Tuesday 30 September 2014
அழைப்பு விடுக்கின்றேன்!
எனக்கும்
என் மனைவிக்கும் இடையே
அடிக்கடி மோதல் மூண்டால்
"மனைவியைத் தெரிவு செய்வதில்
தவறிழைத்தவர்
சாவைத் தெரிவு செய்வதில்
வெற்றி பெறுகிறான்" என்று சொன்ன
பாவரசர் கண்ணதாசன் தான்
என் உள்ளத்தில் நடமாடுவார்!
அட தம்பி, தங்கைகளே...
வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில்
மறந்தும் தவறிழைக்காதீர்...
பின் நாளில் மறக்காமல்
மகிழ்வான வாழ்வை இழக்காமல்
இருக்கத்தானே
படுகிழவன் நான்
விடுக்கின்றேன் அழைப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல அறிவுரை
ReplyDeleteஉணர்வுகளுக்கு மட்டும் இடம் கொடுக்கமாமல்
நன்மை தீமை, ஒற்றுமை வேற்றுமை போன்றவற்றை
அவதானித்து தாங்களே
வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வது நல்லது
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்பர்...
ReplyDeleteசிலநேரங்களில் மனிதன் கெடுத்தவரம் ஆகி விடுகிறதே,,,,
மிகச் சரியே!
Deleteநண்பரே! மிக நல்ல அறிவுரை. ஆனால் நமக்குத் தெரிந்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டால்தானே! பல குடும்பங்களில் மறுக்கப்படுகின்றதே!
ReplyDeleteஉண்மை தான் அறிஞரே!
Deleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.
ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே... அழுவதும் பெண்ணாலே..நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
கரப்பான் பூச்சிக்கு பயப்பட்ட பெண் என்று கட்டிக் கிட்டால் ,நம்மை பயமுறுத்த ஆரம்பித்து விடுகிறாளே ,ஒரு வேளை தலைஎழுத்து என்பது மாறாது என்பது இதுதானோ ?)
ReplyDeleteதெளிந்து செய்தாலும்
ReplyDeleteதெரியும் விதி பின்னர் தான்
சகோதர சகோதரிகள்
இறைவன் துணை நாடல் வேண்டும் இனிது.