Monday 7 July 2014

நண்பா... நண்பா...

தேர்வு எழுதிய பள்ளித் தோழிகள் பேசிக் கொண்ட பேச்சுகளைப் பாருங்கள்.

தோழி-1 : தேர்வு திறம்பட எழுதினாயா?

தோழி-2 : சக்தி குறிப்பெடுத்த தாளைக் களவாடி எழுதியாச்சு...

தோழி-1 : உன்ர எதிர்காலம் போச்சடி...

தோழி-2 : சக்தி தானே வகுப்பில முதலாம் பிள்ளை!

தோழி-1 : ஆமாம். அவள் மேற்பார்வையாளர் கண்டுபிடிக்காமல் தலைகீழாய்க் குறித்ததை அப்படியே எழுதிட்டியேடி!

தோழி-2 : அவள் அதிலையும் கெட்டிக்காரியடி! நான் எதிலையும் முட்டாளடி...

தோழி-3 : இனியாவது படித்துப் போட்டுத் தேர்வு எழுத வாடி!

தோழி-4 : எவளாச்சும் குறிப்பெடுத்தைப் படியெடுத்து எழுதவும் படிக்க வேணுமடி...

8 comments:

  1. வணக்கம்

    அருமையான உரையாடல்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. இதற்காகவாவது படித்தால் சரி !

    ReplyDelete
  3. ப‌டித்தேன்....ரசித்தேன்...

    ReplyDelete
  4. ஹாஹாஹா நல்ல பிள்ளைகள்!!! இனியாவது படிப்பார்களா? ரசித்தோம்!

    ReplyDelete
  5. இதுகூட நல்லாத்தானே இருக்கு,,,,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.