாதே!" என்பதே
உங்கள் பதிலாக இருகட்டுமே!
ஆணாகிய எனக்கு
பெண்ணொருத்தி - இப்படி
தொலைபேசித் தொல்லை
தந்தது போல
பெண்ணாகிய உங்களுக்கு
ஆணொருவன் - இப்படி
தொலைபேசித் தொல்லை தர
வாய்ப்புக் கிட்டினால்
உறைப்பான பதிலளிக்க
காத்திருங்கள் - ஏனென்று
எண்ணிப்பார்த்தீர்களா? - இந்த
தொலைபேசித் தொல்லை தருவோர் - இன்றைய
காளை, வாலை இரு பாலாரிலும்
இருக்கக்கூடும் என்பேன்!

Wednesday 8 April 2015

பழிக்குப் பழி

பலர் முன்னே
ஒருவரை மற்றொருவர்
பிறர் மதிக்காமல் செய்தார்...

நேரில் கண்ட பலரும்
துயரப்பட்டுச் செல்ல
மதிப்பிழந்தவர் மட்டும்
சிரித்துக்கொண்டே சென்றார்...

பார்த்துக்கொண்டிருந்த ஒருவர்
மதிப்பிழந்தவரைப் பார்த்து
"பார்வையாளர் துயரப்பட
பாதிப்புற்றவர் சிரிக்கலாமோ?" என்றாரே!

தங்கத்திலே கரி பூசினாலும் கூட - அது
கழுவினால் போய்விடுமே...
தங்கம் கறுப்பது இல்லையே! - அது போல
எனக்குள்ள மதிப்பை - எவரும்
இழக்கச் செய்தாலென்ன
இல்லாமல் செய்தாலென்ன
எள்ளளவேனும் குறைய
வாய்ப்பில்லைக் காணும் என்றார்
பதிலுக்குப் பாதிப்புற்றவரும்!

என்னை மதிக்காமல் செய்தாரே - அவருக்கே
மதிப்பவர் எவரும் இல்லையே - அங்கே
மதிப்பில்லைக் காணும் அவருக்கே - அதுவே
பழிக்குப் பழி என்றே
பாதிப்புற்றவரும் பகிர்ந்தாரே!

Friday 20 March 2015

இப்படியானவர் கூடினால் எப்படியான பிள்ளை பிறக்கும்?

பேர்னாட்ஷா என்ற அறிஞரிடம் அழகிய நடிகை ஒருவள் "நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறக்குமே!" என்று கேட்டாள்.

அதற்கு அறிஞர் பேர்னாட்ஷா என்ன கூறியிருப்பார்?

அந்த அழகிய நடிகையைப் பார்த்து "நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறந்தால் என்ன செய்வது?" என்று அறிஞர் பேர்னாட்ஷா கேட்டதும் அந்த நடிகை அவ்விடத்தை விட்டு அகன்று போய்விட்டாளாம்.

இந்தத் தகவலை நாளேடு ஒன்றில் படித்தேன். படித்ததும் "இப்படி நானும் எழுதினால் என்ன?" என்று எழுதியதைக் கீழே தருகின்றேன். எனது கைவண்ணத்தையும் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்.

இல்லாள் வள்ளி இல்லாத வேளை அயலாள் பொன்னி அறிஞர் பேர்னாட்ஷா பற்றி நாளேடு ஒன்றில் படித்ததாகக் கூறிப் பொன்னனிடம் கேள்வி கேட்கின்றாள்.

பொன்னி: நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற கதை/பாட்டுப் புனையும் ஆற்றலுடன் உங்களைப் போன்ற அழகும் இணைந்த பிள்ளை பிறக்குமே!

பொன்னன்: நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற வேளாண்மை செய்யும் ஆற்றலுடன் உங்களது நிறைவேறாத விருப்பமும் (ஆசையும்) இணைந்த பிள்ளை பிறந்தால் என்ன செய்வது?"

பொன்னி: நீங்கள் அழகு இல்லாதவரா? எனக்கு நிறைவேறாத விருப்பம் (ஆசை) இருப்பதை எப்படி அறிவீர்?

பொன்னன்: எனக்கு வேளாண்மை செய்தமையால் உடற்கட்டு இருக்கலாம். அது அழகில்லையே! நானும் நீரும் கூடிப் பிள்ளை பிறந்தால் எப்படி இருக்கும் என்கிறியே - அது உன் நிறைவேறாத விருப்பம் (ஆசை) தானே!

பொன்னி: உடற்கட்டு மன்னவரே! நானும் நீரும் கூடினால் பிள்ளை பிறக்காதா? பிறகேன் நிறைவேறாத விருப்பம் (ஆசை) என்பீர்?

பொன்னன்: பிள்ளாய்! என் இல்லாள் வள்ளிக்கு இந்தக் கதை தெரிந்தால். நீ உயிரோடு இருக்கவே உனக்குக் கொள்ளி வைப்பாளே! அப்படி என்றால் உன் எண்ணம் நிறைவேறாத விருப்பம் (ஆசை) தானே!

அந்த நேரம் வள்ளி வீட்டிற்குள் நுழையப் பொன்னி வாயடைத்துப் போட்டாள். பொன்னனும் மூச்சு விடவில்லை. ஏதோ வள்ளியும் பொன்னியும் பறைய, பொன்னன் வீட்டு முற்றத்தில் இறங்கினான்.

Saturday 14 March 2015

எனக்குக் காதல் வரவில்லை!

1.
தோழி: இத்தனை நாள் எத்தனையோ வழிகளில் பழகியிருந்தும் என்னைக் காதலிக்க மாட்டேன் என்கிறீர்களே!

தோழர்: இத்தனை நாள் பழகிய அத்தனை வழிகளிலும் உங்க வீட்டில எத்தனை கோடியும் கொடுக்க வசதி இல்லாமையே!

2.
நண்பர்: இத்தனை நாள் எத்தனையோ வழிகளில் பழகியிருந்தும் என்னைக் காதலிக்க மாட்டேன் என்கிறீர்களே!

நண்பி: இத்தனை நாள் பழகிய அத்தனை வழிகளிலும் நீங்கள் எத்தனை கோடியும் உழைத்துக் கொடுக்க வசதி இல்லாதவரே!

Wednesday 11 March 2015

இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்குத் தமிழீழம் அமைக்க வாக்கெடுப்பு நடாத்துவது சரியா? தவறா?

இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்குத் தீர்வாக எல்லா இனங்களும் மதங்களும் நிலப்பகுதி மேம்படுத்தல், கல்வி, தொழில் எல்லாவற்றிலும் சமவுரிமை பேணுவதோடு; அவ்வப்பகுதி மக்களே அவ்வப்பகுதியை ஆளும் உரிமையைக் கொண்டிருத்தல் என்பன உள்ளடக்கியதாக ஒரு தீர்வு இருப்பின் ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் மகிழ்வாக இருக்கலாமே!

சிறுபான்மை இனங்களை நசுக்கும் பேரினவாதிகளின் செயலால்; சிறுபான்மை இனங்களைக் காப்பாற்ற அவர்களுக்கெனத் தனிநாடு அமைத்துக் கொடுத்தால் நல்ல தீர்வாக அமையுமெனச் சிலர் கருதுகின்றனர். சிறுபான்மை இனங்கள் அதிகம் தமிழைப் பேசுவதால் அத்தனிநாட்டைத் தமிழீழம் என்கின்றனர்.

சிங்களப் போராளிக் குழுக்களான சேகுவாரா, ஜேவிபி மற்றும் தமிழ் போராளிக் குழுவான புலிகள் போன்றவற்றை ஒடுக்கிவிட்டதால், இனிப் போர் மூளாது என்ற முடிவுக்கு வர இயலாது. முதலாளித்துவ அரசை மாற்றி சோசலிச அரசை உருவாக்க முனையும் சிங்களப் போராளிக் குழுக்கள் மீளவும் உருவெடுக்கலாம். அதே போல தமிழ் போராளிக் குழுக்களும் உருவெடுக்கலாம்.

எனவே, அமைதியான இலங்கையைப் பேண; இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்கு நல்ல தீர்வு தேவைப்படுகிறது.

1. சரி, சிறுபான்மை இனங்கள் மகிழ்வாக வாழத் தமிழீழம் அமைக்க வாக்கெடுப்பு நடாத்தலாம்.

2. தவறு, ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் மகிழ்வாக இருக்கக்கூடிய தீர்வு அமைந்தால் போதுமே!

எந்தவொரு தீர்வானாலும் ஐக்கிய நாடுகள் சபை தான் முன்வைக்க வேண்டும். இல்லையேல் இலங்கையில் அமைதி தோன்ற வாய்ப்பில்லையே! இப்படி நான் எண்ணிப் பார்க்கிறேன். என்னால் என்னத்தைப் பண்ண இயலும்? எப்போதும் சிக்கலை(பிரச்சனையை) அலசுவதை விட தீர்வுகளை அலசுவது மேல். உங்கள் எண்ணத்தில் தோன்றும் தீர்வுகளை முன்வைத்தால், ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்கலாம்.

எனது தீர்வு ஒன்று மற்றைய வலைப்பூவில் இட்டிருக்கிறேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.
https://mhcd7.wordpress.com/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/

Saturday 28 February 2015

வரலாற்று உண்மை!


ஓ! நம்ம ஆளுங்களா...
ஒரு சான்றை அழித்து
இன்னோர் சான்றை ஆக்கினால்
ஆக்கிய சான்று என்ன சொல்லும்?
முன்னைய சான்றை முதன்மைப்படுத்தவா
என்னை ஆக்கினாய் என்று கேட்காதா?

ஓ! நம்ம ஆளுங்களா...
ஒர் எடுத்துக்காட்டாக
குபேரன் இராவணனுக்கு வழங்கி
இராவணன் ஆண்ட இலங்கையில்
சிங்களம், பௌத்தம் அடையாளமிட்டாலும்
இலங்கை; தமிழரின் நாடென்பதை
உலகம் ஏற்றுக்கொள்ளுகிறதே!

ஓ! நம்ம ஆளுங்களா...
ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?
வரலாறு என்பது
அழிக்க முடியாத ஒன்றே - அந்த
வரலாற்றையே அழிக்க முடிந்தால்  - அந்த
புதிய வரலாறே - அதற்கு
முன்னைய வரலாற்றின் சான்று!

Tuesday 24 February 2015

கள்ளமில்லா வெள்ளைக் கள்ளு

படம்: கூகிள் தேடல்
கள்ளுக் கடை
நாடத் தான் முடிகிறது...
கள்ளுக் குடிக்கையிலே
பாடத் தான் முடிகிறது...
கள்ளுக் குடித்த பின்
ஆடத் தான் முடிகிறது...
குடித்த கள்ளு வயிற்றில் புளிக்கையிலே
ஆங்காங்கே அவிழ்ந்த உடுப்புகளை
போடத் தான் முடிகிறது...
புளித்த கள்ளு தலைக்கேறுகையில்
நடுவழியிலே
படுத்துக் கிடக்கத் தான் முடிகிறது...
வயிற்றுக்குள்ளே போன
கள்ளமில்லா வெள்ளைக் கள்ளு
இத்தனையும் செய்விக்குமா?
"அப்பன் குடிச்சுப் போட்டு
உடுப்புகளை களைந்து போட்டு
கிடக்கின்ற நிலையை
கண்ட பெண்கள் காறித் துப்ப
கட்டியதிற்கு ஒறுப்பாக
அம்மா தோளிற் சுமந்து
வீட்டிற்கு இழுத்து வருவதைப் பார்" என்று
பிள்ளைகள்
நண்பர்களிடம் சொல்லிச் சிரிப்பதை
நம்மூர் நடுச் சந்தியில்
நீங்களும் கண்டு களித்தீர்களா?

Saturday 21 February 2015

சிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றிப் பரிசு யாருக்கு?


'விஜய்' தொலைக்காட்சி நடாத்திய சிறுவர்களுக்கான சிறப்புப் பாடகர் 4 (Super Singer Junior 4) நிகழ்வின் இறுதி நாள் (20/02/2015) நிகழ்வைப் பார்த்தேன். அந்நிகழ்விற்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளை பாராட்ட விரும்புகிறேன். அவர்களது ஆற்றலுக்குக் கிடைத்த பரிசாக இதனைக் கருதுகிறேன். இவர்கள் எல்லோரும் வெற்றியாளர்கள் என்பதை ஏற்றுக்கொள்வோம்.

விரும்பிகள் (இரசிகர்கள்) தெரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற சிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றியாளர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். 



சிறப்புப் பாடகர் (Super Singer) பாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஜெசிக்கா‬, வென்ற ‪தங்கத்தின்‬ ஒரு பகுதியைத் தமிழகத்தில் உள்ள அநாதைக் குழந்தைகளுக்கும் மீதியை ஈழத்தில் உள்ள அநாதைக் குழந்தைகளுக்கும் வழங்குவதாக அதே மேடையில் அவரும் அவரது தந்தையும் உறுதி அளித்திருந்தனர். அச்செயலால் உலகத் தமிழ் இனம் பெருமை கொள்ள முடிகிறது. 

இந்த முன்மாதிரியை எல்லோரும் பின்பற்றினால் நன்று.
ஜெசிக்கா குடும்பத்தாரை வாழ்த்துகிறேன். ஆயினும் மிகப் பெரிய இப்பொது நிகழ்வில் இவ்வரங்கில் 'அநாதை' என்ற சொல்லுக்குப் பதிலாக 'ஆதரவற்றவர்' என்ற சொல்லைப் பாவித்திருக்கலாம் என்பது எனது பணிவான வேண்டுல். அது பற்றி அறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்.

Wednesday 18 February 2015

சீரடி சாய் பாபாவின் ஒன்பது நாணயங்கள்.

உலகெங்கும் வழிபடுவோர் பார்வைக்குக் காண்பிக்கப்பட்டுவரும் சீரடி சாய் பாபா அவர்களின் ஒன்பது நாணயங்கள் இலங்கை-யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவந்திருந்த வேளை நிகழ்த்தப்பட்ட அந்த ஒன்பது நாணயங்கள் பற்றிய தெளிவை ஒளிஒலிப் பதிவாக (Video) உங்களுடன் பகிருகிறேன். இதனை நீங்களும் பலருக்குப் பகிருங்கள்.


இலங்கை-யாழ்ப்பாண நகரில் திருமதி.யோகாம்பிகை (விமலா) சங்கரன் அவர்களால் பேணப்படும் யாழ்ப்பாணம் சீரடி ஸ்ரீ சாய் சங்கரா ஆலயத்தின் இணையத்தளப் பணிகளை நானே மேற்கொள்வதால் இவ் ஒளிஒலிப் பதிவைத் (Video) தங்களுடன் பகிர முடிந்திருக்கிறது. கீழே அவ்விணையத்தள முகவரி தந்துள்ளேன். அதனை விரித்துப் பயன்பெறலாம்.

ஓம் சாயிராம்
ஜெய் சாயிராம்

Friday 13 February 2015

எனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 01

எனக்கும் தமிழக அறிஞர்களுக்கும் இடையே முதலில் உறவை ஏற்படுத்தித் தந்தது தமிழ்நண்பர்கள்.கொம் தளமே! 2015 மாசி தமிழகப் பயணத்திற்கு தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் ஒத்துழைப்பே எனக்கு ஊக்கமளித்தது. மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் நண்பர் சுஷ்ரூவா உடன் நான் எடுத்துக்கொண்ட ஒளிப்படம் கிழே தந்துள்ளேன்.

மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் அறிஞர் பகவான்ஜி உம் அறிஞர் வலிப்போக்கன் அவர்களும் என்னை வரவேற்க வந்திருந்தும் சந்திக்க முடியாமல் போனதையிட்டும் நண்பர் கில்லர்ஜி தெரிவித்ததும் எனக்குத் துயரம் தான். அடுத்த ஆண்டு தமிழகம் வரும் போது சந்திக்கலாம் என எம்மை நாமே ஆற்றுப்படுத்த வேண்டியதாயிற்று.

எனது தமிழகப் பயணச் செய்தி படித்து வாழ்த்தும் வழிகாட்டலும் தந்த எல்லோருக்கும் மிக்க நன்றி. அறிஞர் கவியாழி கண்ணதாசன் அவர்கள் நண்பர் சுஷ்ரூவாவுடன் கதைத்திருந்தார். அவரும் புலவர் இராமானுஜம் அவர்களும் மேலும் பலரும் சென்னைக்கு வருமாறு அழைப்புத் தந்தனர். பல பதிவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அடுத்த ஆண்டு தமிழகம் வரும் போது அவர்களது வேண்டுதலை நிறைவேற்ற எண்ணியுள்ளேன்.

எல்லோருடனும் இலகுவாகத் தொடர்புகொள்ளலாமென எண்ணி நடைபேசி இணைப்பைப் (Sim ஐப்) பெற்றிருந்தும் செயலுருப் (Activation) பெறமையால் பலருடன் தொடர்புகொண்டு சந்திப்புகளையும் உறவுகளையும் மேம்படுத்த முடியாமை தான் எனது துயரம்!

உண்மையில் இலங்கையிலே நடைபேசி இணைப்பு (Sim) இலவசமாகவும் செயலாக்கல் (Activation) ஓரிரு மணி நேரத்திலும் வழங்குகிறார்கள்.
அப்படியிருக்கையில் இந்தியாவில் மட்டும் பத்து நாட்கள் இழுபறி ஏன்?
இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திறன் போதாதா?
முகவர் நிறுவனங்களின் அக்கறையின்மையா?
என்னமோ... இந்தியாவில் தொலைத்தொடர்புச் செலவு (Call Charge) அதிகம் என்பதை நானறிவேன்.
பிறிதொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
(தொடரும்)

Saturday 31 January 2015

மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக

இலங்கையிலிருந்து மதுரை வானூர்தி நிலையத்தில் வந்திறங்கும் வேளை...
வானூர் இலக்கம் : Mehin Lanka / MJ307
மதுரையில் வந்திறங்கும் நாள் : 02/02/2015 திங்கட்கிழமை
மதுரையில் வந்திறங்கும் நேரம் : 13:25 / 01:25pm
பயணி விடுவிப்பு நேரம் ஒரு மணி நேரமாகக் கருதினால் 02:30pm இன் பின் 03:30pm வரை சந்திக்கலாம். பின்னர் தமிழ்நண்பர்கள்.கொம் பதிவரும் நண்பருமான சுஷ்ரூவா அவர்களின் (இந்திய-தமிழகம், கடலூர் மாவட்டம், வடலூர்) இல்லத்தில் சந்திக்கலாம்.
தொடர்புகளுக்கு : சுஷ்ரூவா - 091 087 54979451

இந்திய-தமிழகம், கடலூர் மாவட்டம், வடலூரில் இருந்து திரும்பி மதுரை வானூர்தி நிலையத்தில் இருந்து இலங்கைக்குக் திரும்பும் வேளை...
மதுரையில் இருந்து திரும்பும் நாள் : 07/02/2015 சனிக்கிழமை
மதுரையில் இருந்து திரும்பும் நேரம் : 11:25am
பயணி விடுவிப்பு நேரம் மூன்று மணி நேரமாகக் கருதினால் 08:30am இன் முன் 06:00am இலிருந்து சந்திக்கலாம்.
ஏமாற்றங்களைத் தவிர்த்து சந்திப்பை உறுதிப்படுத்த : சுஷ்ரூவா - 091 087 54979451

இதுவரை சந்திக்க விருப்பம் தெரிவித்த அறிஞர்கள், பதிவர்கள் எல்லோருக்கும் உங்கள் யாழ்பாவாணனின் மிக்க நன்றி.

தமிழ்நண்பர்கள்.கொம் அறிஞர் வினோத்-கன்னியாகுமரி, புலவர் இராமானுஜம், கவியாழி கண்ணாதாசன் போன்ற பெரியோர்கள் சென்னைக்கு வருமாறு அழைப்புத் தந்தனர். இம்முறை நேரமின்மை காரணமாக இயலாமல் போனாலும் அடுத்த தடவை சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் வருகை தந்து பதிவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளேன்

முன்னைய தகவலறிய:
யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html
கடலூர், வடலூரில் உளநல வழிகாட்டலும் மதியுரையும்
https://mhcd7.wordpress.com/2015/01/24/கடலூர்-வடலூரில்-உளநல-வழி/

Tuesday 27 January 2015

எத்தனையோ கோடிப் பணப் பரிசுகள்

எத்தனையோ கோடிப் பணப் பரிசுகள்
உங்களுக்குக் கிடைத்திருக்கிறதென
எத்தனையோ சிறப்பு மின்னஞ்சல்கள்
உங்களுக்கு வந்தவண்ணமிருக்குமே!
எத்தனையோ நம்மாளுகள்
அத்தனையும் உண்மையென நம்பி
எத்தனையோ இலட்சங்கள் செலவாக்கி
அத்தனையிலும் தோற்றுப் போனதைக் கண்டீரோ?
எத்தனையோ கோடி மின்னஞ்சல் பயனர்கள்
அத்தனை மின்னஞ்சல்களையும் நம்பி ஏமாறுவதனாலேயே
எத்தனையோ கோடி ஏமாற்றுக்காரர்கள் உலாவுவர்
அத்தனை மின்னஞ்சல்களிலும் கவனம் தேவையே!


Wednesday 21 January 2015

யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!


மதிப்புமிக்க, அன்புக்குரிய தமிழகப் பதிவர்களே!  உங்கள் யாழ்பாவாணன் 02/02/2015 - 07/02/2015 வரை தமிழ்நண்பர்கள்.கொம் பதிவரும் நண்பருமான சுஷ்ரூவா அவர்களின் (இந்திய-தமிழகம், கடலூர் மாவட்டம், வடலூர்) இல்லத்தில் தங்கியிருப்பார். தைப்பூசத் திருவிழாவின் பின் 05 அல்லது 06 ஆம் திகதி இலக்கியக் கருத்தரங்கு ஒன்றும் நடாத்த யாழ்பாவாணன் ஆகிய நான் எண்ணியுள்ளேன்.

வடலூருக்கு அண்மையில் வாழும் பதிவர்கள் எல்லோரும் வருகை தந்து சந்திக்குமாறு பணிவாக அழைக்கின்றேன். இவ்விலக்கியக் கருத்தரங்கில் படைப்பாக்கமும் வலைப்பூக்கள், கருத்துக்களங்கள், மின்வெளியீடுகள் பற்றியும் கலந்துரையாடலாம் என விரும்புகின்றேன். கருத்தரங்கு மற்றும் சந்திப்பு நாளை 04/02/2015 அன்று கீழ்வரும் நடைபேசி (Mobile) எண்ணுக்குத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தலாம்.
சுஷ்ரூவா - 091 087 54979451

2011 சித்திரை இந்திய-தமிழகம், சென்னைக்கு வந்த வேளை பலரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது. இம்முறையும் சென்னையில் இருந்து தொலைதூரம் சென்று தங்கியிருக்க வேண்டியிருப்பதால் பலரைச் சந்திக்க முடியாமல் போகலாம். ஆயினும், சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்குரிய மதுரை மண்ணின் வானூர்தி இறங்கு தளத்தில் எனது பயணம் தொடர்புபட்டுள்ளதால் விரும்பும் பதிவர்கள் மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் வந்து சந்திக்கவும் முடியும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்
http://yppubs.blogspot.com/
https://yarlpavanan.wordpress.com/
http://paapunaya.blogspot.com/
http://eluththugal.blogspot.com/
https://mhcd7.wordpress.com/

Monday 19 January 2015

மணிமேகலையின் பெற்றோர் யார்?

மணிமேகலை என்பவர் யார் என்று தெரியுமா? சுயநல, இல்லற வாழ்வை விட்டு ஒதுங்கி பொதுநல வாழ்வில் ஈடுபட்டவள். அவரது பெற்றோர் யாரென்று தெரியுமா? கீழ்வரும் இணையர்களில் எவராக இருப்பர்?

1. மாதவி-கோவலன்

2. கண்ணகி-கோவலன்

எஞ்சிய ஈழத் தமிழரை...

இலங்கையில் எப்பகுதியேனும் தமிழருக்கு உரியதல்ல - கோத்தபாய ராஜபக்ச.
 
சிங்களவர் நிலப்பரப்பிலே தமிழர் அத்துமீறிக் குடியேறியோர்களே - எல்லாவெல மேதானந்த தேரர்.
 
இவை தான் இன்றைய சுடச்சுடக் கிடைத்த செய்திகள். இவை மீளவும் ஈழப் போர் ஏற்பட அடித்தளமிடக்கூடும் அல்லது புலம்பெயர் தமிழரால் இலங்கைக்கு வெளிநாட்டு நெருக்கடியை ஏற்படுத்த வல்லது. இது பற்றிச் சிங்கள அறிஞர்கள் சிந்தித்தார்களோ எனக்குத் தெரியாது.
 
குபேரன் என்ற பணக்காரன் இராவணன் என்ற அரசனுக்கு இலங்கையை அன்பளிப்புச் செய்ததாகக் கூறப்படுகிறது. இலங்கையின் அரசனான இராவணன் ஒரு தமிழன். இராமன் இராவணனை அழித்த பின் அவனது உறவுக்காரரையே ஆட்சியில் அமர்த்தினான். இப்படித்தான் தமிழர் ஆட்சி இலங்கையில் தொடர்ந்தது.
 
பின்னொரு காலத்தில் விஜயன், குவேனி உட்பட 600 ஆட்கள் இந்தியாவில் இருந்து தென்னிலங்கையில் வந்து குடியேறியதாகவும். அவர்களே சிங்களவர் என்றும் கூறப்படுகிறது. ஆயினும், சோழ மன்னர் ஆட்சியில் பௌத்தம் பரவிய வேளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் அது பரவியதாம். இவ்வாறே பௌத்தம் தழுவியோர் சிங்களத்தைப் பாவித்தமையால் பின்நாளில் அவர்கள் சிங்களவர் ஆயினர் என்றும் கூறப்படுகிறது.
 
என்னறிவுக்கெட்டியவரை இலங்கை தமிழருக்கு உரியது; சிங்களவர் பின்நாளில் வந்தேறு குடிகளாயினர். எனவே கோத்தபாய ராஜபக்ச, எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோரது கருத்துகள் பொய் என்கிறேன்.
 
புத்தர் ஓர் அரசன். திருமணமாகி ஆண் பிள்ளைக்கு அப்பா. அரச, இல்லற வாழ்வை விட்டொதுங்கி தனது பட்டறிவால் உலகுக்கு வழிகாட்டியவர். பௌத்தம் ஒரு மதமல்ல. புத்தரின் வழிகாட்டலால் ஈர்க்கப்பட்ட மக்கள் குடும்பம். இவ்வுண்மை தெரியாத தேரர் எல்லாவெல அரசியலில் ஈடுபட்டால், புத்தருக்கு முந்திய தமிழரின் வரலாற்றை எப்படி அறிந்திருப்பர்.
 
இராணுவத்திலிருந்து ஓடித்தப்பி அமெரிக்கக் குடியுரிமை பெற்ற கோத்தபாய, மகிந்த ஆட்சியில் படைத்துறைச் செயலரான ஒழுக்கமற்றவருக்கு தமிழரின் வரலாறு அறிந்திருக்க வாய்ப்பில்லை.
 
என் உயிரிலும் மேலான தமிழறிஞர்களே! தமிழரின் தாயகம் இலங்கை என்றும் சிங்களவர் வந்தேறு குடிகள் என்றும் சான்றுப்படுத்தி உலக அரங்கில் முன்வைக்க வாருங்கள். இல்லையேல் எஞ்சியுள்ள ஈழத் தமிழரும் கடலில் குதித்து சாக நேரிடுமே!
 
கோத்தபாய ராஜபக்ச, எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோரது கருத்துகளைப் பொய்யெனச் சான்றுப்படுத்தாவிடின் சிங்களவரே, எஞ்சிய ஈழத் தமிழரைக் கடலில் குதிக்க வைத்துச் சாகவைப்பார்களே!
 
 

Tuesday 6 January 2015

தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?

உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி

தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா? என்பது பதிவர்கள் பக்கமாய்க் கிளம்பும் கேள்விக்கணை இதுதான். உழவர் பெருநாள், ஞாயிற்றுப் பொங்கள், தமிழர் புத்தாண்டு எனப் பல சிறப்புக்களைக் கொண்ட தைப்பொங்கலே முதல் தேவை! அப்படியெனின் சிறுகதைப் போட்டியை என்ன செய்யலாம்? இரண்டாம் இடத்தில் வைக்கலாம். ஆயினும் முதலாம் இடத்துத் தைப்பொங்கலைப் பற்றி உலகம் எங்கும் படிப்பிக்க இரண்டாம் இடத்துச் சிறுகதைப் போட்டி உதவலாம் என்பதை; எவரும் மறக்கமாட்டார்கள் என்பதை நான் நம்புகின்றேன். ரூபன் குழுவினரின் பெரிய மதியுரைஞர்கள் பண்டிகை நாட்களில் போட்டி நடாத்துவதை இப்படித்தான் எண்ணிச் செயலில் இறங்கி இருப்பார்கள் என நம்புகின்றேன்.

உங்க நாட்டு, உங்க ஊரு, உங்க வீட்டு, சிலருக்கு காதலன்/ காதலி வீட்டுப் பொங்கல் பற்றி இழையோடி அப்பண்டிகை நாளில் நள்ளிரவின் பின் ஞாயிற்றுக் கதிர்கள் முற்றத்தில் வந்து விழ பொங்கல் பானை பொங்கி வழியும் வரை நடந்ததென்ன? அதனை ஒரு சிறுகதை ஆக்கி அனுப்பலாமே! 2015 பொங்கல் நாள் என்றதும் கடந்த காலப் பொங்கல் நாட்களில் நிகழ்ந்த சுவையான செய்திகளையும் சிறுகதை ஆக்கி அனுப்பலாமே!

என்னங்க சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா? அப்ப நான், நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் உங்கள் கூகிள்+, லிங்டின், டுவிட்டர், பேஸ்புக் சுவர் பகுதிகளில் கீழ்வரும் இணைப்பை அறிமுகம் செய்து உதவுங்கள்.
http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html

அல்லது உங்கள் வலைப்பூக்களில் இடது/வலது பட்டை விட்ஜற் ஆக கீழ்வரும் இணைப்பைப் புகுத்தி விடுங்கள்.
<a target="_blank" href="http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html" title="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி">
<img src="http://yarlpavanan.files.wordpress.com/2015/01/2015-01-01_074945.jpg" height="200" width="200" alt="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி"></img>
</a>

“எப்படி இருப்பினும் எனக்குச் சிறுகதை எழுத வராது” என்று பின்னடிப்பவர்களும் இருக்கிறார்கள் பாருங்கோ! அவர்கள் சின்னப் பொடியன் யாழ்ப்பாவாணன் எழுதிய கீழ்வரும் பதிவுகளைப் படித்த பின்னர் தானும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாமே!
கதைகள் புனையலாம் வாருங்கள்! (http://wp.me/pTOfc-aP)

என்னங்க நீங்கள் சிறுகதை எழுதக் கூடியவரா? “சிறுகதை எழுதுவது எப்படி?” என எதாவது பதிவு செய்திருக்கிறீர்களா? இந்தச் சிறுகதைப் போட்டியில் ஆகக் குறைந்தது நூறு பதிவர்களைப் போட்டியில் இணைக்கவல்ல பதிவுகளை உங்கள் வலைப்பூக்களில் ஆக்கி உதவுங்கள். அதற்குக் கீழ்வரும் இணைப்பைப் பாவிக்கலாம். இதனையே எனது பதிவின் தொடக்கத்தில் இட்டேன்.
<a target="_blank" href="http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html" title="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி">
<img src="http://yarlpavanan.files.wordpress.com/2015/01/2015-01-01_074945.jpg" height="480" width="640" alt="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி"></img>
</a>

தைப்பொங்கல் நாளை முன்னிட்டு நடைபெறும் சிறுகதைப் போட்டியில் அதிகமானோர் பங்குபற்ற ஒவ்வொருவரும் உதவுங்கள். போட்டியில் சிறப்படைய எல்லோரும் பங்குபற்றலாம். இப்போட்டியின் வெற்றியே அடுத்து வரும் போட்டிகளாக நகைச்சுவைப் போட்டி, நாடகப் போட்டி, பாட்டுப் போட்டி, மரபுக் கவிதையாக அந்தாதிப் போட்டி எனப் பல நடாத்த உதவுமென நம்புகிறேன்.