Monday 11 November 2013

வீட்டுக்கு வீடு வாசற்படி

நம்ம வீட்டுக் கதைகளை மூடிக்கொண்டு
நாங்க அடுத்தவர் வீட்டுக் கதைகளைப் பேசுறம்
"வீட்டுக்கு வீடு வாசற்படி.."

மாற்றான் வீட்டுப் பிள்ளையில பிழை என்கிறம்
எங்க வீட்டுப் பிள்ளை என்ன தங்கமா?
"வீட்டுக்கு வீடு வாசற்படி.."

நம்ம வீட்டு வரவைப் பார்க்கிறம்
அடுத்தவர் வீட்டுச் செலவை மதிக்கிறோமா?
"வீட்டுக்கு வீடு வாசற்படி.."


தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இதனைப் பதிவு செய்த போது:

"வீட்டுக்கு வீடு வாசற்படி தான் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கேட்டது
நம்ம பையன் குறும்பு பண்ணா அவன் சுட்டிப்பையன்
அடுத்த வீட்டு பையன் குறும்பு பண்ணா அவன் தறுதல
நம்ம பெண் அதிகம் பேசினால் அவள் கலகலப்பானவள்
அடுத்த வீட்டு பெண் அதிகம் பேசினால் அவள் வாயாடி
நாம் தப்பு பண்ணா மறைக்கப்பார்ப்போம்
அடுத்தவர் தப்பு பண்ணா குத்திக்காட்டுவோம்" என்று நண்பர் வினோத் (கன்னியாகுமரி) அவர்கள் சுட்டிக்காட்டினார்.

"நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள் என்ற உணர்வு வந்தால் வீட்டுக்கு வீடு இப்படி நிகழாது!" என்று நானும் பதிலளித்தேன்.

6 comments:

  1. வணக்கம்
    அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete
  2. அருமையான கவிதை
    படித்து மிக மகிழ்ந்தேன்
    தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கு நன்றி.

      Delete
  3. கவிதையாய் சரியாச்சொன்னீங்க அய்யா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.