Thursday 6 March 2014

ஆட்சிக்கும் வீழ்ச்சிக்கும் நம்ம வயிறே சாட்டு!

இராமன் ஆண்டால் என்ன?
சீதை ஆண்டால் என்ன?
இராவணன் ஆண்டால் என்ன?
மண்டோதரி ஆண்டால் என்ன?
கோவலன் ஆண்டால் என்ன?
கண்ணகி ஆண்டால் என்ன?
அருச்சுனன் ஆண்டால் என்ன?
பாஞ்சாலி ஆண்டால் என்ன?
நம்மட வயிறு நிறைந்தால் போதுமே!
நம்மட வயிறு கடிக்கும் போது தானே
ஆள்பவன் முகவரி தேடுகிறோமே!
நம்மட வயிறிலடித்து
தங்கள் வருவாய் நிரப்பும்
ஆள்வோருக்கு
எங்கே புரியுமிந்த உண்மை!
அடுத்த தேர்தல்
வந்த பிறகு தானே
அவர்களுக்கே புரியுமிந்த உண்மை!

2 comments:

  1. Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.