Thursday 10 July 2014

பத்திரிகைச் செய்திகளே!

இளமை
பூத்துக் குலுங்கும் அகவையிலே
பாலியல் உணர்வலைகள்
மோதிக்கொள்ளும் வேளையிலே
நம்மட குஞ்சுகள் (பொடி, பெட்டை)
தாமாக ஓடிப் போய்க் கூடியோ
தாமாகக் கூடிப் பின் ஓடியோ
குடும்ப வாழ்வில் இறங்கு முன்
சேமிப்புப் பற்றிச் சிந்திக்காமையால்
சீரழிந்து போகின்றனரே!
சோறு, கறி ஆக்கி விட
தேடவேண்டியது எத்தனையோ
அத்தனையும் இருந்தால் தானே
சமையல், சாப்பாடு போல
குடும்ப வாழ்வில் இறங்கு முன்
குடும்பம் நடாத்தத் தேவையானதை
தேடிக் கொள்ளாமல் இறங்கினால்
தெருவில் இறங்கி
பிச்சை எடுக்க வேண்டி வருமென
இளம் அகவைக் குஞ்சுகள்
அறிந்திருக்க வேண்டுமே!
அறிந்திருக்கத் தானே - அந்த
பாலியல் சுகம் தேடப் போய் - அதை
மறந்து விடவே...
வயிற்றை நிரப்பிய பெண்குட்டி
வயிற்றில் உள்ளதை அழிக்க
மருத்துவரை நாடவே
பெண் வயிற்றை நிரப்பிய
ஆண்குட்டியைத் தேடி
காவற்றுறை வலைவீச்சென
நாளும் நிரம்பி வழியும்
பத்திரிகைச் செய்திகளே!

4 comments:

  1. சமூகஅவலம் இப்படித்தான் இருக்கிறது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. இப்போதைய இளசுகள் இப்படித்தான் இருக்கின்றன....வாழ்க்கைச் சிந்தையில்லாமல்...நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்!

    ReplyDelete
  3. பபடித்தேன் ரசித்தேன்...சொக்கான கவிதை...

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.