Friday, 18 October 2013

சிலருக்குத் தான்


நித்திரை வந்தால் பாய் வேண்டாம்
பசி வந்தால் கறி வேண்டாம்
சிலருக்குத் தான்...
தலையிடியும் காய்ச்சலும்
தனக்கு வந்த பின்னர்
சொன்னவர்களின் உண்மை இது!

கடன் பற்றிய துளிப்பாக்கள்(ஹைக்கூக்கள்)

வாங்கேக்க இனிப்பது கொடுக்கேக்க புளிக்கிறது
மகிழ்வாய் வேண்டிக் கொடுக்கேலாட்டிச் சாகிறது
"கடன்காரன் கேட்கையில்..."

கடன் வேண்டிக் களியாட்டம் போடலாம்
கடன்காரன் நெருக்கினால் தான் திண்டாட்டம்
"உறவுக்குப் பகை கடன்!"


கை வளம்(கை விஷேடம்)

ஒருவர் : புத்தாண்டு காலத்தில் என்ன ஓய்வில்லாத வேலை?

மற்றவர்: இன்றைக்கு உழைத்தால் கோடி பணம் ஈட்டலாம்!

முதலாமாள்: ஏப்படி? எப்படி?

இரண்டாமாள்: கை வளம் நேரம் பார்த்து வீட்டுக்கு வீடு கையேந்தப் போவதாலே...

கை வளம்(கை விஷேடம்)


சிலரது கையால் சிறு தொகைப் பணம் வேண்டி காசுப் பெட்டிக்குள் வைத்த பின்னர், வணிகமோ கொடுக்கல் வாங்கலோ எல்லோரும் செய்வது வழக்கம். இதற்குப் புத்தாண்டு பிறந்த பின்னர் சிறப்பு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். இச் சிறப்பு நேரத்தில் பணமுதலைகள், ஏழை முகங்கள் பாராது தங்கள் விருப்புக்குரிய உள்ளங்களிடம் பலர் கையேந்தி நிற்பர். "எவர் கையால் முதற் பணம் கிடைக்கிறதோ, அவரது கைவளம் பணக்காரனாக்கும்" என்ற நம்பிக்கையிலேயே கை வளம்(கை விஷேடம்) நடைமுறை புத்தாண்டு காலத்தில் பின்பற்றப்படுகிறது.

வழுக்கை

பிஞ்சு : வழுக்கை வலுப்பட சாவு நெருங்குது போல...

முத்தல்: எல்லாம் பொய்யே!

பிஞ்சு : எப்படி?

முத்தல்: சேற்றிலே வழுக்கையிலே விழுந்தால் எழும்ப முடியாத சுள்ளிகள், நீங்கள் தானே!

காலம்

தெருவில தண்டற் சோறு எடுக்கையிலே
"பணம் இல்லாட்டி
பிணத்தைக் கூட நாயும் தேடாது" என்பதை
நேற்றுப் பட்டறிந்தேன்.
இன்று
நல்வாய்ப்புப் பரிசாக
என் கைக்கு 500 இலட்சங்கள்!
உறவுகளின்றித் தெருவில கிடக்கையில
காறித் துப்பியவர்களும்
ஒதுக்கி வைத்தவர்களும்
கழித்து விட்டவர்களும்
பரிசோ கைக்கெட்ட முன்னர்
என் வீட்டுக்குப் படை திரண்டுவிட்டனர்!
ஊர் நாய்கள் என் தெருவில் குரைக்க
நாடறிந்த செய்தி இது!

Thursday, 17 October 2013

இணைய உலகில் உலாவர இணைவோம்


உலக வலம் இலகுவாயிற்று
இணைய வலம் உலகமாயிற்று
Chareles Babbage, Von Newmann
கணினியின் இரு கண்களாயினரோ
ARPANET, NSFNET இரு சாராரும்
இணையத்தின் பெற்றோராயினரோ
Internet - 2 தோன்றிவிட்டதாமே!
ஓ! இணையத்தின் (Internet - 2) வாரிசுவாகவோ!
எனது பெற்றோருக்கு
கண்ணுக்கெட்டாத கணினியில்
எனது பிள்ளைகள்
இணையமென்று கண்ணைக் கெடுக்குதுகள்...
அடடே! Filter Glass இருக்குத்தானே!
அது உங்க நினைப்பு!
பெத்தவங்க நினைப்பெல்லாம்
பிள்ளைகள் Internet Cafe இல் என்றுதானே!
காலமிப்படி ஓடிக்கொண்டிருக்க
எம்மை நாமே மூடிக்கொள்ளலாமோ?
காலம் கடந்தேனும் கணினியைக் கற்போம்
இணையத்தில் இனியதை இனங்காண்போம்
காசோடு நேரம் விரையமென்றா
முடங்கிக் கொள்கிறீர்கள்?
உங்கள் கவலையை விட்டுவிடுங்கள்
இதோ Internet - 2!
இணைய வலம் கண்ணுக்கெட்டியதும்
நுனி விரலில் உலகம் உருளுமே!

குறிப்பு:- 2000 ஆண்டின் பின் இணையம் மேம்படுத்தப்படுகிறது என்ற செய்தி அறிந்ததும் எழுதியது. இப்பதிவு 2004 இல் ஈழத்து வன்னியில் இருந்து வெளியான அறிவுக்கதிர் சஞ்சிகையில் வெளிவந்தது.

Sunday, 13 October 2013

எனது எழுதுகோல்


எழுதுகோல் ஒன்று எனக்கிருந்தது
அதன் விலை
ஒரே ஒரு சதம் தான்!
அந்த எழுதுகோல்
எனது உற்ற நண்பர் - அது
இலக்கியங்களை எழுத உதவுதே!
எழுதுகோல் ஒன்றைக் கண்டதும்
என் உள்ளத்தில் எழுந்த
உண்மையைப் பகிர முடிந்ததே!
என் உயிர் இருக்கும் வரை
எழுதுவேன்...
எழுதும் வேளையில்...
எழுதுகோல்கள் நினைவுக்கு வருமே!


Saturday, 5 October 2013

நம்மாளுகளைப் பார்த்து ஒழியும் கடவுள்...


பள்ளியில் கற்றது
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
நம்மாளுகள் சொல்வது
"அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்"
கண் கண்ட சான்றுகள்
"பிள்ளைகள் தம் பெற்றோரை
முதியோர் இல்லங்களில் ஒப்படைத்தல்"
அடிக்கடி நினைவில் தோன்றுவது
"காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது"
"முதுமையிலும் இளமை" இல்லத்தில்
பிள்ளைகள் தம் பெற்றோரை ஒப்படைக்கையிலே
"எங்களை - இங்கு
தள்ளி விட்ட குற்றத்திற்கு
உங்கட பிள்ளைகள்
உங்களுக்கு ஒறுப்புத் தந்தனரோ" என
பழம் பழசுகள் சொல்லிச் சிரித்தனர்!
இந்நிகழ்வுகளையோ
இந்நிலைமைகளையோ
பார்த்தால் அழவேண்டி வருமென அஞ்சித்தான்
எல்லோரையும் படைத்த ஆண்டவரே
மறைந்து நின்று பார்க்கிறார் போலும்!

செய்தியும் விளம்பரமும்


ஈருளி (மிதிவண்டி/ bicyle) ஓட்டிகளை
தெருவெங்கும் காண்பது அரிது
ஏனென்று எண்ணிப்பார்க்கையிலே
விரைவாக வேலைக்குப் போகவே
உந்துருளி (Motorbike) ஓட்டக்காரர் மலிவு
ஆனால்,
அரசுக்குத் தான் வருவாய்
அப்படியிருப்பினும்
விபத்துகளில் சிக்கியோர் சாவு!



உந்துருளி (Discovery) ஒன்றிற்கான
தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றிலே
"இது ஓடாது; பறக்கும்" என
உறைப்பான வரியிலே (Dead Line) சொல்லி
நமக்கு விருப்பேற்றி
உந்துருளியை வேண்டு வேண்டென
விளம்பரம் செய்யக் கண்டேன்!

வருவாய்க்காகக் கத்திய
விளம்பரதாரர் பேச்சை நம்பி வேண்டிய
உந்துருளியை ஓடும் போது
"இது ஓடாதே; பறக்கிறதே" என
நம்மாளுகளும் ஓடுவதனாலேயே
மோதல்களும் (Accident) சாவுகளும் (Die)
நாட்டிலே மலிந்து போயிற்றே!



முதன்நிலைச் செய்தி ஏடு ஒன்றிலே
முற்பக்கச் செய்தீயாக
"பல்சர் (Pulsar) பறந்தது; உயிர் பிரிந்தது" என
போட்ட தலைப்பின் கீழே
"ஒருவர் சாவு - அடுத்தவர்
நிலைமை கவலைக்கிடம்" என
போடப்பட்டிருந்த செய்தியே
நாட்டு நடப்பாயிற்றே!