Friday 8 August 2014

முல்லைப் பெரியார் அணை

நாங்கள் இந்தியர்கள்
நமக்குள்ளே தமிழ்நாடு, கேரளாவா
இடையிலே தலையை நீட்டும்
முல்லைப் பெரியார் அணை
தமிழ்நாட்டாரையும், கேரளாவாரையும்
பிரிப்பதற்கென்றே நீண்டதா?
அப்படியாயின்
தமிழ்நாட்டாரும், கேரளாவாரும்
இந்தியர்கள் இல்லையா?
மாநிலங்களுக்குள் மோதல் என்றால்
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் தான்
கொண்டாட்டம் என்பதை அறிவீரா?
பாகிஸ்தான்-ஜம்முகஸ்மீர்
சீனா-தீபெத் இந்திய எல்லை
மோதல்களைத் தூண்டவா
மாநிலங்களுக்குள் மோதல்?
முதலில்
இந்திய வல்லரசைக் கட்டியெழுப்புவோம்
இரண்டாவதாக
காவிரி நீரைப்போல எல்லா நதிகளையும்
சமபங்கீடாய்ப் பாவிக்கலாம் வாருங்களேன்!



1 comment:

  1. காவிரியும் அடிக்கடி 'தண்ணி ' காட்டிக் கொண்டுதான் இருக்கிறது !

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.