Saturday 11 July 2015

அழியுமினம் தமிழினமே!


இந்தியா, இலங்கை இரண்டுமே
ஒரே நிலப்பரப்பாயிருந்த
குமரிக்(லெமூரியா)கண்டத்தில்
சைவமும் தமிழும் தான்
தொடக்கத்தில் காணப்பட்டதாமே!
இந்தியா, இலங்கை இரண்டும்
கடற்கோளால்(சுனாமியால்) துண்டுபட்டும்
சைவமும் தமிழும் தான்
மங்காமல் பேணப்பட்டதாமே!
சித்தார்த்த(புத்த)னின்
நல் வழிகாட்டலை விரும்பியே
சோழ மன்னன் ஆட்சியில் தான்
இந்தியாவில் தமிழர்
பௌத்தத்தைக் கடைப்பிடிக்க முயன்றனரே!
குமரிக்(லெமூரியா)கண்டமீன்ற
இந்தியா அண்ணன் என்றால்
இலங்கை தம்பி போல
இலங்கையரும்
பௌத்தத்தைக் கடைப்பிடித்தனரே!
இந்தியாவில் ஆரியம்
தான் தோன்றித்தனமாக நுழைய
பௌத்தத்தை விரும்பியோர்
சிங்களத்தாலே தான்
பௌத்தத்தைப் பின்பற்ற வேண்டியுமிருந்ததே!
அண்ணன் மாறினால்
தம்பி என்ன செய்வான்?
இலங்கையிலும்
சிங்களத்தாலே தான்
தமிழர் பௌத்தத்தைப் பின்பற்றலாயினரே!
இலங்கையில்
சிங்களத்தாலே பௌத்தத்தைப் பின்பற்றிய
தமிழர் சிங்களவரானது போல
இந்தியாவிலும் பாரும்
தமிழிலிருந்து பிரிந்த மொழிகளால் ஆன
மலையாளி, தெலுங்கர், கன்னடத்தார் என
தமிழர் மாறிவிட்டனர் போலும்!
இன்றைய நிலையில்
இலங்கையில் தமிழர்
சிங்களவராலும்
இந்தியாவில் தமிழர்
மலையாளியாலும்
தெலுங்கராலும் கன்னடத்தாராலும்
துன்புறுவதைப் பார்த்தால்
தமிழராலே
தமிழர் அழிவதாகத் தெரிகிறதே!
நான் நினைக்கின்றேன்
உலகெங்கும்
தமிழர் தான் வாழ்ந்திருப்பார்கள்...
உலகத்தையே
தமிழர் தான் ஆண்டிருப்பார்கள்...
எப்படியிருந்தும்
மதம் மாறியோ மொழி மாறியோ
தமிழரே தமிழராலே அழிந்து
தனக்கென்று
நாடு ஒன்று இன்றியே
அழியுமினம் தமிழினமாச்சே!

16 comments:

  1. அவ்வாறு நடக்காது (என்று வேண்டுவோம்...)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. ஒற்றுமையும் தியாகமும் இல்லாத இனம்அழியட்டும்..

    ReplyDelete
    Replies
    1. ஒற்றுமையும் தியாகமும் இல்லாத இனம்
      அழியட்டும் என்று விட்டுவிட முடியாது
      ஒற்றுமையையும் தியாகத்தையும்
      உணர்த்தி ஊட்டிச் சாகவிடாது வாழவைக்க
      நாம் எல்லோரும் முயற்சி எடுப்போம்!

      Delete
  3. கவலை தரும் நிலைமை.
    மாற வேண்டும்.
    தமிழ் நிலைக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. வணக்கம்

    தரணியில் வாழும்....எம்தமிழ் இனம் அழியாது....அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அனபுடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. வணக்கம்,
    ஆதி மனிதன் இந்தியன்
    அதுவும்
    தமிழன்
    என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்,
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்! உண்மை! - அதனையே
      நானும்
      உலகுக்கு உணர்த்த விரும்புகிறேன்!
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. ஈழம் அழியவுமில்லை
    இலங்கை வென்றிடவுமில்லை
    இன ஒற்றுமை
    தமிழனிடத்திலில்லை
    சாதி ஒற்றுமை
    சவக்குழிக்கின்னும்
    போகவேயில்லை
    பார் முழுதும்
    பார்வை குருடாக
    தமிழன் நீதான்
    தவமிருப்பது சரியோ,,,
    இலங்கை வென்று
    ஈழம் பெறுவோம்
    வா!!! தமிழா
    இனப்பற்றோடு,,,

    ReplyDelete
    Replies
    1. உணர்ச்சி மிக்க - தங்கள்
      உள்ளக்குமுறலை உணருகிறேன்...
      ஈழம், இலங்கை, இனமோதல்
      எல்லாவற்றுக்குள்ளும் சிக்கி வாழும்
      ஒருவர் என்ற வகையில்...
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. கவலை தரும் நிலை... இது தொடர வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  8. அருமையான வரிகள் நண்பரே! தமிழினம் அழியாது என்று நம்புவோம்! தமிழும் அழியாது! நிலைத்திருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.