Saturday 8 February 2014

அடகு நகை (Pawning)

விருப்பங்களை
மட்டுப்படுத்த முடியாமல்
விரும்பிய ஒன்றை அடைய
நிரந்தரமற்ற வருவாயை நம்பி
வைப்பகத்தில் (வங்கியில்)
நகையை (Pawning) அடகு வைத்து
அடைந்து விடலாம் தானே!
என் மனையாளும்
வைப்பகத்தில் (வங்கியில்)
நகையை (Pawning) அடகு வைத்து
விரும்பிய ஒன்றை அடைந்த பின்
காலம் கரைந்தோடிய பின்
வைப்பகத்திற்கு (வங்கிக்கு)
பெற்ற தொகையை
மீளளிக்க முடியாமல் போகவே
நகையையும் இழக்க வேண்டியதாயிற்றே!
என்னங்க...
நீங்க தலையைப் பிய்க்கிறீங்க...
அடகு, வட்டி, கடன், சீட்டு யாவும்
எம்மை விழுங்கிப்போடுமங்கோ...
நடந்தது நடந்து போச்சு
இனியாவது
நல்லதைப் பண்ணுங்கோவேன்!


பதிவர்களுக்கான செய்தி : http://wp.me/pTOfc-9c என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள்.

4 comments:

  1. Replies
    1. தங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
      நன்றி.

      Delete
  2. ''..அடகு, வட்டி, கடன், சீட்டு யாவும்
    எம்மை விழுங்கிப்போடுமங்கோ...''
    sure..
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.