Thursday 5 June 2014

உன் நிலைமை என்ன ஆகும்!

நாளும் நகர
நேரமும் கரைய
நடுவழியில் நம்மாளுகள்...
நிலை தடுமாறினால்
கொஞ்சம் நில்லுங்கோவேன்...
நெஞ்சில் துணிவு வந்தால்
நடையைக் கட்டுங்கோவேன்...
பிழையெனப் பட்டால்
பின்வாங்கலாம் தானே...
சரியெனப் பட்டால்
முன்னேறலாம் தானே...
முடிவே இன்றி
இடைவழியில் நின்றால்
உன் நிலைமை என்ன ஆகும்!

2 comments:

  1. வணக்கம்
    உண்மையான வரிகள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.