Thursday 31 July 2014

விலை மகளுக்கு இலை போடாதீர்


போக்குவரவு என்றால்
தடைகள் ஆயிரம் வரலாம்
அதுபோலத் தான்
வாழ்க்கையிலும்
ஆயிரம் தடைகள் வந்து மோதலாம்!
தடைகளைக் கடந்தால் தான்
போக்குவரவும் இடம்பெறுவது போல
வாழ்க்கையிலும்
எதிர்ப்படும் தடைகளைக் கடக்கவேணுமே!
தடைகளைக் கடக்க முடியாது போனால்
தடைகளுக்குள்ளேயே
முடிந்தவரை வாழ முயற்சி செய்யலாமே!
தடைகளைக் கடக்க முடியா விட்டாலும்
முடிந்தவரை முயன்றும்
தடைகளுக்குள்ளேயே வாழ முடியா விட்டாலும்
சாகவேண்டுமே தவிர
விலை மகனாகவோ
விலை மகளாகவோ முடியாதே!
விலை மகனாரை விட
விலை மகளாரே நாட்டிலே அதிகம்...
ஆணென்றால்
எந்தத் தொழிலையையும் செய்யலாமென்றால்
சரிநிகர், சமநிலை கேட்கும் பெண்கள்
எந்தத் தொழிலையையும் செய்ய முடியாதோவென
கழிவுறுப்பு வாடகைக்கு விடுவது சரியா?
எவர் வாய்க் கேட்பினும்
எவர் தான் எப்படிச் சொன்னாலும்
பெண் பக்கம் தவறு என்றால்
அவளை
ஊரே ஒதுக்கி வைப்பதால் தான்
கோழைப் பெண்கள்
தெருக்கோடியில் விலைமகளாக
அலைவதைப் பார்க்க முடிகிறதே!
கோழைப் பெண்களே
உங்கள் தொழில் உறுப்புக்கு
பொன்(தங்க) நகை அணியும் வழக்கம்
(பழைய இலக்கியங்கள் கூறுகிறது)
ஏன் இருந்தது தெரியுமா?
வாடகைக்கு விடுவதற்கல்ல
வழித்தோன்றலைத் தருவிக்கவென்றே
உங்கள் புனித உறுப்பைப் பேணவே!
ஒருவனுக்கு ஒருத்தி என்பது
ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே
சொல்லப்பட்டது...
ஆனால்
ஆளுக்காள் தவறிழைத்த பின்
பெண் மீது பழி போடலாமோ?
ஆண் சிங்கங்களே
ஆண்மையை அடக்கியாள முடியாமல்
தெருக்கோடி விலைமகளை நாடி
பாலியல் நோயை மட்டுமல்ல
குடும்பப் பிரிவையும் தேடி வரலாமோ?
போதாக்குறைக்கு
மாற்றான் பெண் சீர்கெடத் துணைபோவதா?
இவை தானா
ஆண் சிங்கங்களின் ஆண்மை!
பெண்ணைப் பெற்றவர்களே
சற்றுச் சிந்தித்துப் பாருங்களேன்...
உங்கள்
குலமகள் தவறிழைத்தால்
சீர் திருத்தி வாழவையுங்களேன்...
தவறிழைத்த குலமகளை
நீங்கள்
ஒதுக்கி வைப்பதால் தானே
விலை மகளாகப் புறப்படுகிறாளே...
சீர் திருத்தியும்
குலமகளாக வாழாத
விலை மகளுக்கு இலை போடாதீர் - அது
எம்மைப் படைத்த ஆண்டவனுக்கே
பிடிக்காத ஒன்றே!
கழிவுறுப்பு வாடகைக்கு விடும்
தொழிலை ஒழிக்க
பெண்ணைப் பெற்றவர்கள்
விலை மகளுக்கு இலை போடா விட்டாலும்
ஆளாளுக்கு ஏற்ற பொறுப்பை
நிறைவேற்றினால்
நாளாக நாளாக
என் மகளும் விலை மகளாகாள்
நாடெங்கிலும் உள்ள
விலை மகளும் குலமகளாவாளே!

8 comments:

  1. நல்லதொரு கருத்து !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. மிக மிக அருமையான கருத்து நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. மிகமிக அற்புதமான வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. வணக்கம்
    அண்ணா.

    நல்ல கருத்தைவிதைத்துள்ளீர்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      போட்டீ தொடங்கியாச்சா...
      என் வாசகர்களே
      போட்டியில் பங்கெடுக்க வாரீர்!

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.