Monday 13 January 2014

கடவுளே வாரும்

பொங்கல் நாள்
புத்தாண்டு நாள்
எல்லாம்
நல்லெண்ண வழிகாட்டலை
முன்வைக்கும் நாளே!
நம்மாளுகளுக்கு
நன்நாள், பெருநாள் எதுவானாலும்
குடிப்பதைப் புகைப்பதை நிறுத்தவோ
கெட்ட செயலை விலக்கவோ
எண்ணுவதில்லையே!
பண்பாட்டை வெளிப்படுத்தும்
பெருநாள் பொழுதுகளில்
பண்பாட்டைச் சீரழிக்கும்
நம்மாளுகளை
வந்தால் கண்டுகொள்வீர்
கடவுளே வாரும்!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.