Wednesday 26 August 2015

புதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02

http://www.ypvnpubs.com/

எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.
தூய தமிழ் பேணும் பணி
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்
உளநலப் பேணுகைப் பணி
யாழ்பாவாணனின் எழுத்துகள்
யாழ்பாவாணன் வெளியீட்டகம்
நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்
இவ்வாறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் உங்கள் யாழ்பாவாணனின் புதிய பதிவுகள் யாவும் இப்புதிய தளத்திலேயே இடம்பெறும். எனவே, இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.

http://www.ypvnpubs.com/

இப்புதிய தளத்தில் 45 பக்கங்களும் (Pages) 45 பதிவு வகைகளும் (Categories) பேணப்படுகிறது.
இப்புதிய தளத்தில் ஒவ்வொரு திங்கள் காலையிலும் வியாழன் காலையிலும் புதிய பதிவுகளைத் தர எண்ணியுள்ளேன்.
எனவே, பழைய வலைப்பூக்களுக்குத் தந்த ஒத்துழைப்பை இப்புதிய வலைப்பூவிற்கும் தருவீர்களென நம்புகின்றேன்.

http://www.ypvnpubs.com/

Tuesday 28 July 2015

அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?

அறிஞர் அப்துல்கலாம் அவர்களை
அறியாத எவரும் இங்கில்லை...
அறிஞர் அப்துல்கலாம் அறிந்த
அறிவியலைத் தான் அறிந்தே
ஒவ்வொரு இந்தியன் மட்டுமல்ல
ஒவ்வொரு தமிழனும் முயன்றே
அப்துல்கலாம் போன்று அறிஞராகணும் - அதுவே
அறிஞர் அப்துல்கலாமிற்கு - நாம்
செய்யப் போகின்ற பணியென்பேன்! - ஆம்
என்றே அவரே நெறிப்படுத்துகிறார் - பின்
என்றே திறமையை வளர்க்க
வழிகாட்டிக் கற்கத் தூண்டுகிறாரே!
அப்துல்கலாம் போன்று அறிஞராக
எண்ணிய ஒவ்வொரு உறவும்
என்றே சுட்டிக் காட்டுவது
தன்னம்பிக்கை இருந்தால் - நீ
தலைநிமிர்ந்து நடைபோடு என்றே! - நீயே
என்று எண்ணிக்கொண்டால் - என்றும்
அப்துல்கலாம் போன்று அறிஞராகலாம்
என்பதைக் கருத்திலெடு என்கிறாரே!
அறிஞர் அப்துல்கலாமிற்கு;
நாம் என்ன செய்யப் போகிறோம்?
என்றால் துயர் பகிர்வதல்ல;
அப்துல்கலாம் போன்று அறிஞராகணும்!

படங்கள்: கூகிளில் தேடித் திரட்டியவை

Sunday 26 July 2015

குடித்த பின் விளைவு

குடிகாரன் பேச்சுப் பிழை என்றால்
பார்வையும் அல்லவா பிழைக்கிறதே
"குடி மயக்கியது ஓ!"

குடிகாரியின் பார்வை பிழை என்றால்
தெருவழியே வயிற்றால அடிக்கிறாளே
"குடி கலக்கியது ஓ!"

Thursday 23 July 2015

சுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு


கட கட வென கொத்துற சாப்பாடு
ஆவ் ஆவ் வென வறுக்கிற சாப்பாடு
ஊ ஊ வென உறிஞ்சிற சாப்பாடு
சூ சூ வென சூப்பிற சாப்பாடு
சா சா வென நக்கிற சாப்பாடு
என்றெல்லாம் பலரை இழுக்கிற
தெருத் தெருவாய்
சுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு
என்றவாறு பல உணவகங்கள் இருக்க
ஆங்கொன்றில்
நம்மாளு மூக்குமுட்ட உண்டாராம்...
அடுத்தநாளு
வயிற்றால அடிக்க... வயிற்றால அடிக்க...
மருத்துவரை நாடினாராம்!
மருத்துவரும்
நம்மாளின் நாடி பிடித்துப் போட்டு
நல்ல பேதி  குடித்தாச்சு
இன்னும் நாலு தடவை
வயிற்றால அடிக்கலாம் - அதன் பின்
'அண்ணா' கோப்பி பருக
அல்லது
'அறிவு' தேன் பருக
நின்று விடும் - ஆனால்
நீண்ட ஆயுளுக்குப் பாரும்
ஆறு மாதத்துக்கு ஒருக்கால்
மருத்துவரை நாடி
கடுக்காய்ப் பேதி குடிக்கவேணும்
முடியாவிட்டால்
ஆறு மாதத்துக்கு ஒருக்கால்
வயிற்றால அடிக்க வைக்கிற
சாப்பாடு விக்கிற உணவகங்களில
மூக்குமுட்ட உண்டு களிக்கலாமே!

*பேதி மருந்து - வயிற்றால அடிக்க வைக்கும் மருந்து

Saturday 11 July 2015

அழியுமினம் தமிழினமே!


இந்தியா, இலங்கை இரண்டுமே
ஒரே நிலப்பரப்பாயிருந்த
குமரிக்(லெமூரியா)கண்டத்தில்
சைவமும் தமிழும் தான்
தொடக்கத்தில் காணப்பட்டதாமே!
இந்தியா, இலங்கை இரண்டும்
கடற்கோளால்(சுனாமியால்) துண்டுபட்டும்
சைவமும் தமிழும் தான்
மங்காமல் பேணப்பட்டதாமே!
சித்தார்த்த(புத்த)னின்
நல் வழிகாட்டலை விரும்பியே
சோழ மன்னன் ஆட்சியில் தான்
இந்தியாவில் தமிழர்
பௌத்தத்தைக் கடைப்பிடிக்க முயன்றனரே!
குமரிக்(லெமூரியா)கண்டமீன்ற
இந்தியா அண்ணன் என்றால்
இலங்கை தம்பி போல
இலங்கையரும்
பௌத்தத்தைக் கடைப்பிடித்தனரே!
இந்தியாவில் ஆரியம்
தான் தோன்றித்தனமாக நுழைய
பௌத்தத்தை விரும்பியோர்
சிங்களத்தாலே தான்
பௌத்தத்தைப் பின்பற்ற வேண்டியுமிருந்ததே!
அண்ணன் மாறினால்
தம்பி என்ன செய்வான்?
இலங்கையிலும்
சிங்களத்தாலே தான்
தமிழர் பௌத்தத்தைப் பின்பற்றலாயினரே!
இலங்கையில்
சிங்களத்தாலே பௌத்தத்தைப் பின்பற்றிய
தமிழர் சிங்களவரானது போல
இந்தியாவிலும் பாரும்
தமிழிலிருந்து பிரிந்த மொழிகளால் ஆன
மலையாளி, தெலுங்கர், கன்னடத்தார் என
தமிழர் மாறிவிட்டனர் போலும்!
இன்றைய நிலையில்
இலங்கையில் தமிழர்
சிங்களவராலும்
இந்தியாவில் தமிழர்
மலையாளியாலும்
தெலுங்கராலும் கன்னடத்தாராலும்
துன்புறுவதைப் பார்த்தால்
தமிழராலே
தமிழர் அழிவதாகத் தெரிகிறதே!
நான் நினைக்கின்றேன்
உலகெங்கும்
தமிழர் தான் வாழ்ந்திருப்பார்கள்...
உலகத்தையே
தமிழர் தான் ஆண்டிருப்பார்கள்...
எப்படியிருந்தும்
மதம் மாறியோ மொழி மாறியோ
தமிழரே தமிழராலே அழிந்து
தனக்கென்று
நாடு ஒன்று இன்றியே
அழியுமினம் தமிழினமாச்சே!

முயற்சி செய்


"முடியாது" என்பது
மனித அகரமுதலியில்
இருக்க முடியாது - அப்ப
முடியும் என முடிந்த வரை
முயற்சி செய்!

Friday 3 July 2015

முகநூல் வழிக் கொள்ளை!

வெடிப்பதோ படித்தவர்/நல்லவர் போல
அடிப்பதோ பகற்கொள்ளை பாரும்...
இப்படித் தான் இணையத்தில் உலாவி
எப்படித் தான் ஏமாறுவார் பாரும்...

இந்தக் கவிதைக்கான பாடுபொருள்
அந்தத் தளத்தில் இருக்கே - அதன்
இணைப்பு இங்கே பாரும்...
சொடுக்கியே அங்கே படியும்!
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/07/Cheating-Through-Facebook.html


மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) பற்றியறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
http://paapunaya.blogspot.com/2015/07/blog-post.html

Saturday 20 June 2015

உங்களுக்கு மூளை வேலை செய்கிறதா?


ஒருவன்: மனிதனுக்கு எப்ப மூளை வேலை செய்யும்?
ஒருவள்: இது கூடத் தெரியாதா? - அது
         மனிதனுக்கு
         வயிறு கடிக்கும் போது தான்...

ஒருவன்: மனிதனுக்கு எப்ப மூளை வேலை செய்யாது?
ஒருவள்: இது கூடத் தெரியாதா? - அது
         மூக்குமுட்ட உண்ட மனிதன்
         நீட்டி நிமிர்ந்து படுக்கும் போது தான்...
         இல்லையென்றால் பாரும்
         மூக்குமுட்டக் (மது) குடித்த மனிதன்
         தன்நிலை இழந்து
         தெருவிலே விழுந்து கிடக்கையிலே தான்...
         இல்லையென்றால் பாரும்
         கள்ளக் களவாக
         வாலை ஒருவளுடன் வீழ்ந்து கிடக்கையிலே தான்...
         இல்லையென்றால் பாரும்
         கள்ளக் களவாக
         காளை ஒருவனுடன் வீழ்ந்து கிடக்கையிலே தான்...

Saturday 13 June 2015

எனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 03

சென்ற பதிவில் (http://eluththugal.blogspot.com/2015/05/2015-02.html)
"இயங்குநிலைப் (Animation) படத்தை வைத்து மதுரையில் நான் கண்ட மலையை அடையாளப்படுத்தி விட்டீர்களா? அந்த மலை பற்றிய தங்களுக்குத் தெரிந்த தகவலைப் பின்னூட்டமாகத் தாருங்களேன்." என்றெழுதியதற்கு ஒத்தக்கடைக்கு அப்பால் "ஒற்றைக் கல்லாலான ஆ(யா)னை மலைதான் அது" என்றும் ஆனை மலை பற்றி அறிஞர் கரந்தை ஜெயக்குமார் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார் (http://karanthaijayakumar.blogspot.com/2015/04/blog-post.html) என்றும் அறிஞர்கள் பகிர்ந்தனர்.

நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் செல்லப்பிள்ளைகளைப் பாருங்கள்...

விடிந்தால் தைப்பூசப் பெருநாள்! விடியுமுன்னரே (நடு இரவில்) நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் வீட்டிற்குச் சென்றாச்சு. அங்கே இறங்கியதும் சோதிப் பெருவிழா காலை ஆறரை மணிக்கு முதாலாவது சோதிப் பேரொளி பார்க்க வேண்டும் குளித்து முழுகி வேட்டியைக் கட்டி வள்ளலார் கோவிலில் காலை வைத்தாச்சு. அங்கே இலட்சக் கணக்கான வள்ளலார் விரும்பிகள் (பக்தர்கள்) வந்திருந்தனர். 

வள்ளலார் நிறுவிய சத்திய ஞான திருச்சபைக்கு நுழையும் வழியைப் பாருங்கள்.

தொடரும் சோதி வழிபாட்டில் சோதிப் பேரொளி தெரிகிறது என்று எல்லோரும் வள்ளலார் கூறிய அருள் மொழியான (மந்திரமான) "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி" எனச்சொல்லி சோதிப் பேரொளியைப் பார்க்கத் தலையை உயர்த்தினர். என்னை (நானோ கட்டையன்) நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) தூக்கிச் சோதிப் பேரொளியைக் காட்டினார். நானும் அவ்வாறே அவரைத் தூக்கிக் காட்டினேன்.

அதிகாலைச் சோதிப் பேரொளி பார்க்கக் கிடைத்தது பெரும்பேறு என்று வழிபாட்டை முடித்துக் கொண்டு வீதியை வலம் வரச் சென்றோம். ஞானசபை ஊடாக அன்னதான அறிவிப்பு; வீதி வழியே  "சாப்பிடுங்கோ... சாப்பிடுங்கோ..." என்று பொங்கல், சாதம் எனக் கொடுத்தார்கள். ஆங்காங்கே ஆட்டுக்கால் சூப்பு என்று தந்தார்கள். அதாவது ஆட்டுக்கால் போன்ற வேர், மற்றும் சித்த மருத்துவ மூலிகை கலந்த குடிநீர் தான், அது! அதனைப் பருகினால் உடலிலுள்ள பல நோய்கள் நீங்கும் என்று அங்கு குழுமிய அறிஞர்கள் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு 2015 மாசி தமிழகம் வந்து வடலூர் வள்ளலார் நினைவும் தைப்பூசப் பெருநாள் பற்றியும் எனது எண்ணங்களைப் பகிர்ந்தாலும் எனக்கு நிறைவு இல்லை. ஆகையால், கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி மேலதீகத் தகவலைப் பெறலாம்.

வள்ளலார் சித்தி பெற்ற இடமான வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பத்தில், திரு அறை தரிசனம் இடம்பெறுகிறது. அங்கும் சென்றிருந்தேன். திரு அறை தரிசனம் கடந்து ஓர் நீரோடை இருந்தது. வள்ளலார் அவர்கள் தனது பெருவிரலால் கீறியதால் உருவானதாகச் சொல்லப்படுகிறது. அங்கெடுத்த படங்களே கீழே தரப்படுகிறது.


பிறிதொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
(தொடரும்)




Tuesday 2 June 2015

இலங்கையில் பௌத்தம் பரவுகிறது



பௌத்தத்தின் குறியீடு
அரச மர நிழலல்ல...
வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டு
பட்டறிவால் வெளிப்படுத்திய
சித்தார்த்தனின்(புத்தரின்) வழிகாட்டலே!
புத்தரின் வழிகாட்டலை நம்பியே
உலகத்தார் பௌத்தத்தை விரும்பினர்!
'உயிர்களிடத்தே அன்பு காட்டு'
'உயிர்களைக் கொல்லாதே'
'தவறு செய்தால் மன்னிப்பு வழங்கு'
என்றெல்லாம்
எத்தனையோ புத்தர் சொன்னாலும்
'தமிழரிடம் அன்பு காட்டாதே'
'தமிழரைக் கொல்லு'
'தமிழருக்கு மன்னிப்பு வழங்காதே'
என்றெல்லாம்
இலங்கைப் பௌத்த கோவில்களில்
பிக்குமார் சிங்களவருக்கு வழிகாட்ட
புத்தர் செந்நீர்க் கண்ணீர் வடிக்க
சிங்களவர் தமிழரை அழிக்க
இலங்கையில் பௌத்தம் பரவுகிறதே!
பிந்திக் கிடைத்த தகவலின் படி
கத்தோலிக்கக் கோவில்களை...
இஸ்லாமியக் கோவில்களை...
இந்துக் கோவில்களை...
இடித்துடைத்து
புத்தர் சிலைகளை விதைக்க
இலங்கையில் பௌத்தம் பரவுகிறதே!
இறுதியாகக் கிடைத்த செய்திகளின் படி
அரச மர நிழற் பார்த்து இருக்கும்
பிள்ளையாரைப் பிடுங்கி எறிந்து விட்டு
அரச மரம் இருக்கும் இடமெங்கும் 
புத்தரை நட்டு
பௌத்தத்தின் குறியீடு
அரச மரமெனச் சுட்டிக் காட்டி
இலங்கையில் பௌத்தம் பரவுகிறதே!