Sunday 28 April 2013

ஆண்டவனைக் கேட்கிறேன்


இந்தியாவும் ஈழமும்
இரண்டாகிப் போனதும்
அன்றைய கடற்கோளாலே...
உடல்களும் உறவுகளும்
துண்டாகிப் போனதும்
இன்றைய கடற்கோளாலே...
இரண்டாக்கித் துண்டாக்கி
அழிக்க எழும் கடற்கோளை
ஆண்டவா
உன்னால் அடக்க முடியாதா?
வான் வெளியில் இருந்து
வேடிக்கையா பார்க்கிறாய்?
இந்து மாகடலில்
கடற்கோள் உற்பத்தியா?
இந்தோனேசியாவில்
எம் உறவுகள் சாவு மழையிலா?
ஆண்டவா - நீ
உலகில் பிறந்த உயிர்கள்
அழிந்த பின்னாலே
எம்மைப் பெற்ற
தாய் மண்ணைக் கெடுக்கவா
இங்கு வர இருக்கின்றாய்...?

குறிப்பு:- 2010 இல் இந்தோனேசியாவில் இறுதியாக நிகழ்ந்த கடற்கோள் நினைவாக எழுதியது.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.