Friday 2 May 2014

மக்களாயம் (சமூகம்) என் பார்வையில்

தாய் வயிற்றில் நான் பிறந்தேன்
தாய் மண்ணில் வந்து தவழ்ந்தேன்
தாய்¸ தந்தை வளர்ப்பில் நிமிர்ந்தேன்
காலத்தின் கட்டளைக்குப் பள்ளிக்குப் போனேன்
காலம் கரைய நானும் மாறினேன்
நண்பர்கள் பலருடன் பழகி இணைந்தேன்
நண்பர்களால் பலதும் கற்க முனைந்தேன்
வீட்டுக்கு வீடு நுழைவுப் படிதான்
வீட்டுக்கு உள்ளே ஆளுக்கு ஆள்தான்
நடத்தையும் செயலும் வேறு வேறுதான்
நாட்டிலும் ஆளுக்கு ஆள் இப்படித்தான்
கொஞ்ச ஆள்கள் படிப்பில் அக்கறைதான்
கொஞ்ச ஆள்கள் விளையாட்டில் முயற்சிதான்
கொஞ்ச ஆள்கள் இரண்டிலும் முன்னோடிதான்
எஞ்சிய கொஞ்சம் போல்லாத குழப்படிதான்
நல்ல சூழலில் சிக்கிய எல்லோருந்தான்
மெல்லச் சூழலில் சிறந்தவர் ஆயினர்தான்
பிழையான சூழலில் சிக்கிய ஆள்கள்தான்
பிழைக்க உழைப்பு இன்றியே நின்றவர்தான்
இன்றைய சூழலையே மாற்று வழிக்குத்தான்
இன்றுமே இழுத்துச் செல்வதைப் பார்ப்பீர்தான்
புகைத்தல்¸ குடிப்பொருள்¸ விலைப்பெண் இன்னும்தான்
பகைத்தல்¸ பொருட்பறி, அழித்தல் இன்னும்தான்
கொல்லுதல், கெடுத்தல், மணமுறிப்பு இன்னும்தான்
கொல்லையில் கள்ளத்துணை, மறுமணம் இன்னும்தான்
சொல்லில் எடுத்துக்கூற எத்தனையோ இருக்குத்தான்
எல்லாம் எங்கள் மக்களாயத்திலிருந்து ஒழியத்தான்
ஒழுக்கம் உயர்வைத் தரும் என்றுதான்
இழுக்கு இன்றி நாடு உயரத்தான்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றுதான்
ஒன்றிணைந்து எல்லோரும் செயற்பட்டால் முடியுந்தான்
பின்னேறி உள்ளோரை முன்னுக்குக் கொண்டுவரத்தான்
இன்றே பள்ளிகளிலும் படித்தவர்களாலும் தொடர்ந்தால்தான்
நன்றே அரசாலும் பெரியோராலும் முயன்றால்தான்
நாளைய சமூகம் நன்றே மாறுந்தான்
நாளைய விடியலில் மக்களாயம் மேம்படத்தான்
எங்கள் நாடும் சிறந்து விளங்குந்தான்
எங்கள் மக்களாயமென் பார்வையில் இப்படித்தான்
எங்களுக்கு எப்பவும் இருக்கவேணும் என்பேன்!

4 comments:

  1. வண்க்கம்

    இறுதியில்நல்ல கருத்தைபதிவுசெய்துள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

      Delete
  2. உங்கள் நம்பிக்கை வீண் போகாது !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.