Monday 26 May 2014

சாப்பிட மட்டும் மறப்பியளே!


பள்ளிக்கூடத்தில ஆசிரியர், மாணவர் கேள்வி நேரத்தில நடக்கிற நாடகமிது.

ஆசிரியர் : எத்தனை திருக்குறள் வள்ளுவர் எழுதினார்?

மாணவர் - 1 : வள்ளுவரைத் தான் கேட்கணும்...

ஆசிரியர் : அவர் வரமாட்டாரடா...

மாணவர் - 2 : ஈரடி வெண்பா தானே எழுதினார்...

ஆசிரியர் : சரி! அது தான்டா எத்தனை?

மாணவர் - 3 : ஒன்றே முக்காலடி வெண்பா தானே எழுதினார்...

ஆசிரியர் : சரி! அது தான்டா எத்தனை?

மாணவர் - 4 : எண்ணிக்கொள்ள முடியவில்லையே!

ஆசிரியர் : திருக்குறள் பொத்தகத்தை விரித்தாலெல்லோ எண்ணலாம்...

மாணவர் - 4 : படிச்சேன், மறந்திட்டேன் ஐயா!

ஆசிரியர் : சாப்பிட மட்டும் மறப்பியளே!

மாணவர்கள் : வயிறு கடிக்கையில பசிக்குமையா...

ஆசிரியர் : அப்ப, அடி போட்டால் படிப்பை மறக்க மாட்டியளே

மாணவர்கள் : (அமைதியாக இருந்தனர்)

ஆசிரியர் : இப்ப சொல்லுறன்... வள்ளுவர் 1330 திருக்குறள் எழுதினார்! நாளைக்குக் கேட்கையிலே சொல்லாவிடில் நெருப்படி தான் போடுவேன்.

மாணவர்கள் : நாளையான் நேரவிரிப்பில் நாலடியார் ஐயா!

ஆசிரியர் : அடுத்த நாள் கேட்டிட்டு அடிப்பேன்டா...

3 comments:

  1. வணக்கம்
    அண்ணா

    ரசிக்க வைக்கும் நல்ல உரையாடல்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. இப்படிப்பட்ட மாணாக்கர்களுக்கு பாடம் நடத்துவதற்குள் மண்டைக் காய்ஞ்சிடும் போலிருக்கே !

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.