Thursday 6 March 2014

வேலைக்கு என்னைச் சேர்ப்பியளே?


எங்கெங்கெல்லாம் படிப்புத் தேவைப்படும் என்பதை நம்மாளுகள் படிக்கிறவேளை அறிவதில்லை. வேலை தேடும் வேளை தானே அறிய முடிகிறதாம்... இங்கும் ஒரு நாடகம் அப்படியே....

வேலை தேடுபவர் : தங்கட நிறுவனத்தில வேலைக்கு என்னைச் சேர்ப்பியளே?

முதலாளி : எத்தனை வரை படிச்சனியள்?

வேலை தேடுபவர் : முன் பள்ளியே முழுசாக முடிக்கேல்ல... சின்னப் பள்ளியில பத்துவரை படிக்கிறது போல நடிச்சேன்...

முதலாளி : உப்படி இங்க நடிக்கேலாது... சம்பளம் இரண்டு இலட்சத்தோட வேலையிருக்கு. ஆனால், நாம் வழங்கும் தொழில் நுட்பக் கல்வியை பத்து மாதத்தில் படிச்சு முடிச்சாத்தான்...

வேலை தேடுபவர் : படிப்புக்குக் களவு போட்டு, வேலையைத் தேடினால், அங்கேயும் படிக்கச் சொல்லுறாங்களே... கடவுளே! படிப்பைத் தருவியா? வேலையைத் தருவியா?

4 comments:

  1. Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

      Delete
  2. இந்தியாவில் மட்டும் தான் குழப்பம்னு நெனச்சியளா ? ஒலகம் முழுக்க இதே நெலம தான் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.