Friday 20 December 2013

அரசே கேள் - 02

அப்பா, அம்மா
இனிப்பு வேண்டித் தந்து
அழாமல் பள்ளிக்குப் போய்ப் படியென
முன்னர் முன்பள்ளிக்கு அனுப்பினர்!
வாய்க்குள் உமிந்த இனிப்பை
பக்கத்துத் தோழி பறித்து
தன் வாய்க்குள் போட்டு உமிய
எங்கள் படிப்பும் முன்னேறியது!
ஆளும் வளர அறிவும் வளர
முன்பள்ளியால
பெரிய பள்ளிகளுக்குப் போக
பல இடத்துப் பல நட்புகள்
ஒன்று சேர்ந்த போது தான்
ஒழுக்கச் சீர்கேடு என்றால்
என்னவென்று
கற்றுத்தேற முடிந்தது!
ஒருவன்
உடன் பறித்த ஆண் பனைக் கள்ளை
குளிர் நீர்க் குவளையில் கொண்டு வருவான்...
அடுத்தொருவன்
பொன்னிலைச் சுருட்டுகளுடன் வருவான்...
இன்னொருவன்
ஆடைகளைக் களைந்தவர்களின்(நிர்வாணிகளின்)
படங்களுடன் வருவான்...
வகுப்புக்கு ஆசிரியர் வராவிடில்
இவர்களின் நிகழ்வுகள் தொடரும்
இவர்களின் தொல்லை தாங்காமல்
சிலர்
பள்ளி மர நிழலின் கீழ்
படிக்கவோ காதலிக்கவோ முயல்வர்...
பள்ளிக்குப் போகேக்கையும்
வீட்டுக்குத் திரும்பேக்கையும்
இருபாலாரின் தொல்லைகள் ஏராளம்...
இவையெல்லாம்
பெற்றவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
கண்டிராத வகையில் நடந்தேறும்!
ஓ! அரசே!
புகைத்தல், குடிப் பொருள்,
ஆடைகளற்றவர் படங்கள் விற்பனைக்கும்
விலைப் பெண்கள் தெருவில் நடமாடவும்
அனுமதிப் பத்திரம் வழங்கினால்
மக்கள் சீர்கெட்டு உன்னை உதைக்க
எப்படி
ஆட்சி நடாத்தப் போகின்றாய்?!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.