Friday 17 October 2014

படிப்பது பிள்ளைகளா பெற்றோரா?


மருத்துவராகவோ
சட்டவாளராகவோ
பொறியியலாளராகவோ வரும் வண்ணம்
பிள்ளைகளுக்குத் தொல்லை கொடுப்பது
பெற்றோரின் கோழைச் செயலே!
எவரது கல்வியிலும்
எவரும் தலையிடுவது அழகல்ல...
எந்தக் கல்வி இலகுவானதோ
அந்தக் கல்வியை
எவரும் தொடரலாமே!
ஆனாலும் பாருங்கோ
கல்வியை விரும்பியவருக்கே
கல்வியானது
இலகுவாயிருக்கும் கண்டியளோ!
பிள்ளைகள் விரும்பும் கல்விக்கு
பெற்றவர்கள் இசைந்தால் போதுமே
நாளைய வழித்தோன்றல்கள்
நல்ல அறிஞர்களாகவே மின்னுவரே!

3 comments:

  1. பிள்ளைகள் விரும்பும் கல்விக்கு
    பெற்றவர்கள் இசைந்தால் போதுமே
    நாளைய வழித்தோன்றல்கள்
    நல்ல அறிஞர்களாகவே மின்னுவரே!//

    மிக மிகச் சரியே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. இருக்கிற கல்வி நிலையங்கள் எல்லாம் காசு பறிக்கும் வழிப்பறிகளாக மாறிவிட்ட காலத்தில் இவர்கள் படித்து எப்படி அறிஞர்களாக வரமுடியும்... போட்ட காசை எடுப்பதில் வல்லவராகத்தான் வரமுடியும்.

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.