Saturday 5 July 2014

இப்ப எப்படித் தலையிடியும் காய்ச்சலும்?

கே.கே. நகரில் முனுசாமி தெருவில் டிஷ்கவரி புக் பலஸ் கட்டிடத்தில் இணையத்தில் தமிழ்நண்பர்கள்.கொம் இல் கவிதை பதிந்த பின் வெளியே வந்த போது கவுண்டமணி, செந்திலைக் கண்டேன்.

செந்தில்: அண்ணே! எனக்கொரு ஐயம் அண்ணே!

கவுண்டமணி: அப்படி என்னடா ஐயம்!

செந்தில்: தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமாமே! அதெப்படி அண்ணே!

கவுண்டமணி: அதுவா... இங்கால கொஞ்சம் வாடா... சொல்லுறேன்!

செந்தில்: இங்கால நின்றால் உங்களால முடியாதோ?

கவுண்டமணி: இல்லை! இங்கால வந்தால் தானடா முடியுமடா...

கவுண்டமணிக்குக் கிட்டச் செந்தில் நெருங்கினார். கவுண்டமணியோ ஓர் உதை விட, செந்தில் பிடரி அடிபட விழுந்தார்.

செந்தில்: கிட்ட வைச்சு உதைக்கலாமோ அண்ணே!

கவுண்டமணி: இப்ப உங்களுக்குத் தலையிடி எப்படி?

செந்தில்: உங்கட உதையால வந்த தலையிடி அண்ணே!

கவுண்டமணி: உதைத்தான் சொல்லுறது; தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமென்று!

செந்தில்: போங்க அண்ணே! உதை உதையில்லாமல் சொல்லேலாதோ!

கவுண்டமணி: உதை தானே உதை உனக்கு உணர்த்திச்சு!

இதையெல்லாம் கண்டு களித்த பின், நான் அவ்விடத்தை விட்டு அகன்று நன்னூல்.கொம் செயலகத்திற்குச் செல்ல அம்பாள் நகரிற்குப் புறப்பட்டேன்.


7 comments:

  1. நல்லயிருக்கே கோமடி,,, சினிமாவுல வசனகர்த்தாவுக்கு முயற்சி பண்ணுங்க.....

    ReplyDelete
  2. #கே.கே. நகரில் முனுசாமி தெருவில் டிஷ்கவரி புக் பலஸ் கட்டிடத்தில் இணையத்தில் தமிழ்நண்பர்கள்.கொம் இல் கவிதை பதிந்த பின்#
    அங்கே சென்று வந்ததால் உண்டான வசனமா இது ?

    ReplyDelete
    Replies
    1. 2011 சித்திரை கத்திரி வெயில் தலையைப் பிளக்க சென்னை கே.கே. நகரில் தான் தங்கியிருந்தேன். அதனை நினைவிற்கொள்ள இதனை எழுதினேன். மிக்க நன்றி.

      Delete
  3. ஒரு நாளைக்கு ஒரு பதிவு என்பது சரி...!

    யோசிக்கக்க்வும் ஐயா ---> அடுத்த எனது பதிவு இதைப் பற்றித் தான்...!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. வணக்கம்

    நல்ல உரையாடல் வடிவில் நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள்அடுத்த பகுதி என்ன காத்திருக்கேன்.பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.