Sunday 28 April 2013

பள்ளிக்கூட நண்பர்கள்


என்னுடன் ஒன்றாய்ப் படித்த
பள்ளிக்கூட நண்பர்களே!
பள்ளிக்கூட வாழ்வை நினைத்தால்
உங்கள் முகம் தெரிகிறதே!
தொடர்பின்றிப் பிரிந்த நண்பர்களே!
என்னுடன்
தொடர்புகொள்ள மாட்டீரோ...?
உங்களோடு
ஓராயிரம் கதைகளுக்கு மேல்
ஒன்றுகூடிப் பேசலாமென
எண்ணியுள்ளேன்!
அந்தப் பள்ளிக்கூடக் காலத்து
சொந்தக் கூத்துகளை
எந்தக் காலத்திலும்
எப்படி மறப்போம்
பள்ளிக்கூட நண்பர்களே!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.