Tuesday 21 May 2013

நான் வாழ நாலும் வேண்டும்


கை கடித்தால்
கைகுலுக்க எவர் வருவார்...
வயிறு கடித்தால்
வாலாட்ட நாயும் வருமா?
கெட்டு நொந்தால்
வழிகாட்ட எவர் வருவார்...
பட்டுத் தெளிந்தால்
உன்னைவிட எவர் வேண்டும்?
"உன்னை நீ அறி"
அன்பு, அறிவு, ஆளுமை, வருவாய் என
என்றும் - இவை
நான்கும் இருந்துவிட்டால்
நலமாய் - உன்
வாழ்வு நகருமே!

4 comments:

  1. உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் -உண்மைதான் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

      Delete
  2. ஆம் அண்ணா ஒரு மனிதனின் வாழ்க்கையில் இந்த நான்கும் இருந்தாலே அவன் சிறந்தவன் என்று உணரமுடியும் கவிதை அருமை அண்ணா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.