Saturday 15 March 2014

இணைப்பாளர் (தரகர்) சொல்கிறார்...

அழகான பிள்ளை, அறிவுள்ள அழகி,
ஆளோ மருத்துவர், எடுப்பான பெண்
சொத்துகள் ஏராளம் பணமோ தாராளம்
ஆளோ வெள்ளை உள்ளமோ சுத்தம்
"மணமகனுக்கோ ஐயமாம்..."

அழகான பொடியன், அறிவுள்ள பொடியன்,
ஆளோ மருத்துவர், எடுப்பான பொடியன்
சொத்துகள் ஏராளம் பணமோ தாராளம்
ஆளோ சிவலை உள்ளமோ சுத்தம்
"மணமகளுக்கோ ஐயமாம்..."

இரவு வேலையால உறவு முறியுமாம்
எவரைச் சொல்லி எவரை நோவது
ஐயம் தான் இருக்கும் வரை
நம்பிக்கை தான் மலரவும் மாட்டாதே
"இணைப்பாளருக்கு (தரகருக்கு) உழைப்பில்லையாம்..."

குறிப்பு: இந்நிலை மருத்துவருக்கு மட்டுமல்ல, தாதியருக்கும் இவர்களைப் போன்று இரவு வேலையாள்களுக்கும் பொருந்துமென இணைப்பாளர் (தரகர்) சொல்கிறார்.

4 comments:

  1. இரவு பணி பெருகிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும் இப்படி ஓர் ஐயமா ?

    ReplyDelete
    Replies
    1. இணைப்பாளர் (தரகர்) பொய் சொல்வாரா?
      காலமாற்றங்கள் ஐயங்களை விதைக்கலாம்.
      நம்மாளுகளுக்கு நம்பிக்கை வேண்டும்.

      Delete
  2. // ஐயம் தான் இருக்கும் வரை
    நம்பிக்கை தான் மலரவும் மாட்டாதே //

    100% உண்மை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கையில்லா உறவு
      மகிழ்வைத் தராது
      நிலவுக்குப் போனாலும்
      ஐயங்களுக்கு
      மருந்து கிட்டாதாம்

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.