Thursday, 31 July 2014
விலை மகளுக்கு இலை போடாதீர்
போக்குவரவு என்றால்
தடைகள் ஆயிரம் வரலாம்
அதுபோலத் தான்
வாழ்க்கையிலும்
ஆயிரம் தடைகள் வந்து மோதலாம்!
தடைகளைக் கடந்தால் தான்
போக்குவரவும் இடம்பெறுவது போல
வாழ்க்கையிலும்
எதிர்ப்படும் தடைகளைக் கடக்கவேணுமே!
தடைகளைக் கடக்க முடியாது போனால்
தடைகளுக்குள்ளேயே
முடிந்தவரை வாழ முயற்சி செய்யலாமே!
தடைகளைக் கடக்க முடியா விட்டாலும்
முடிந்தவரை முயன்றும்
தடைகளுக்குள்ளேயே வாழ முடியா விட்டாலும்
சாகவேண்டுமே தவிர
விலை மகனாகவோ
விலை மகளாகவோ முடியாதே!
விலை மகனாரை விட
விலை மகளாரே நாட்டிலே அதிகம்...
ஆணென்றால்
எந்தத் தொழிலையையும் செய்யலாமென்றால்
சரிநிகர், சமநிலை கேட்கும் பெண்கள்
எந்தத் தொழிலையையும் செய்ய முடியாதோவென
கழிவுறுப்பு வாடகைக்கு விடுவது சரியா?
எவர் வாய்க் கேட்பினும்
எவர் தான் எப்படிச் சொன்னாலும்
பெண் பக்கம் தவறு என்றால்
அவளை
ஊரே ஒதுக்கி வைப்பதால் தான்
கோழைப் பெண்கள்
தெருக்கோடியில் விலைமகளாக
அலைவதைப் பார்க்க முடிகிறதே!
கோழைப் பெண்களே
உங்கள் தொழில் உறுப்புக்கு
பொன்(தங்க) நகை அணியும் வழக்கம்
(பழைய இலக்கியங்கள் கூறுகிறது)
ஏன் இருந்தது தெரியுமா?
வாடகைக்கு விடுவதற்கல்ல
வழித்தோன்றலைத் தருவிக்கவென்றே
உங்கள் புனித உறுப்பைப் பேணவே!
ஒருவனுக்கு ஒருத்தி என்பது
ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே
சொல்லப்பட்டது...
ஆனால்
ஆளுக்காள் தவறிழைத்த பின்
பெண் மீது பழி போடலாமோ?
ஆண் சிங்கங்களே
ஆண்மையை அடக்கியாள முடியாமல்
தெருக்கோடி விலைமகளை நாடி
பாலியல் நோயை மட்டுமல்ல
குடும்பப் பிரிவையும் தேடி வரலாமோ?
போதாக்குறைக்கு
மாற்றான் பெண் சீர்கெடத் துணைபோவதா?
இவை தானா
ஆண் சிங்கங்களின் ஆண்மை!
பெண்ணைப் பெற்றவர்களே
சற்றுச் சிந்தித்துப் பாருங்களேன்...
உங்கள்
குலமகள் தவறிழைத்தால்
சீர் திருத்தி வாழவையுங்களேன்...
தவறிழைத்த குலமகளை
நீங்கள்
ஒதுக்கி வைப்பதால் தானே
விலை மகளாகப் புறப்படுகிறாளே...
சீர் திருத்தியும்
குலமகளாக வாழாத
விலை மகளுக்கு இலை போடாதீர் - அது
எம்மைப் படைத்த ஆண்டவனுக்கே
பிடிக்காத ஒன்றே!
கழிவுறுப்பு வாடகைக்கு விடும்
தொழிலை ஒழிக்க
பெண்ணைப் பெற்றவர்கள்
விலை மகளுக்கு இலை போடா விட்டாலும்
ஆளாளுக்கு ஏற்ற பொறுப்பை
நிறைவேற்றினால்
நாளாக நாளாக
என் மகளும் விலை மகளாகாள்
நாடெங்கிலும் உள்ள
விலை மகளும் குலமகளாவாளே!
ஒரு திரைப்படம் எப்படிப்பட்ட கதையால் வெற்றி பெறுகிறது?
கதையை வைத்துத்தான் படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. அப்படியாயின் எப்படிப்பட்ட கதை நம்மாளுகளுக்குப் பிடிக்கும்.
நகைச்சுவைக் கதை
துப்பறியும் கதை
வரலாற்றுக் கதை
அரசர் கதை
இறைபக்திக் கதை
சண்டைக் கதை
சதை காட்டும் ஆடல் கதை
இசையும் பாடலும் கூடிய கதை
பிறமொழிப் படக்கதை
கருவற்ற கதை(மாசாலா)
இன்றைய நிலையில் உங்கள் விருப்பத்தைக் கூறுங்கள் பார்ப்போம்.
Wednesday, 30 July 2014
அரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்?
ஒரு கட்சிச் செயலகத்தில் நடந்த நாடகம்
கட்சித் தொண்டன் : எங்களைப் பற்றி மக்களிடையே எந்தவித பேச்சையும் காணவில்லையே...
கட்சித் தலைவர் : அதற்கு என்னிடம் அல்லவா மருந்து உண்டு.
கட்சித் தொண்டன் : காலம் கடந்தால் மக்கள் எங்களை மறந்து விடுவார்களே... அதன் பின் உங்கட மருந்து வேலை செய்யாதே...
கட்சித் தலைவர் : என்னுடைய மருந்து சக்தி மிக்கது.
கட்சித் தொண்டன் : அதெப்படி?
கட்சித் தலைவர் : ஈழத்தில சிறுபான்மை இனங்களை அழித்துக்கொண்டு அரசியல் பண்ணுறாங்களே... அதுபோல... உடையாத முல்லைப் பெரியாற்று அணையை கொஞ்சம் உடைத்துப் போட்டுக் கூத்துப் போடத் தெரிந்தால் தானே முதுநிலை அரசியல்வாதி.
கட்சித் தொண்டன் : அதுவா செய்தீ...
கட்சித் தொண்டன் : எங்களைப் பற்றி மக்களிடையே எந்தவித பேச்சையும் காணவில்லையே...
கட்சித் தலைவர் : அதற்கு என்னிடம் அல்லவா மருந்து உண்டு.
கட்சித் தொண்டன் : காலம் கடந்தால் மக்கள் எங்களை மறந்து விடுவார்களே... அதன் பின் உங்கட மருந்து வேலை செய்யாதே...
கட்சித் தலைவர் : என்னுடைய மருந்து சக்தி மிக்கது.
கட்சித் தொண்டன் : அதெப்படி?
கட்சித் தலைவர் : ஈழத்தில சிறுபான்மை இனங்களை அழித்துக்கொண்டு அரசியல் பண்ணுறாங்களே... அதுபோல... உடையாத முல்லைப் பெரியாற்று அணையை கொஞ்சம் உடைத்துப் போட்டுக் கூத்துப் போடத் தெரிந்தால் தானே முதுநிலை அரசியல்வாதி.
கட்சித் தொண்டன் : அதுவா செய்தீ...
நாளுக்கு நாள் ஒவ்வொரு கைப்பையா?
சம்மிலி: என்னக்கா... சாமிலி, நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பையோட வாறாங்களே!
சாலினி: நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பை மட்டுமல்ல; மிதிவண்டி, ஆடை, அணிகலன், நகம், தலைமுடி எல்லாமே அப்படித்தான்...
சாலினி: நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பை மட்டுமல்ல; மிதிவண்டி, ஆடை, அணிகலன், நகம், தலைமுடி எல்லாமே அப்படித்தான்...
Tuesday, 29 July 2014
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்
முல்லைப் பெரியாற்று அணையாலே
ஒரே தாய் வயிற்றுப்(இந்திய) பிள்ளைகளான
கேரளாக்காரரும் தமிழகக்காரரும்
முட்டி மோதுவது முறையல்லவே!
ஆனாலும்
கேரளாக்காரரின் ஒற்றுமை
தமிழகக்காரிடம் இல்லையே
அதனாலன்றோ
தமிழகத்திற்கு கேடு வருகின்றது!
தமிழகக் கட்சிகள் ஒவ்வொன்றும்
தனித் தனி நாள் குறித்து
கேரளாவை எதிர்க்க முனைவது
தமிழருக்கு
விடிவைப் பெற்றுத்தரவல்ல
தங்களை அடையாளப்படுத்தவே!
ஓர் இனம் ஒரு வேண்டுகோள்
என்றிருக்கும் போது
ஏன் எல்லோரும்
தனித் தனியாகப் போராட வேண்டும்?
கேரளாவை வென்றது
நாங்கள் தான் என்று பரணி பாடவா?
அப்படியாயின்
கேரளாவல்லவா வெல்லும்...
எப்படியாயினும்
ஒரு இலக்குக் குறித்து
தமிழினம் ஒன்றுபட முடியாதது ஏன்?
அதெல்லாம்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணம் அல்லவா!
வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு
ஓர் எட்டப்பன் இருந்தமையும்
பண்டாரவன்னியனுக்கு
ஒரு காக்கைவன்னியன் இருந்தமையும்
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு
(கரிகாலனுக்கு)
ஒரு விநாயகமூர்த்தி முரளீதரன்
(கருணா அம்மான்) இருந்தமையும்
இன்று(12/12/2011)
தமிழகக் கட்சிகள்
தனித் தனியே களமிறங்குவதும்
அன்று(20/05/2009 இற்கு முன்)
நாற்பத்தெட்டுப் போராளிக் குழுக்கள்
தமிழீழம் மீட்கக் களமிறங்கியதும்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மைக்குச் சான்றல்லவா!
புலம் பெயர் நாடுகளிலும் கூட
கீரியும் பாம்பும் போல
தமிழர் தமக்குள்ளே
முட்டி மோதுவதைப் பார்த்து
மேலை நாட்டவர் கேலி பண்ணவில்லையா?
இனி
தமிழருக்குள் ஒற்றுமை இல்லையென்றால்
உலகில்
எந்த நாட்டில் இருந்தாலும்
எதிலும் வெற்றி கிட்டாமல்
அழிவது தான் எஞ்சும்!
உலகிலிருந்து
தமிழினம் அழியாமல் பேண
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மையைச் சாகவைத்து
ஒரு இலக்கிற்கு எப்போதும்
உலகத் தமிழினமே
ஒற்றுமையாக இணையக் கற்றுக்கொள்!
ஒரே தாய் வயிற்றுப்(இந்திய) பிள்ளைகளான
கேரளாக்காரரும் தமிழகக்காரரும்
முட்டி மோதுவது முறையல்லவே!
ஆனாலும்
கேரளாக்காரரின் ஒற்றுமை
தமிழகக்காரிடம் இல்லையே
அதனாலன்றோ
தமிழகத்திற்கு கேடு வருகின்றது!
தமிழகக் கட்சிகள் ஒவ்வொன்றும்
தனித் தனி நாள் குறித்து
கேரளாவை எதிர்க்க முனைவது
தமிழருக்கு
விடிவைப் பெற்றுத்தரவல்ல
தங்களை அடையாளப்படுத்தவே!
ஓர் இனம் ஒரு வேண்டுகோள்
என்றிருக்கும் போது
ஏன் எல்லோரும்
தனித் தனியாகப் போராட வேண்டும்?
கேரளாவை வென்றது
நாங்கள் தான் என்று பரணி பாடவா?
அப்படியாயின்
கேரளாவல்லவா வெல்லும்...
எப்படியாயினும்
ஒரு இலக்குக் குறித்து
தமிழினம் ஒன்றுபட முடியாதது ஏன்?
அதெல்லாம்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணம் அல்லவா!
வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு
ஓர் எட்டப்பன் இருந்தமையும்
பண்டாரவன்னியனுக்கு
ஒரு காக்கைவன்னியன் இருந்தமையும்
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு
(கரிகாலனுக்கு)
ஒரு விநாயகமூர்த்தி முரளீதரன்
(கருணா அம்மான்) இருந்தமையும்
இன்று(12/12/2011)
தமிழகக் கட்சிகள்
தனித் தனியே களமிறங்குவதும்
அன்று(20/05/2009 இற்கு முன்)
நாற்பத்தெட்டுப் போராளிக் குழுக்கள்
தமிழீழம் மீட்கக் களமிறங்கியதும்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மைக்குச் சான்றல்லவா!
புலம் பெயர் நாடுகளிலும் கூட
கீரியும் பாம்பும் போல
தமிழர் தமக்குள்ளே
முட்டி மோதுவதைப் பார்த்து
மேலை நாட்டவர் கேலி பண்ணவில்லையா?
இனி
தமிழருக்குள் ஒற்றுமை இல்லையென்றால்
உலகில்
எந்த நாட்டில் இருந்தாலும்
எதிலும் வெற்றி கிட்டாமல்
அழிவது தான் எஞ்சும்!
உலகிலிருந்து
தமிழினம் அழியாமல் பேண
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மையைச் சாகவைத்து
ஒரு இலக்கிற்கு எப்போதும்
உலகத் தமிழினமே
ஒற்றுமையாக இணையக் கற்றுக்கொள்!
பணம் பத்தும் செய்கிறது
வானிலே
கடலிலே
காற்றிலே
காட்டிலே
மேட்டிலே
வீட்டிலே
பள்ளியிலே
மத வழிபாட்டு இடங்களிலே
அரசப் பணி இடங்களிலே
அடடே
அரசப் பங்கில்லாப் பணி இடங்களிலே
காதலிலே
திருமணத்திலே
பிள்ளைப் பேற்றிலே
மருத்துவ மனைகளிலே
சுடுகாட்டிலே
இடுகாட்டிலே
நடுவழியிலே
எடுத்துக்காட்டாக
எத்தனை எத்தனை
இன்னும் உள்ளனவோ
அத்தனையிலும்
பணம் இருந்தால் போதும்
வென்றுவிடலாம்...
ஆண்டவனை வழிபடக் கூட
பணம் வேண்டினால் - ஏழை
பணம் வைத்திருப்பவனையா
வழிபட வேண்டும்?
அட கடவுளே...
பணம் பத்தும் செய்யுமென்றால்
ஏழைகள்
கடவுளை வழிபடாமல் இருக்கவும்
பணம் குறுக்கே வந்து நிற்கிறதே!
2011 சித்திரை கத்திரி வெயில் காலத்தில் தமிழகச் சுற்றுலாவின் போது நான் கோவில்கள் சென்று பார்க்கையில் பணம் செலுத்தினால் மண்டபத்திற்குள் நுழையலாம் என்ற சூழ்நிலையைக் கண்டதும் எழுதியது.
கடலிலே
காற்றிலே
காட்டிலே
மேட்டிலே
வீட்டிலே
பள்ளியிலே
மத வழிபாட்டு இடங்களிலே
அரசப் பணி இடங்களிலே
அடடே
அரசப் பங்கில்லாப் பணி இடங்களிலே
காதலிலே
திருமணத்திலே
பிள்ளைப் பேற்றிலே
மருத்துவ மனைகளிலே
சுடுகாட்டிலே
இடுகாட்டிலே
நடுவழியிலே
எடுத்துக்காட்டாக
எத்தனை எத்தனை
இன்னும் உள்ளனவோ
அத்தனையிலும்
பணம் இருந்தால் போதும்
வென்றுவிடலாம்...
ஆண்டவனை வழிபடக் கூட
பணம் வேண்டினால் - ஏழை
பணம் வைத்திருப்பவனையா
வழிபட வேண்டும்?
அட கடவுளே...
பணம் பத்தும் செய்யுமென்றால்
ஏழைகள்
கடவுளை வழிபடாமல் இருக்கவும்
பணம் குறுக்கே வந்து நிற்கிறதே!
2011 சித்திரை கத்திரி வெயில் காலத்தில் தமிழகச் சுற்றுலாவின் போது நான் கோவில்கள் சென்று பார்க்கையில் பணம் செலுத்தினால் மண்டபத்திற்குள் நுழையலாம் என்ற சூழ்நிலையைக் கண்டதும் எழுதியது.
Sunday, 27 July 2014
உள்ளப் புண்
சொல்பவர்கள் எல்லோரும்
சொல்லலாம் எதையும்
சொல்ல முடிந்தால் - சுடுசொல்லும்
சொல்ல முடிந்தால் விளையும்
"உள்ளத்திலே புண்!"
மறக்க நினைக்கிறேன்
மறக்க முடியவில்லை
உறங்கவிடாத உள்ளம்
உறங்கமுடியா நோவு
"உள்ளத்துப் புண்!"
சொல்லலாம் எதையும்
சொல்ல முடிந்தால் - சுடுசொல்லும்
சொல்ல முடிந்தால் விளையும்
"உள்ளத்திலே புண்!"
மறக்க நினைக்கிறேன்
மறக்க முடியவில்லை
உறங்கவிடாத உள்ளம்
உறங்கமுடியா நோவு
"உள்ளத்துப் புண்!"
Saturday, 26 July 2014
வேலிகள்
எனக்கும் விருப்பம் தான்
வேளைக்கே செத்துவிடத்தான்
ஆனால்,
படைத்தவன் தான்
இன்னும்
என்னை அழிக்க முன்வரவில்லை!
எனக்கும் விருப்பம் தான்
அடிக்கடி தவறுகளைச் செய்துவிட
மக்களாயம்(சமூகம்) தான்
ஊசிக் கண்ணால உற்று நோக்குதே...
சரி... சரி... கமுக்கமாக (இரகசியமாக)
ஏதாச்சும் செய்யலாம் தான்
தவறு செய்யத் தெரிந்தாலும்
பிடிபடாமல் இருக்கத் தெரியாதே!
எனக்கும் விருப்பம் தான்
தலைவனாகத் தான்
ஆனால்,
முன்னுக்குப் போய்
முகத்திலே கரி பூசாமலே இருக்கத் தான்
இன்னும்
தொண்டனாகவே இருக்கிறேனே!
எனக்கும் விருப்பம் தான்
நாட்டை ஆளத்தான்
நான் ஆட்சிக்கு வந்தால்
எல்லோருக்கும்
சம உரிமை கிடத்தாலும் என்றே
முதலாளிகள் எதிர்ப்பதால் தான்
ஊருக்குள்ளே,
வீட்டிற்குள்ளே,
வீட்டு மூலைக்குள்ளே
முடங்கி இருக்கிறேனே!
எனக்கும் விருப்பம் தான்
வானில் உலாவும் பகலவனைப் போல
உலகை ஆளத்தான்
நான் உலகை ஆண்டால்
எல்லா நாடுகளும்
சம வளம் பெற நேர்ந்தால்
தங்கள் வயிறு கடிக்குமென அஞ்சியே
தாய் நாட்டில்
எனக்கு
வீட்டுக்காவல் போட நினைப்பது
வல்லரசுகள் ஆயிற்றே!
எனக்கும் விருப்பம் தான்
சூழவுள்ள மக்களுக்கு
நல்லது செய்யத் தான்
ஆனால்,
சுவாமி விவேகானந்தர் சொன்னார்
"உன்னைத் திருத்திக் கொள்
சூழவுள்ள மக்கள்
தாமாகவே திருந்துவார்கள்" என்றே
என்றாலும்
என்னைத் திருத்தப் பார்க்கிறேன்
இன்னும் முடியவில்லையே!
எல்லோருக்கும் விருப்பம் தான்
எல்லாமும் செய்யத் தான்
என்றாலும் பாருங்கோ
சாட்டுகளைப் பொறுக்கி
சறுக்கப் பல ஆளுங்க...
உயிரினை ஈகம் செய்திடத் துணிந்தே
எல்லாமும் செய்திட
முன்னிற்பவர் சில ஆளுங்க...
இப்படித் தான்
நம்மாளுங்க இருந்தால்
எப்படித் தான்
நம்ம வீடும் நாடும் உலகும்
மேம்பட்டு அமைதிக்குத் திரும்பும்...
எனக்கு ஒன்றும் புரியவில்லையே!
வேளைக்கே செத்துவிடத்தான்
ஆனால்,
படைத்தவன் தான்
இன்னும்
என்னை அழிக்க முன்வரவில்லை!
எனக்கும் விருப்பம் தான்
அடிக்கடி தவறுகளைச் செய்துவிட
மக்களாயம்(சமூகம்) தான்
ஊசிக் கண்ணால உற்று நோக்குதே...
சரி... சரி... கமுக்கமாக (இரகசியமாக)
ஏதாச்சும் செய்யலாம் தான்
தவறு செய்யத் தெரிந்தாலும்
பிடிபடாமல் இருக்கத் தெரியாதே!
எனக்கும் விருப்பம் தான்
தலைவனாகத் தான்
ஆனால்,
முன்னுக்குப் போய்
முகத்திலே கரி பூசாமலே இருக்கத் தான்
இன்னும்
தொண்டனாகவே இருக்கிறேனே!
எனக்கும் விருப்பம் தான்
நாட்டை ஆளத்தான்
நான் ஆட்சிக்கு வந்தால்
எல்லோருக்கும்
சம உரிமை கிடத்தாலும் என்றே
முதலாளிகள் எதிர்ப்பதால் தான்
ஊருக்குள்ளே,
வீட்டிற்குள்ளே,
வீட்டு மூலைக்குள்ளே
முடங்கி இருக்கிறேனே!
எனக்கும் விருப்பம் தான்
வானில் உலாவும் பகலவனைப் போல
உலகை ஆளத்தான்
நான் உலகை ஆண்டால்
எல்லா நாடுகளும்
சம வளம் பெற நேர்ந்தால்
தங்கள் வயிறு கடிக்குமென அஞ்சியே
தாய் நாட்டில்
எனக்கு
வீட்டுக்காவல் போட நினைப்பது
வல்லரசுகள் ஆயிற்றே!
எனக்கும் விருப்பம் தான்
சூழவுள்ள மக்களுக்கு
நல்லது செய்யத் தான்
ஆனால்,
சுவாமி விவேகானந்தர் சொன்னார்
"உன்னைத் திருத்திக் கொள்
சூழவுள்ள மக்கள்
தாமாகவே திருந்துவார்கள்" என்றே
என்றாலும்
என்னைத் திருத்தப் பார்க்கிறேன்
இன்னும் முடியவில்லையே!
எல்லோருக்கும் விருப்பம் தான்
எல்லாமும் செய்யத் தான்
என்றாலும் பாருங்கோ
சாட்டுகளைப் பொறுக்கி
சறுக்கப் பல ஆளுங்க...
உயிரினை ஈகம் செய்திடத் துணிந்தே
எல்லாமும் செய்திட
முன்னிற்பவர் சில ஆளுங்க...
இப்படித் தான்
நம்மாளுங்க இருந்தால்
எப்படித் தான்
நம்ம வீடும் நாடும் உலகும்
மேம்பட்டு அமைதிக்குத் திரும்பும்...
எனக்கு ஒன்றும் புரியவில்லையே!
அந்த இரவில் என்ன நடக்கும்?
இணையர் இணையும் முதலிரவு
கொஞ்சம் சிறப்பாக இருக்கும் தான்...
ஆணும் பெண்ணும் உள்ளம் திறந்து
ஆளாள் உள்ளத்து எண்ணம் பகிர்ந்து
ஈருடல் ஓருயிராக இணைய முயலவே
முதலிரவு நாளன்று காலம் கரையவே
முழுமையாய் ஏதும் நிகழாமல் போகுமே!
கொஞ்சம் சிறப்பாக இருக்கும் தான்...
ஆணும் பெண்ணும் உள்ளம் திறந்து
ஆளாள் உள்ளத்து எண்ணம் பகிர்ந்து
ஈருடல் ஓருயிராக இணைய முயலவே
முதலிரவு நாளன்று காலம் கரையவே
முழுமையாய் ஏதும் நிகழாமல் போகுமே!
Friday, 25 July 2014
ஈழம் சிங்கள நாடாகிறது...
ஈழம் எங்கும்
தமிழர் வாழ்ந்த காலம் போய்
தமிழர் இடங்களுக்கு
சிங்களப் பெயர் சூட்டி
அரசும் அரச காவலர்களும்
சிங்களவரைக் குடியேற்றுவது தொடர...
பிள்ளையார் வீற்றிருக்கும்
அரச மரங்களிற்குக் கீழே
புத்தரை இருத்தி
பௌத்த கோவில்களையும் கட்ட...
ஈழம் சிங்கள நாடாகிறது...
ஈழத் தமிழர்
ஏதிலியாக உலகைச் சுற்ற
தமிழ் தலைவர்கள்
தூங்கிக் கொண்டிருக்கையில்
விடிய விடிய
எதிர்த்தவர் புலியெனச் சாகடித்து
ஈழம் எங்கும் சிங்களத் தலைகள்
நீளத் தொடங்கி விட்டன...
காலப் போக்கில்
எஞ்சியோரையும் சிங்களம் விரட்டினால்
வெளிநாட்டிலும் இடமில்லாட்டி
நடுக்கடலில்
விழவேண்டிய நிலை தான்
ஈழத் தமிழருக்கு - இந்தச் செய்தி
உலகத் தமிழரின் காதுக்கு எட்டுமா!
தமிழர் வாழ்ந்த காலம் போய்
தமிழர் இடங்களுக்கு
சிங்களப் பெயர் சூட்டி
அரசும் அரச காவலர்களும்
சிங்களவரைக் குடியேற்றுவது தொடர...
பிள்ளையார் வீற்றிருக்கும்
அரச மரங்களிற்குக் கீழே
புத்தரை இருத்தி
பௌத்த கோவில்களையும் கட்ட...
ஈழம் சிங்கள நாடாகிறது...
ஈழத் தமிழர்
ஏதிலியாக உலகைச் சுற்ற
தமிழ் தலைவர்கள்
தூங்கிக் கொண்டிருக்கையில்
விடிய விடிய
எதிர்த்தவர் புலியெனச் சாகடித்து
ஈழம் எங்கும் சிங்களத் தலைகள்
நீளத் தொடங்கி விட்டன...
காலப் போக்கில்
எஞ்சியோரையும் சிங்களம் விரட்டினால்
வெளிநாட்டிலும் இடமில்லாட்டி
நடுக்கடலில்
விழவேண்டிய நிலை தான்
ஈழத் தமிழருக்கு - இந்தச் செய்தி
உலகத் தமிழரின் காதுக்கு எட்டுமா!
Subscribe to:
Posts (Atom)