Friday 18 October 2013

காலம்

தெருவில தண்டற் சோறு எடுக்கையிலே
"பணம் இல்லாட்டி
பிணத்தைக் கூட நாயும் தேடாது" என்பதை
நேற்றுப் பட்டறிந்தேன்.
இன்று
நல்வாய்ப்புப் பரிசாக
என் கைக்கு 500 இலட்சங்கள்!
உறவுகளின்றித் தெருவில கிடக்கையில
காறித் துப்பியவர்களும்
ஒதுக்கி வைத்தவர்களும்
கழித்து விட்டவர்களும்
பரிசோ கைக்கெட்ட முன்னர்
என் வீட்டுக்குப் படை திரண்டுவிட்டனர்!
ஊர் நாய்கள் என் தெருவில் குரைக்க
நாடறிந்த செய்தி இது!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.