Saturday 20 June 2015

உங்களுக்கு மூளை வேலை செய்கிறதா?


ஒருவன்: மனிதனுக்கு எப்ப மூளை வேலை செய்யும்?
ஒருவள்: இது கூடத் தெரியாதா? - அது
         மனிதனுக்கு
         வயிறு கடிக்கும் போது தான்...

ஒருவன்: மனிதனுக்கு எப்ப மூளை வேலை செய்யாது?
ஒருவள்: இது கூடத் தெரியாதா? - அது
         மூக்குமுட்ட உண்ட மனிதன்
         நீட்டி நிமிர்ந்து படுக்கும் போது தான்...
         இல்லையென்றால் பாரும்
         மூக்குமுட்டக் (மது) குடித்த மனிதன்
         தன்நிலை இழந்து
         தெருவிலே விழுந்து கிடக்கையிலே தான்...
         இல்லையென்றால் பாரும்
         கள்ளக் களவாக
         வாலை ஒருவளுடன் வீழ்ந்து கிடக்கையிலே தான்...
         இல்லையென்றால் பாரும்
         கள்ளக் களவாக
         காளை ஒருவனுடன் வீழ்ந்து கிடக்கையிலே தான்...

16 comments:

  1. இது தெரியாமப் போச்சே...!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. அப்படியா? இந்த விடயம் கூடத் தெரியாது இருந்திருக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. அடடடா....இப்படியெல்லாம் இருக்கிறது தெரியலையே....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. நல்லா வேலை செய்கிறது மூளை ,,,,,,,, அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. அடடே.... ரசித்தேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. நல்ல கவிதை
    புதிய சொல் வாலை..
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. காளை (ஆண்), வாலை (பெண்) எல்லாம்
      பாவரசர் கண்ணதாசன் பாவித்த சொல்களே!

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. ஒருவன், ஒருத்தி என்பது தானே வழக்கு!

    ReplyDelete
    Replies
    1. ஒருவன், ஒருத்தி என்பது தானே வழக்கு! - அந்த
      வழக்கை மீறுவோர் எல்லோருக்கும் - சொந்த
      மூளை வேலை செய்யாமல் இருக்கலாம்!

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  8. அட இப்படியுமா! அருமை! வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.