Wednesday 21 January 2015

யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!


மதிப்புமிக்க, அன்புக்குரிய தமிழகப் பதிவர்களே!  உங்கள் யாழ்பாவாணன் 02/02/2015 - 07/02/2015 வரை தமிழ்நண்பர்கள்.கொம் பதிவரும் நண்பருமான சுஷ்ரூவா அவர்களின் (இந்திய-தமிழகம், கடலூர் மாவட்டம், வடலூர்) இல்லத்தில் தங்கியிருப்பார். தைப்பூசத் திருவிழாவின் பின் 05 அல்லது 06 ஆம் திகதி இலக்கியக் கருத்தரங்கு ஒன்றும் நடாத்த யாழ்பாவாணன் ஆகிய நான் எண்ணியுள்ளேன்.

வடலூருக்கு அண்மையில் வாழும் பதிவர்கள் எல்லோரும் வருகை தந்து சந்திக்குமாறு பணிவாக அழைக்கின்றேன். இவ்விலக்கியக் கருத்தரங்கில் படைப்பாக்கமும் வலைப்பூக்கள், கருத்துக்களங்கள், மின்வெளியீடுகள் பற்றியும் கலந்துரையாடலாம் என விரும்புகின்றேன். கருத்தரங்கு மற்றும் சந்திப்பு நாளை 04/02/2015 அன்று கீழ்வரும் நடைபேசி (Mobile) எண்ணுக்குத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தலாம்.
சுஷ்ரூவா - 091 087 54979451

2011 சித்திரை இந்திய-தமிழகம், சென்னைக்கு வந்த வேளை பலரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது. இம்முறையும் சென்னையில் இருந்து தொலைதூரம் சென்று தங்கியிருக்க வேண்டியிருப்பதால் பலரைச் சந்திக்க முடியாமல் போகலாம். ஆயினும், சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்குரிய மதுரை மண்ணின் வானூர்தி இறங்கு தளத்தில் எனது பயணம் தொடர்புபட்டுள்ளதால் விரும்பும் பதிவர்கள் மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் வந்து சந்திக்கவும் முடியும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்
http://yppubs.blogspot.com/
https://yarlpavanan.wordpress.com/
http://paapunaya.blogspot.com/
http://eluththugal.blogspot.com/
https://mhcd7.wordpress.com/

28 comments:

  1. தங்கள் விருப்பப்படி அனைத்தும் சிறப்புற நிகழ வேண்டும் என வாழ்த்துகிறேன்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. வணக்கம்

    தங்களின் பயணம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்... எடுத்த காரியம் வெற்றியடையட்டும்..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  3. வணக்கம்
    த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  4. உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  5. ்தமிழகத்திற்கு அன்போடு தங்களை வரவேற்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  6. தங்களின் செயல்பாட்டிற்க்கு எமது வாழ்த்துகள் தமிழகத்திற்க்கு வருக வருக என வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  7. வாருங்கள் அன்புடன் வரவேற்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  8. இலக்கியப் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!
    புதுவை வாசக அன்பர்கள் சார்பில் வரவேற்று மகிழ்கின்றோம்!
    இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு,
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  9. பயணமும் - எண்ணங்களும் சிறப்புற அமையட்டும்.
    இனிய வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்:

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  10. தங்களது இந்தியப் பயணம் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திட எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  11. தமிழகம் செல்வதற்கு வாழ்த்துக்கள்
    தங்கள் பயணம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  12. நண்பரே! சென்னை வருவீரா! வந்தால் பலரையும் சந்திக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. சென்னை வந்தால் பலரையும் சந்திக்கலாம் தான்.
      வடலூரில் நண்பர் சுஷ்ரூவா அவர்களது ஒழுங்குபடுத்தலில் வருகிறேன். இம்முறை சென்னை வர நேரமிருக்காது. அடுத்த ஆண்டு நண்பர் ரூபன் அவர்களுடன் சென்னை வந்து பதிவர்கள் எல்லோரையும் சந்திக்க எண்ணியுள்ளேன்.
      மிக்க நன்றி ஐயா!

      Delete
  13. மதுரைக்கு தாங்கள் வருவதில் மகிழ்ச்சி விமானம் வரும் நாள் ,நேரத்தைச் சொல்லுங்கள் ,சந்தித்து உரையாடுவோம் !

    ReplyDelete
    Replies
    1. Departure Date : Monday 02 February 2015
      Departure Time : 12.30 Colombo - Sri Lanka
      Arrival Time : 13.25 Mudurai - India
      Flight Num : Mihin Lanka - MJ307

      Delete
  14. நல்லது....வாய்ப்பு இருப்பவர்கள் சந்திக்கலாம். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.