Saturday 28 June 2014

மிருகச் சாதி என்போமே!

சாதி உண்டென்று கூறு - அதை
உயிரெனப் போற்றிப் பாடு!
முதலில் என்னோடு பாயாமல்
வீட்டைக் கொஞ்சம் பாரு - அங்கே
ஆண் சாதி, பெண் சாதி ஆக
அப்பாவும் அம்மாவும் இருக்கிறாங்க!
நாம் எல்லோரும்
எல்லாத் தொழிலும் செய்வோம் என்றால்
நாங்களும் மனிதச் சாதியே!
மனிதச் சாதி, ஆண் சாதி, பெண் சாதி ஆக மூன்றும்
எந்நாளும் இருக்கத் தானே செய்யும்!
மூன்று சாதியை விடக் கூட இருப்பதாய்
சான்று கூறிக் காட்டிக்கொண்டு
நம்மாளுகளுக்குள்ளே
நம்மாளுகளை ஒதுக்கிவைப்போரை
மிருகச் சாதி என்போமே!

8 comments:

  1. // நம்மாளுகளுக்குள்ளே
    நம்மாளுகளை ஒதுக்கிவைப்போரை
    மிருகச் சாதி என்போமே! //

    மனதைத் தொட்ட வரிகள். மக்கள் மனதைத் தொட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. வணக்கம்

    இன்றைய சூழ் நிலையில் சாதியின் வன்கொடுமைதான் அதிகம்... இனியாவது திருந்தி வாழட்டும்..அழகிய வரிகளில் கவி.. நன்று

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. வணக்ம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. உண்மையான வரிகள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.