Friday 6 June 2014

நேற்று, இன்று, நாளை


நேற்று என்பது
முடிந்த கதையல்ல...
வழிகாட்டும் பட்டறிவு
தந்த நாள்!
இன்று என்பது
கரையப் போகும் நாளல்ல...
மகிழ்ந்து வாழக் கிடைத்த நாளே!
நாளை என்பது
வந்த பிறகு
காணவேண்டிய நாளல்ல...
நாளையை நிறைவாக நகர்த்த
நேற்றைய பட்டறிவோடு
இன்றே திட்டமிட்டால் தான்
பொன் நாள்!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.