Thursday 14 August 2014

அந்த நாள் நினைவுக்கு வர

அந்த நாள் நினைவை மீட்டிய
ஒளிஒலிநாடா ஒன்று
என்னை
சில வரிகள் எழுதத் தூண்டுகிறதே!
வன்னிப் பெரும் நிலப்பரப்பில்
இடம்பெற்ற ஈற்றுப் போரில்
சிக்குண்டு விடுதலையான
என் வாழ்வையும்
மீட்டுப் பார்க்கின்றேன்!
ஒளிஒலிநாடாவில்
என்னைத் தேடிப் பாருங்கள்...
குண்டு பட்டு வீழ்ந்திருக்கலாம்...
வானவூர்திகள்
குண்டு மழை பொழிய
மண்கிடங்கில் மறைந்திருக்கலாம்...
சாவா வாழ்வா என்றவாறு
குற்றுயிராகத் துடிக்கலாம்...
உண்ண உணவின்றி
சேலைத் துணியால்  வடித்து
சேற்று நீர் குடிக்கலாம்...
சிலர் காய்ச்சிக் கொடுத்த
கஞ்சிக்கு
நீண்ட வரிசையில் காத்திருக்கலாம்...
இன்னும் எழுதலாம்;
அந்த நாள் நினைவுக்கு வர
அழுகையும் வர
எழுதுகோலும்
எழுத மறுக்கிறதே!
http://www.youtube.com/watch?v=h4sGy6jPdWM&feature=share

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.