மணிமேகலை என்பவர் யார் என்று தெரியுமா? சுயநல, இல்லற வாழ்வை விட்டு ஒதுங்கி பொதுநல வாழ்வில் ஈடுபட்டவள். அவரது பெற்றோர் யாரென்று தெரியுமா? கீழ்வரும் இணையர்களில் எவராக இருப்பர்?
1. மாதவி-கோவலன்
2. கண்ணகி-கோவலன்
Showing posts with label கேள்வி அம்புகள். Show all posts
Showing posts with label கேள்வி அம்புகள். Show all posts
Monday, 19 January 2015
Tuesday, 6 January 2015
தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா? என்பது பதிவர்கள் பக்கமாய்க் கிளம்பும் கேள்விக்கணை இதுதான். உழவர் பெருநாள், ஞாயிற்றுப் பொங்கள், தமிழர் புத்தாண்டு எனப் பல சிறப்புக்களைக் கொண்ட தைப்பொங்கலே முதல் தேவை! அப்படியெனின் சிறுகதைப் போட்டியை என்ன செய்யலாம்? இரண்டாம் இடத்தில் வைக்கலாம். ஆயினும் முதலாம் இடத்துத் தைப்பொங்கலைப் பற்றி உலகம் எங்கும் படிப்பிக்க இரண்டாம் இடத்துச் சிறுகதைப் போட்டி உதவலாம் என்பதை; எவரும் மறக்கமாட்டார்கள் என்பதை நான் நம்புகின்றேன். ரூபன் குழுவினரின் பெரிய மதியுரைஞர்கள் பண்டிகை நாட்களில் போட்டி நடாத்துவதை இப்படித்தான் எண்ணிச் செயலில் இறங்கி இருப்பார்கள் என நம்புகின்றேன்.
உங்க நாட்டு, உங்க ஊரு, உங்க வீட்டு, சிலருக்கு காதலன்/ காதலி வீட்டுப் பொங்கல் பற்றி இழையோடி அப்பண்டிகை நாளில் நள்ளிரவின் பின் ஞாயிற்றுக் கதிர்கள் முற்றத்தில் வந்து விழ பொங்கல் பானை பொங்கி வழியும் வரை நடந்ததென்ன? அதனை ஒரு சிறுகதை ஆக்கி அனுப்பலாமே! 2015 பொங்கல் நாள் என்றதும் கடந்த காலப் பொங்கல் நாட்களில் நிகழ்ந்த சுவையான செய்திகளையும் சிறுகதை ஆக்கி அனுப்பலாமே!
என்னங்க சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா? அப்ப நான், நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் உங்கள் கூகிள்+, லிங்டின், டுவிட்டர், பேஸ்புக் சுவர் பகுதிகளில் கீழ்வரும் இணைப்பை அறிமுகம் செய்து உதவுங்கள்.
http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html
அல்லது உங்கள் வலைப்பூக்களில் இடது/வலது பட்டை விட்ஜற் ஆக கீழ்வரும் இணைப்பைப் புகுத்தி விடுங்கள்.
<a target="_blank" href="http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html" title="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி">
<img src="http://yarlpavanan.files.wordpress.com/2015/01/2015-01-01_074945.jpg" height="200" width="200" alt="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி"></img>
</a>
“எப்படி இருப்பினும் எனக்குச் சிறுகதை எழுத வராது” என்று பின்னடிப்பவர்களும் இருக்கிறார்கள் பாருங்கோ! அவர்கள் சின்னப் பொடியன் யாழ்ப்பாவாணன் எழுதிய கீழ்வரும் பதிவுகளைப் படித்த பின்னர் தானும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாமே!
கதைகள் புனையலாம் வாருங்கள்! (http://wp.me/pTOfc-aP)
என்னங்க நீங்கள் சிறுகதை எழுதக் கூடியவரா? “சிறுகதை எழுதுவது எப்படி?” என எதாவது பதிவு செய்திருக்கிறீர்களா? இந்தச் சிறுகதைப் போட்டியில் ஆகக் குறைந்தது நூறு பதிவர்களைப் போட்டியில் இணைக்கவல்ல பதிவுகளை உங்கள் வலைப்பூக்களில் ஆக்கி உதவுங்கள். அதற்குக் கீழ்வரும் இணைப்பைப் பாவிக்கலாம். இதனையே எனது பதிவின் தொடக்கத்தில் இட்டேன்.
<a target="_blank" href="http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html" title="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி">
<img src="http://yarlpavanan.files.wordpress.com/2015/01/2015-01-01_074945.jpg" height="480" width="640" alt="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி"></img>
</a>
தைப்பொங்கல் நாளை முன்னிட்டு நடைபெறும் சிறுகதைப் போட்டியில் அதிகமானோர் பங்குபற்ற ஒவ்வொருவரும் உதவுங்கள். போட்டியில் சிறப்படைய எல்லோரும் பங்குபற்றலாம். இப்போட்டியின் வெற்றியே அடுத்து வரும் போட்டிகளாக நகைச்சுவைப் போட்டி, நாடகப் போட்டி, பாட்டுப் போட்டி, மரபுக் கவிதையாக அந்தாதிப் போட்டி எனப் பல நடாத்த உதவுமென நம்புகிறேன்.
Tuesday, 11 November 2014
உங்கள் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?
நம்ம காளைகள் தங்கள் உள்ளத்தில் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருப்பாங்க... அதற்கேற்ற வாலைகளுக்கு வலை விரித்தால் எவளாவது சிக்குவாளா? (குறிப்பு: பெண்களே, ஆண்களுக்குக் கழுத்தை நீட்டும் முன் சிந்தியுங்கள்.) காளைகளின் எண்ணங்களைப் படித்த பின் உங்கள் எண்ணங்களைப் பகிரலாம்.
நம்ம வாலைகள் தங்கள் உள்ளத்தில் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருப்பாங்க... அதற்கேற்ற காளைகளுக்கு வலை விரித்தால் எவனாவது சிக்குவானா? (குறிப்பு: ஆண்களே, பெண்களுக்குத் தாலி கட்டும் முன் சிந்தியுங்கள்.) வாலைகளின் எண்ணங்களைப் படித்த பின் உங்கள் எண்ணங்களைப் பகிரலாம்.
சமகாலச் சூழலில் நம்மாளுகள் பேசிக்கொண்ட விருப்பங்களைப் பொறுக்கித் தொகுத்து இரு பாலாரிடையேயும் உலாவும் எண்ணங்களை வெளிப்படுத்த முயன்று உள்ளேன். இத்தனை தெரிவுகளில் எத்தனை தெரிவுகளை காளையோ (ஆண்) வாலையோ (பெண்) விரும்புகின்றனர் என்பதை மணமாகாத இளசுகளைக் கேட்டால் புரிந்துகொள்ள இடமுண்டு. உங்கள் உள்ளத்தில் மாற்று எண்ணங்கள் இருப்பின் வெளிப்படுத்தலாம்.
- அன்பான பெண்
- அழகான பெண்
- கிராமத்து பெண்
- நகரத்து பெண்
- பணக்கார பெண்
- புகைத்தல், மதுப் பழக்கமுடைய பெண்
- ஏழையானலும் குடும்பப் பொறுப்புள்ள பெண்
- எந்த ஆணிடமும் தகாத உறவு வைக்காத பெண்.
- அவள் வருவாயைத் தந்தால் போதும், எப்படியிருந்தாலும் பரவாயில்லை.
நம்ம வாலைகள் தங்கள் உள்ளத்தில் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருப்பாங்க... அதற்கேற்ற காளைகளுக்கு வலை விரித்தால் எவனாவது சிக்குவானா? (குறிப்பு: ஆண்களே, பெண்களுக்குத் தாலி கட்டும் முன் சிந்தியுங்கள்.) வாலைகளின் எண்ணங்களைப் படித்த பின் உங்கள் எண்ணங்களைப் பகிரலாம்.
- அன்பான ஆண்
- அழகான ஆண்
- கிராமத்து ஆண்
- நகரத்து ஆண்
- பணக்கார ஆண்
- புகைத்தல், மதுப் பழக்கமுடைய ஆண்
- ஏழையானலும் குடும்பப் பொறுப்புள்ள ஆண்
- எந்தப் பெண்ணிடமும் தகாத உறவு வைக்காத ஆண்.
- அவன் வருவாயைத் தந்தால் போதும், எப்படியிருந்தாலும் பரவாயில்லை.
சமகாலச் சூழலில் நம்மாளுகள் பேசிக்கொண்ட விருப்பங்களைப் பொறுக்கித் தொகுத்து இரு பாலாரிடையேயும் உலாவும் எண்ணங்களை வெளிப்படுத்த முயன்று உள்ளேன். இத்தனை தெரிவுகளில் எத்தனை தெரிவுகளை காளையோ (ஆண்) வாலையோ (பெண்) விரும்புகின்றனர் என்பதை மணமாகாத இளசுகளைக் கேட்டால் புரிந்துகொள்ள இடமுண்டு. உங்கள் உள்ளத்தில் மாற்று எண்ணங்கள் இருப்பின் வெளிப்படுத்தலாம்.
Sunday, 26 October 2014
எந்த இணையத் தளத்திலும் முதன்மைப் பதிவாளராக...?
நண்பர்களே! எந்த இணையத் தளத்திலும் நீங்கள் இருந்தாலும் உங்கள் செயற்பாடுகளே உங்களை முதன்மைப் படுத்துகிறது என்பதை மறக்க முடியாதே! இன்று பலர் வலைப்பூக்களைத் திறக்கிறார்கள், கொஞ்ச நாளில் மூடி விடுகிறார்கள். அதனைப் பேணும் வேளை கீழ்வரும் தேவைகளை மறந்துவிடுகின்றனர். இது பற்றிய உங்கள் கருத்தைக் கூறுங்கள் பார்ப்போம்.
- எமது சிறந்த படைப்பைப் பதிந்தால் போதும்.
- மாற்றார் படைப்பைப் படித்த பின் எமது உளக்கருத்தைத் தெரிவித்தல்.
- மாற்றார் சிறந்த படைப்பை எமது விருப்பப் பதிவில் சேர்த்தல் அல்லது எமது வலைப்பூவில் அறிமுகம் செய்தல்.
- நல்ல பதிவருக்கு மேற்படி மூன்றும் தேவையே.
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. மூன்று மணி நேரம் தான்
தம்பி, தங்கைகளே...
நல்ல செய்திகளை
உள்ளத்திலே பதியச் செய்ய
திரைப்படமே நன்று!
அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.
- அட போங்க! நம்ம இளசுகளுக்கு பிழையான வழிகாட்டலைச் செய்கிறது.
- குடும்பத்தவர் ஒன்றிணைந்து பார்க்கக்கூடிய நிறைவு இன்றைய திரைப்படங்களில் இல்லை.
- பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த திரைப்படம்; இன்று வணிக(பண) ஊடகமாக மாறிவிட்டது.
- முதியோருக்குப் பிடிக்காவிட்டாலும், திரைப்படம் இளசுகளை வளைத்துப் போடுகிறதே!
- தமிழ் திரைப்படத்தைச் சிறந்த தமிழ் இலக்கியமாகக் கருதினாலும்; அது ஆங்கிலப் படங்களின் சாயலில் தான் தலையைக் காட்டுகிறது.
Tuesday, 16 September 2014
சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா?
வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள்
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_17.html
சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா? என்னாலே நம்ப முடியவில்லை! தம்பி ரூபன் அவர்கள் காலையில வைபரில் (Viber) கதைக்கும் போது சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன். ஆயினும், உலகெங்கும் தமிழைப் பேணப் போட்டிகள் நாடாத்தும் குழுத் தலைவர் சொல்லுக்குப் பணிந்து ஏற்றுக்கொண்டேன். அவருக்கு மிக்க நன்றிகள். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/09/blog-post_16.html?spref=bl
அவரது பணிப்புக்கமைய அவரது விருதுகளைச் சிலருக்குப் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் தங்களைப் பற்றியும் தங்களது வலைப்பூ முயற்சிகளையும் குறிப்பிட்டு விருதினைத் தங்கள் தளத்தில் பகிருதல் வேண்டும். மேலும், தாம் விரும்பிய வலைப்பூ வழியே தமிழைப் பேணும் ஐந்து பேருக்கு ஆவது இதனைப் பகிரவேண்டும்.
என்னைப் பற்றி...
ஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். எனது புனைபெயர் யாழ்பாவாணன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். எனக்கு மூன்று தம்பியர் (ஒருவர் போரில் சாவடைந்துவிட்டார்) ஒரு தங்கை. 2001 இல் சத்தியபாமா என்ற ஒருவளை மணமுடித்து வாழ்ந்து வருகிறேன். குழந்தைகள் இன்னும் கிடைக்கவில்லை,
தொடக்கத்தில் தனியார் கல்வி நிலையமொன்றில் கணித ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினிப் பாட ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினி நிகழ்நிரலாக்குனராக இருந்தேன். இறுதியாக முகாமையாளராகப் பணியாற்றுகிறேன்.
எனது வலைப்பூ முயற்சிகள்....
1987 இல் எழுதுகோல் ஏந்தினாலும் 1990 இல் முதலாம் கவிதை பத்திரிகையில் வெளியானது. பின்னர் பல பதிவுகள் வெளியாகின. போர்ச் சூழலால் எல்லாப் பதிகளும் அழிந்தன. ஈற்றில 2010 இலிருந்து முகநூல், டுவிட்டர், தமிழ்நண்பர்கள்.கொம் ஊடாகப் பதிவுகளை மேற்கொள்கிறேன். ஆயினும் ஐந்து வலைப்பூக்களையும் அறிஞர்களின் மின்நூல்களையும் பேணுகிறேன். முழு விரிப்பையும் அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://ypvn.96.lt/
எனக்களித்த விருது...
தம்பி ரூபன் அவர்கள் இரு விருதுகளை என்னுடன் பகிர்ந்தார். அதில் ஒன்று தான் கீழே தரப்பட்டிருக்கிறது.
எனது விருதைக் கீழ்வரும் பதிவர்களுடன் பகிருகிறேன்...
வலைப்பதிவர்களின் தமிழ்ப்பக்கங்கள் (http://tamilsites.doomby.com/) தளத்தில் இருந்து எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட சிலருடன் பகிருகிறேன்.
http://muthuputhir.blogspot.com/
http://kavithaivaanam.blogspot.in/
http://enganeshan.blogspot.in/
http://psdprasad-tamil.blogspot.in/
http://chellappatamildiary.blogspot.com/
http://writeinthamizh.blogspot.in/
http://marabukkanavukal.blogspot.in/
http://www.kaviaruviramesh.com/
http://www.rishvan.com/
http://www.hishalee.blogspot.in/
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_17.html
சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா? என்னாலே நம்ப முடியவில்லை! தம்பி ரூபன் அவர்கள் காலையில வைபரில் (Viber) கதைக்கும் போது சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன். ஆயினும், உலகெங்கும் தமிழைப் பேணப் போட்டிகள் நாடாத்தும் குழுத் தலைவர் சொல்லுக்குப் பணிந்து ஏற்றுக்கொண்டேன். அவருக்கு மிக்க நன்றிகள். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/09/blog-post_16.html?spref=bl
அவரது பணிப்புக்கமைய அவரது விருதுகளைச் சிலருக்குப் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் தங்களைப் பற்றியும் தங்களது வலைப்பூ முயற்சிகளையும் குறிப்பிட்டு விருதினைத் தங்கள் தளத்தில் பகிருதல் வேண்டும். மேலும், தாம் விரும்பிய வலைப்பூ வழியே தமிழைப் பேணும் ஐந்து பேருக்கு ஆவது இதனைப் பகிரவேண்டும்.
என்னைப் பற்றி...
ஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். எனது புனைபெயர் யாழ்பாவாணன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். எனக்கு மூன்று தம்பியர் (ஒருவர் போரில் சாவடைந்துவிட்டார்) ஒரு தங்கை. 2001 இல் சத்தியபாமா என்ற ஒருவளை மணமுடித்து வாழ்ந்து வருகிறேன். குழந்தைகள் இன்னும் கிடைக்கவில்லை,
தொடக்கத்தில் தனியார் கல்வி நிலையமொன்றில் கணித ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினிப் பாட ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினி நிகழ்நிரலாக்குனராக இருந்தேன். இறுதியாக முகாமையாளராகப் பணியாற்றுகிறேன்.
எனது வலைப்பூ முயற்சிகள்....
1987 இல் எழுதுகோல் ஏந்தினாலும் 1990 இல் முதலாம் கவிதை பத்திரிகையில் வெளியானது. பின்னர் பல பதிவுகள் வெளியாகின. போர்ச் சூழலால் எல்லாப் பதிகளும் அழிந்தன. ஈற்றில 2010 இலிருந்து முகநூல், டுவிட்டர், தமிழ்நண்பர்கள்.கொம் ஊடாகப் பதிவுகளை மேற்கொள்கிறேன். ஆயினும் ஐந்து வலைப்பூக்களையும் அறிஞர்களின் மின்நூல்களையும் பேணுகிறேன். முழு விரிப்பையும் அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://ypvn.96.lt/
எனக்களித்த விருது...
தம்பி ரூபன் அவர்கள் இரு விருதுகளை என்னுடன் பகிர்ந்தார். அதில் ஒன்று தான் கீழே தரப்பட்டிருக்கிறது.
எனது விருதைக் கீழ்வரும் பதிவர்களுடன் பகிருகிறேன்...
வலைப்பதிவர்களின் தமிழ்ப்பக்கங்கள் (http://tamilsites.doomby.com/) தளத்தில் இருந்து எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட சிலருடன் பகிருகிறேன்.
http://muthuputhir.blogspot.com/
http://kavithaivaanam.blogspot.in/
http://enganeshan.blogspot.in/
http://psdprasad-tamil.blogspot.in/
http://chellappatamildiary.blogspot.com/
http://writeinthamizh.blogspot.in/
http://marabukkanavukal.blogspot.in/
http://www.kaviaruviramesh.com/
http://www.rishvan.com/
http://www.hishalee.blogspot.in/
Saturday, 9 August 2014
பிறந்த நாள் சிறப்புத் திட்டங்கள் (Master Plans) என்ன?
2014 ஐப்பசி 07 இல் எனக்கு நாற்பத்தாறாம் பிறந்த நாள். எல்லோருக்கும் இப்படிப் பிறந்த நாள் வருமே! இந்நாளில் ஆளுக்கு ஒவ்வொரு சிறப்புத் திட்டங்கள் (Master Plans) போட்டு புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவது வழமை தான். உங்கள் பிறந்த நாளன்றும் நீங்கள் எதைத் தொடருவதாகவோ எதைக் கைவிடுவதாகவோ எண்ணியுள்ளீர்கள். உங்கள் பிறந்த நாள் சிறப்புத் திட்டங்கள் (Master Plans) என்னவென்பதை வலைப்பதிவர்களுடன் பகிருங்களேன்!
1. எல்லாவற்றிலும் வெற்றி கிட்டுமென (தன்னம்பிக்கையுடன்) முயற்சியில் இறங்குதல்.
2. பகையைத் தோற்றுவிக்காமல் நல்லுறவைப் (குடும்பம், நட்பு) பேணுதல்.
3. செலவைக் குறைத்து வரவைப் பெருக்குதல். சேமிப்புப் பழக்கத்தைக் (குடும்பம் மேம்பட) கடைப்பிடித்தல்.
4. பிறமொழிக் கலப்பின்றித் (தாய் மொழி மேம்பட) தமிழைப் பேசி வழக்கப்படுத்துதல்.
5. புகைத்தல், மது(குடித்தல்), விலை மகளை நாடுதல் போன்ற கெட்ட பழக்கமுள்ளோரைச் (தாய்நாடு மேம்பட) சீர் திருத்துதல்.
6. எமக்கு மேலதிகமாகவுள்ளதை (தனக்குப் பின் தானம்) ஏழைகளுக்கு வழங்கி உதவுதல். எமக்கு வாழ்வளிக்கும் இறைவனுக்கு நாம் செய்யும் நன்றியாக இதனைப் பின்பற்றலாம்.
7. மூன்று நேரமும் மூக்குமுட்ட விழுங்கிப் போட்டு நீட்டி நிமிர்ந்து படுப்பதும் விடிய எழுந்தால் எனது வருவாயை மட்டும் கவனிப்பது (சுயநலமாக...).
8. எந்தவொரு சிறப்புத் திட்டங்களும் (Master Plans) எனக்கில்லை (முட்டாளாக...).
என் பிறந்த நாளில் இப்படிச் சிறப்புத் திட்டங்கள் (Master Plans) போட்டு
செயலில் இறங்கி நல்ல மனிதராகலாம் என எண்ணினேன்.
தங்கள் பிறந்த நாளிலும் எத்தனையோ சிறப்புத் திட்டங்கள் (Master Plans) போட்டுப் புதிய அகவையில் நல்ல மனிதராக எண்ணியிருப்பியள். அவற்றைப் பாருங்கோ நம்ம வலைப்பதிவர்களுடன் பகிருங்களேன்!
Wednesday, 6 August 2014
காதலி, காதலன் நினைவாக...
முதலாம் சந்திப்பு:-
ஆண் : எங்கள் காதல் தான் உலகிலேயே உயர்ந்த காதல். நான் இறந்து விட்டால், நீ என்ன செய்வாய்?
பெண் : நான் என்ன செய்ய முடியும். எனது நீண்ட தலைமுடியைப் பொருட்படுத்தாமல், மொட்டை அடித்து எனது துயரை வெளிப்படுத்துவேன்.
இரண்டாம் சந்திப்பு:-
பெண் : எங்கள் காதல் தான் உலகிலேயே உயர்ந்த காதல். நான் இறந்து விட்டால், நீ என்ன செய்வாய்?
ஆண் : பெட்டை மூஞ்சியாகக் கிடந்த என் முகத்தில் நீளும் மீசை தாடியை வளர்த்து எனது துயரை வெளிப்படுத்துவேன்.
மூன்றாம் சந்திப்பு:-
நானே ஒரு பெரியவரிடம் : காதலி, காதலன் நினைவாக... இன்றைய இளசுகளின் போக்கு என்னவாயிருக்கும்?
பெரியவர் : இன்றைய பிஞ்சுகள்; ஒன்றை விட்டால் இன்னொன்றைப் பார்க்குதுகள்; உதுகள் எங்கே தாஜ்மகாலைப் போல காதலன், காதலி நினைவாக எதையாவது கட்டுங்கள் என நம்புகிறது.
நான்காம் சந்திப்பு:-
"காதலி, காதலன் நினைவாக... இன்றைய இளசுகளின் போக்கு என்னவாயிருக்கும்?" என்ற கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.
நகைச்சுவையாக உங்கள் பதிலைத் தாருங்களேன்.
நான் பார்க்குமிடமெங்கும் உண்மைக் காதலைக் காணவில்லை. ஆகையால், இப்படியான கேள்வி அம்புகளை நீட்டுகிறேன்.
ஆண் : எங்கள் காதல் தான் உலகிலேயே உயர்ந்த காதல். நான் இறந்து விட்டால், நீ என்ன செய்வாய்?
பெண் : நான் என்ன செய்ய முடியும். எனது நீண்ட தலைமுடியைப் பொருட்படுத்தாமல், மொட்டை அடித்து எனது துயரை வெளிப்படுத்துவேன்.
இரண்டாம் சந்திப்பு:-
பெண் : எங்கள் காதல் தான் உலகிலேயே உயர்ந்த காதல். நான் இறந்து விட்டால், நீ என்ன செய்வாய்?
ஆண் : பெட்டை மூஞ்சியாகக் கிடந்த என் முகத்தில் நீளும் மீசை தாடியை வளர்த்து எனது துயரை வெளிப்படுத்துவேன்.
மூன்றாம் சந்திப்பு:-
நானே ஒரு பெரியவரிடம் : காதலி, காதலன் நினைவாக... இன்றைய இளசுகளின் போக்கு என்னவாயிருக்கும்?
பெரியவர் : இன்றைய பிஞ்சுகள்; ஒன்றை விட்டால் இன்னொன்றைப் பார்க்குதுகள்; உதுகள் எங்கே தாஜ்மகாலைப் போல காதலன், காதலி நினைவாக எதையாவது கட்டுங்கள் என நம்புகிறது.
நான்காம் சந்திப்பு:-
"காதலி, காதலன் நினைவாக... இன்றைய இளசுகளின் போக்கு என்னவாயிருக்கும்?" என்ற கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.
நகைச்சுவையாக உங்கள் பதிலைத் தாருங்களேன்.
நான் பார்க்குமிடமெங்கும் உண்மைக் காதலைக் காணவில்லை. ஆகையால், இப்படியான கேள்வி அம்புகளை நீட்டுகிறேன்.
Thursday, 31 July 2014
ஒரு திரைப்படம் எப்படிப்பட்ட கதையால் வெற்றி பெறுகிறது?
கதையை வைத்துத்தான் படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. அப்படியாயின் எப்படிப்பட்ட கதை நம்மாளுகளுக்குப் பிடிக்கும்.
நகைச்சுவைக் கதை
துப்பறியும் கதை
வரலாற்றுக் கதை
அரசர் கதை
இறைபக்திக் கதை
சண்டைக் கதை
சதை காட்டும் ஆடல் கதை
இசையும் பாடலும் கூடிய கதை
பிறமொழிப் படக்கதை
கருவற்ற கதை(மாசாலா)
இன்றைய நிலையில் உங்கள் விருப்பத்தைக் கூறுங்கள் பார்ப்போம்.
Thursday, 24 July 2014
ஒரு திரை இசைப் பாடலின் வெற்றிக்காக உழைத்தவர்கள் யாவர்?
பாடலாசிரியர்
பாடகர்
இசையமைப்பாளர்
மூவரது இணைந்த பணி
அன்றைய பாடல்கள் நினைவூட்டக் கூடியதாகவும் படிப்பதற்கு இலகுவாகவும் அழகுத் தமிழிலும் இருந்தன. ஆனால், இன்றைய பாடல்களில் இவற்றைக் காணவில்லையே! அதனால் தான் இன்றைய பாடல்கள் தோற்றுப் போகின்றனவோ!
Tuesday, 22 July 2014
எதனால் பெற்ற நற்பெயர் (Good Will) நிலையானது?
ஆளுக்காள் ஒவ்வொரு வழியில் நற்பெயரைப் பெறுகிறார்கள். நாம் பெற்ற நற்பெயரே, மக்கள் முன் எம்மை அடையாளப் படுத்தும்.
பண பலம்
அறிவுப் பலம்
சிறந்த பணி செய்தமை
ஒன்றும் நிலைக்காது
சுற்றுச் சூழலில் நம்மாளுகள் எப்படி நற்பெயரைப் பேணுகிறார்களோ, அதனைக் கண்டு பிடித்து முடிவு எடுக்கலாம்.
பண பலம்
அறிவுப் பலம்
சிறந்த பணி செய்தமை
ஒன்றும் நிலைக்காது
சுற்றுச் சூழலில் நம்மாளுகள் எப்படி நற்பெயரைப் பேணுகிறார்களோ, அதனைக் கண்டு பிடித்து முடிவு எடுக்கலாம்.
Saturday, 5 July 2014
தீபாவழி கூறும் வழிகாட்டல் என்ன?
1.தீமை செய்தோரை ஒழித்த நாள்.
2.நன்மை செய்தோரை நினைவூட்டும் நாள்.
3.ஒழுக்கமுடையோரைப் போற்றும் நாள்.
4.இம்மூன்று கருத்தும் பிழையானது
(அப்படியாயின் உங்கள் கருத்தைக் கீழே தரவும்).
5.வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்வைப் பகிரும் நாள்.
6.எல்லா மதத்தவரும் கொண்டாடும் ஒவ்வொரு பெருநாளுக்குப் பின்னாலேயும் நல்ல வழிகாட்டல் ஒன்று மறைந்திருக்குமே!
Tuesday, 1 July 2014
திரைப்படப் பாடல்களில் உச்சரிப்புத் தெளிவின்மைக்கு...?
1. இசை கூடுவதால் பாடல் இசைக்குள் மூழ்கிறது.
2. பாடகர்கள் சொற்களை விழுங்குவதால் பாடல் தெளிவில்லை.
3. இசையமைப்பாளரும் தமிழ் உச்சரிக்கத் தெரியாத பாடகர்களும் பாடல்களைச் சாகடிக்கிறார்கள்.
4. பாடலாசிரியர்கள் தூய தமிழில் பாடல் புனைவதில்லை.
5. ஆங்கிலப் பாடல்களை ஒட்டியும் ஆட்டத்தை நம்பியும் பாடல்கள் அமைவதால் நன்றாக அமைவதில்லை.
6.சிறந்த உச்சரிப்பு, பாடலை முதன்மைப்படுத்தும் இசை என்பன இன்றைய திரைப்படப் பாடல்களில் காணமுடிவதில்லை. இது தமிழ் பாடல்களின் எதிர்காலத்தைப் பாதிக்கச் செய்யும்.
2. பாடகர்கள் சொற்களை விழுங்குவதால் பாடல் தெளிவில்லை.
3. இசையமைப்பாளரும் தமிழ் உச்சரிக்கத் தெரியாத பாடகர்களும் பாடல்களைச் சாகடிக்கிறார்கள்.
4. பாடலாசிரியர்கள் தூய தமிழில் பாடல் புனைவதில்லை.
5. ஆங்கிலப் பாடல்களை ஒட்டியும் ஆட்டத்தை நம்பியும் பாடல்கள் அமைவதால் நன்றாக அமைவதில்லை.
6.சிறந்த உச்சரிப்பு, பாடலை முதன்மைப்படுத்தும் இசை என்பன இன்றைய திரைப்படப் பாடல்களில் காணமுடிவதில்லை. இது தமிழ் பாடல்களின் எதிர்காலத்தைப் பாதிக்கச் செய்யும்.
Tuesday, 24 June 2014
இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?
அறிஞர் சொக்கன் சுப்பிரமணியன் பிடியில் சிக்கிய அறிஞர் கில்லர்ஜி "பத்து கேள்விகள் கேட்டுப் பத்துக்கும் பதிலளிக்க" என்று என்னையும் தன் பிடிக்குள் சிக்க வைத்துவிட்டார். கில்லர்ஜி அவர்களிடம் உச்ச முடியுமா? முத்துக்கு முத்தாகப் பத்துக்குப் பத்தாகக் கேள்வி - பதில் போட்டிட்டு "இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?" என்று கேட்கலாமோ? கேட்டிட்டாங்களே! ஆகையால் என் பதிலையும் கிழே பதிவு செய்கிறேன்.
1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
நூறு அகவை வரை வாழ்வேனா என்பது ஐயம் தான்...
நூறாம் அகவைப் பிறந்த நாள் வரை வாழ முடிந்தால் நூற்றுக் கணக்கான சிறார்களுக்கு எழுதுகோல் வழங்கிப் பாபுனையக் கற்றுக்கொடுப்பேன். நம்மவூரு சித்தி விநாயகர் கோவில் முன் நூற்றுக் கணக்கானோருக்கு மதிய உணவு வழங்குவேன். வசதிகளைப் பொறுத்து மேலும் நல்லன செய்வேன்.
2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
காலத்துக்குக் காலம் விருப்பங்கள் வேறுபடலாம். ஆயினும், விருப்பம் / நாட்டம் உள்ள எல்லாம் கற்றுக்கொள்ள எனக்கு விருப்பம் / விரும்புவேன். அப்படி இருப்பினும் முதன்மையாகத் தமிழ், அடுத்துக் கணினி நுட்பம்.
3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
கடைசியாகச் சிரித்த நாள், திகதி நினைவில் இல்லை. ஆனால், சிரித்தேன். நம்ம ஜோக்காளி தளத்துத் தமிழ்மணம் நிலை (Rank) இரண்டாக இருந்தும் "என்னை நிலை (Rank) நான்கிற்கு உயர்த்திய வலை உறவுகளுக்கு நன்றி" என்றிருந்ததைப் பார்த்துத் தான்...
4. 24மணி நேரம் மின்தடை (பவர்கட்) ஆனால் நீங்கள் செய்வது என்ன?
பகலாயின் அம்மன் கோவில் தெற்கு வாசலில் இருந்து காற்று வாங்கப் போவேன். பால்நிலாவாயின் வீட்டு முற்றத்தில் பொழுது போகும். முன்னிரவாயின் அந்தி சாயுமுன் உண்டு உறங்கி விடுவேன். தூக்கம் வரவில்லையாயின்
"வேளாவேளைக்குப் பணம் செலுத்தியும்
நாள் முழுக்க மின்னொளி இல்லையே!" என்று கவிதை எழுதக் கற்பனை பண்ணுவேன்.
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
கணவன்-மனைவி ஒற்றுமை வேண்டும். ஒட்டி உறவாடப் பண வருவாய் வேண்டும். கட்டிப்புட்டால் பிறக்கும் பிள்ளைகளை நன்றாகப் படிப்பிக்க வேண்டும். இதற்கு மேலே சொல்லலாம். ஆனால், அவங்க காது கொடுத்துக் கேட்கமாட்டாங்களே!
6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
உலகெங்கும் நம்பிக்கை இல்லாமையே அடிப்படைச் சிக்கல் (பிரச்சனை). உறவுகளிடையே நம்பிக்கை இல்லாமையே மகிழ்ச்சி இன்மைக்குக் காரணம். எனவே, நம்பிக்கையை ஏற்படுத்த உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவேன். நம்பிக்கை இல்லாமையைப் போக்கினால் உலகெங்கும் அமைதியை நிலைநாட்டலாம்.
7. நீங்கள் யாரிடம் மதியுரை (அட்வைஸ்) கேட்பீர்கள்?
நன்கு அறிந்தவர்களிடம் மதியுரை (அட்வைஸ்) கேட்பேன். ஆனால், தனியொருவரிடம் கேட்கமாட்டேன். நான்கைந்து ஆள்களிடம் கேட்பேன். பின் எல்லோரும் சொன்னதில் பொதுவானதைப் பின்பற்றுவேன்.
8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
என்னை ஆய்வு செய்ய வருவோருக்குக் குறித்த தகவல் பொய்யானது என விளக்குவேன் அல்லது உண்மை நிலையை விளக்குவேன். ஆனால், தவறான தகவல் பரப்புவோருக்கு எதிராகப் போராட மாட்டேன். ஏனெனில், அவர்கள் தானே என்னை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள் (பிரபலமாக்குகிறார்கள்).
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
அவர் சொல்வதைக் கேட்டு, அவரது துயரத்தை ஏற்று
"இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை
ஆயினும்,
இழப்புகளுக்கு முகம் கொடுத்தே ஆகவேண்டும்!" என ஆற்றுப்படுத்த முயற்சிப்பேன்.
10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
மூலை முடுக்குகளில் கிடக்கும் முழு நூல்களையும் புரட்டிப் படிப்பேன். எழுதுகோலையும் எழுதுதாளையும் எடுத்து ஏதாவது எழுதுவேன். கணினியை இயக்கி வலைப்பூக்களில் நண்பர்களின் பதிவுகளைப் படிப்பேன்.
கீழ்வரும் வலைப்பூக்களின் அறிஞர்கள் போட்ட பிடியில் நீங்கள் சிக்கவில்லையாயின் உங்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்கின்றேன். பதில் தருவீர்கள் என நம்புகிறேன். பொதுவான இந்த அழைப்பைப் பணிவாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
உள்ளம் திறந்து தத்தம் உணர்வுகளைப் பகிர்ந்து வலைப்பூ உறவுகளுக்குள் என்னையும் உள்வாங்கி; நெருங்கிய உறவாக்க "இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?" என்ற பகிர்வோடு கலந்து கொண்ட எல்லோருக்கும் எனது நன்றிகள்.
Saturday, 6 July 2013
எது உண்மையான காதல்?
தமிழ் திரைப்படம் பார்த்தால் காதல் வருமாம். அது பொய்க் காதலாம். ஆபத்துக்கு உதவியவர்களிடையே காதல் வருமாம். நீண்ட கால நண்பர்களிடையேயும் காதல் வருமாம். உண்மையா?
- பள்ளிக் காதல்
- தெரு வழியே அலைந்து தேடிய காதல்
- உயர் நிலைக் கல்லூரிக் காதல்
- தமிழ் திரைப்படம் பார்த்து வந்த காதல்
- ஆபத்துக்கு உதவியதால் வந்த காதல்
- நீண்ட கால நட்பால் வந்த காதல்
- இயல்பாய் இயற்கையாய் அமைந்த காதல்
Subscribe to:
Posts (Atom)

