Wednesday 27 November 2013

நகைச்சுவையான வழக்குகள்

இலங்கையில் ஜி.ஜி.பொன்னம்பலம் எனும் சட்டவாளர் பலராலும்
அறியப்பட்ட ஒருவராவார். இவரின் திறமையை அறிந்து பிரிட்டிஸ்
மகாராணி கூட தனது வழக்குக் பேச அழைத்திருந்தாராம் என்றால்
இவரது புலமையை எப்படி நான் மதிப்பிடுவேன். இவர்
வழக்காடுவதில் புலி வீரன். இவர் எடுத்தாளும் எந்த வழக்கும்
தோற்றதில்லையாம்.
இலங்கை அரசு ஒருமுறை தீப்பெட்டிகளின் விலையை "ஒரு
யானைத் தீப்பெட்டி ஐம்பது சதம்" என உயர்த்தியிருந்தது. ஒரு நாள்
ஒரு வணிகர் ஒரு தீப்பெட்டியை ஒரு உரூபாவுக்கு விற்றதைக்
கண்ட காவற்றுறை, அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்
தாக்கல் செய்திருந்து. உடனடியாகக் குறித்த வணிகர்
ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களை அணுகி, தனது சிக்கலை
விளக்கினார்.
வழக்கை ஆய்வு செய்யும் நாளன்று, ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள்
"ஒரு யானைத் தீப்பெட்டி ஐம்பது சதம்" என்பது அரச சட்டம், அரச
சட்டத்தை மீறி ஒரு தீப்பெட்டியை ஒரு உரூபாவுக்கு விற்றதாகக்
காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததில் தவறு
இருப்பதாகச் சுட்டிக்காட்டித் தனது கருத்தை வெளியிட்டார். நீதிபதி
அவர்களே! குற்றம் சுமத்தப்பட்ட வணிகர் விற்ற தீப்பெட்டியில்
இரண்டு யானைகள் இருப்பதால், "ஒரு யானைத் தீப்பெட்டி ஐம்பது
சதம்" படி இரண்டு யானைகள் உள்ள ஒரு தீப்பெட்டியை ஒரு
உரூபாவுக்கு விற்றதில் தவறில்லை என வழக்காட, நீதிபதியும்
வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
ஒரு பெண்ணின் கற்பை அழித்ததாக ஒருவரைக் காவற்றுறை
பிடித்துச் சிறையிலடைத்த பின்னர், அவருக்கு எதிராக நீதிமன்றில்
வழக்குத் தாக்கல் செய்திருந்து. சிறைப்பட்டவரின் உறவினர்
உடனடியாக ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களை அணுகி, தனது
சிக்கலை விளக்கினார். அவரும் "நீதிமன்றிற்கு வாரும் ஆளை
வெளியில எடுத்து விடுகிறேன்" என்று சொல்லி உறவினரை
அனுப்பி வைத்தார்.
வழக்கு நாளும் வந்தது. வழக்கு ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. நீதிபதியும் குற்றவாளி தொடர்பான சட்டவாளரை விளக்கமளிக்குமாறு அழைத்தார். ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் எழுந்து, நீதிபதி அவர்களே! வழக்குத் தொடர்பான முதலாமாளிடம் கேள்விகளைக் கேட்க அனுமதி தருமாறு கேட்டார். நீதிபதியும் அனுமதி வழங்கினார்.
"உமது கற்பை அழிக்கக் குற்றவாளி முயன்ற போது; நீர் தடுத்தீரா?
எதிர்த்தீரா? உமது கற்பைக் காக்கப் போராடினீரா? அப்படியானால்,
போராடியதிற்குச் சான்றாகப் புண்கள் அல்லது அடையாளங்கள்
ஏதுமுண்டா?" என்று ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் கேட்ட போது
முதலாமாள் நிறைவான பதில் தராமையால் "ஊசியை ஆட்டிக்
கொண்டு நூலைக் கோர்க்க முடியாதது" போல முதலாமாளும்
குற்றவாளியும் விரும்பியோ இணங்கியோ கூடியிருக்க வேண்டும்.
ஆகையால், என் பக்கத்தாள் குற்றவாளியல்ல எனச்
சான்றுப்படுத்த(நிரூபிக்க) நீதிபதியும் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
இதில் என்ன நகைச்சுவை என்றால், நான் பிறக்க முன்னரே
இவ்விரு வழக்குகளும் நடந்தனவாம். சிறந்த வழக்குக் கருத்து
மோதல்களுக்கு எடுத்துக் காட்டாக பெரியவர்கள் சிலர் சொன்னதை,
நான் காதில போட்ட அளவுக்குத் தொகுத்துத் தந்துள்ளேன்.

தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இதனைப் பதிவு செய்த போது:
நண்பர் வினோத் (கன்னியாகுமரி): நகைச்சுவையாக இருந்தாலும் நீதியை நிலைநாட்ட வேண்டிய இந்த வழக்காளர் குற்றத்திற்கு ஆதரவாக வாதாடியிருக்கிறாரே!

என் பதில்: உங்கள் கருத்து மிகவும் சரி. குறித்த வழக்காளர்/சட்டவாளர் தனது திறமையால் பல குற்றவாளிகளைக் காப்பாற்றியது தவறு தான். இவரது வழக்காடும் திறனை நினைவூட்டலாம்.

சட்டம் படிக்கின்றவர்கள் இவரைப் போன்றவர்களின் வழக்காடும் திறனைப் பொறுக்கித் தமது புலமையைப் பெருக்கலாமென நினைக்கின்றேன்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.