Saturday 4 January 2014

நல்ல பெயர் வாங்க...

பள்ளியில் படிக்கையில்
வள்ளியின் எழுதுகோலைப் பறிக்க
ஆசிரியர் அடிக்க
எனக்குக் கிடைத்ததோ
கெட்ட பெயர்!
தெருவில விழுந்து கிடந்த
தருணியைத் தூக்கிக் கொண்டு போய்
மருத்துவரிடம் காட்டி
சுகமடைய உதவியதால்
ஊர் கூடி வாழ்த்தியதால்
எனக்குக் கிடைத்ததோ
நல்ல பெயர்!
அன்று
நான் நினைத்தேன்
அப்பா, அம்மா வைத்தது
நல்ல பெயர் என்றே...
ஆனால், நேற்று
நொடிப் பொழுதில் கிடைப்பது
கெட்ட பெயர் என்றும்
நல்ல பெயர் எடுக்க
நெடுநாள் காத்திருக்க வேண்டுமென
நானறிந்தாலும் கூட...
நம் செயலால்
நன்மை பெற்றோர் கூறும்
நன்றியறிதலே
நற்பெயரைத் தருகிறதென

இன்று தான் படித்தேன்!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.