Saturday 8 March 2014

நண்பா கொஞ்சம் நம்பு

இல்லாளுக்கு மெல்லப் பயந்தால்
எல்லோரும் சொல்லிச் சிரிப்பார்களே
பயந்தாங் கொள்ளி என்றே!

எல்லோருக்கும் முன்னே போகையிலே
இல்லாளுக்கு பின்னே நீபோனால்
உன்னை மதிக்க எவரிருப்பார்!

இல்லாளும் நீயுமாய்ப் போகையிலே
எல்லோரும் உம்மைப் பார்க்கையிலே
உன் மதிப்பு உயருமே!

இல்லாளும் இணைபிரியா நீயுமாய்
எல்லோரும் விழிபிதுங்கப் பார்க்கையிலே
தெரியுமுன் வாழ்வின் சிறப்பு!

3 comments:

  1. Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

      Delete
  2. சரியாகச் சொன்னீர்கள். நம்மவர் ஜோடிகள் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்!

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.