Monday 20 October 2014

முன்நாளும் பின்நாளும்


இன்றெல்லாம்
ஆளுக்காள்
தூண்டிவிட்டும் கூட
ஆயிரம் பொய் சொல்லி
ஒரு திருமணம் மட்டுமல்ல
பல காதல் கூட
இடம்பெறுகிறதாமே!
எல்லோரும் சேர்ந்து
காதலிக்கவும் வைப்பார்கள்
மணமுடிக்கவும் வைப்பார்கள்
கடைசியில்
நானும் மனைவியும்
காதலித்து மணமுடித்த பின்
நாம் படும் துன்பங்களை எவரறிவார்?
காதலிக்க வைப்பதும்
மணமுடிக்க வைப்பதும்
சுகமே - ஆனால்
அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது
காதலித்தவரும்
மணமுடித்தவரும்
பின்நாளில் படப்போகும் துன்பங்களை!
மாற்றாரை நம்பி
காதலிக்கவும் மணமுடிக்கவும்
இறங்குவோரே - உங்கள்
பின்நாளை நினைவூட்டி
நீங்களாகவே
நம்பிக்கையானவர்களோடு
நம்பிக்கையுடன்
காதலிக்கலாம் மணமுடிக்கலாம்...
நம்பிக்கை தான்
காதலில் வெற்றியையும்
மகிழ்வான வாழ்வையும்
எமக்குத் தருகிறது என்பதை
நாம் அறிவோமா!
மணமுடிக்க முன் காதலித்தால்
சில வேளை தோல்வி தான்
மணமுடித்த பின் காதலித்தால்
எல்லா வேளையும்
மகிழ்ச்சி அதிகம் தான்
ஆனால் - அது
சாகும் வரை தொடர்ந்தால்
முதுமை கூட இளமை ஆகலாம்!

5 comments:

  1. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும்
      என்
      இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

      Delete
  2. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும்
      என்
      இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

      Delete
  3. மிக அருமையான கவிதை !

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! இந்த நன்னாளில் மனிதநேய ஒளி உலகெங்கும் பரவட்டும் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : தேங்காய்க்குள்ள பாம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post_15.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.