Saturday 5 April 2014

அதனால், நட்புக்கு அழுக்கு

பெண்ணே!
நான் கெட்டவன் என்றா
என்னை விட்டு ஒதுக்கினாய்
அதனால்
நான் துயரப்படவில்லை!
பெண்ணே!
நீ என்னை நெருங்க
நானும் ஒதுங்குகிறேன்
அதனால்
துயரப்பட்டுவிடாதே!
காலம் மாறிப் போனாலும்
எங்கள் மக்களையும் (சமூகம்)
இன்னும் மாறவில்லையே
அதனால்
இருவருக்கும் கெட்ட பெயரை
வழங்க முடியாமல் திணறுமே!
என் மனைவிக்கு
உன் மீது விருப்பம் தான்
அதனால் - நீயே
என் வீட்டுப் பக்கம் வரலாம்
என் மனைவி முன்னே
நாமும் கருத்துப் பரிமாறலாம்!
உன் கணவனுக்கு
என் மீது விருப்பம் என்றால்
அதனால் - நானும்
உன் வீட்டுப் பக்கம் வரலாம்
உன் கணவன் முன்னே
நாமும் கருத்துப் பரிமாறலாம்!
நல்ல நட்புக்கு மட்டுமல்ல
உள்ளத்து அன்பைப் பகிரவும்
தடுப்பு வேலிகள் இருக்க
வாய்ப்பில்லையே...
அப்படியேதும் இருந்து விட்டால்
அங்கே
நட்புக்கு அழுக்கு இருக்கிறதே!

4 comments:

  1. வணக்கம்
    அண்ணா.

    கவிதை அருமையாக உள்ளது....பார்க்கப் போனால் ...பச்சைவிளக்கு எங்கோ எரியுது போல.....வாழ்த்துக்கள்....

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.