Sunday 26 January 2014

கொடுக்கல் வாங்கலின் போது...

கேட்டால் கொடுப்பது
கடன் - அப்ப
வீணாகக் கேட்டு வேண்டாதே!
கேளாமல் கொடுப்பது
உதவி - அது
இரக்கமுள்ளவர் செயலென அறி!
இடக்கை கொடுப்பது
வலக்கைக்குத் தெரியக்கூடாதாம் - ஏனெனில்
கொடுத்தவரையும்
கொடுத்ததன் பெறுமதியையும்
பெற்றவரல்லவா சொல்லவேண்டும்!
உப்பிட்டவரைக் கூட
உள்ளளவும் நினை - அதாவது
கடுகளவு உதவியானாலும்
உதவியோரை மறத்தலாகாதே!

2 comments:

  1. கவிதைக்கு நன்றி. மிக ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.