தமிழில் எழுதுறாங்கோ...
உலக மொழிகள் கலந்த
உப்பு, புளி, காரம் இல்லாத
கூட்டுக்கறி (சாம்பாரு) போல...
உயிர், மெய், உயிர்மெய் அற்ற
வெறும் எழுத்தாக எழுதுறாங்கோ...
நம்மாளுகளும் படிக்கிறாங்கோ...
படிச்ச பின் மறக்கிறாங்கோ...
உண்மைத் தமிழில் எழுதினால்
உண்ணாணத் தான்
எவர் தான் மறப்பாங்கோ...
எழுதுறாங்கோ...
எழுதுறாங்கோ - எவரும்
உண்மைத் தமிழ் அற்ற
உலக மொழிகளின் கலப்பாக
படித்தாலும் மறக்க இலகுவாக
எழுதுறாங்கோ... எழுதுறாங்கோ...
உயிரும் மெய்யும் கலந்து எழுதாவிடின்
சொல்கள் உருவாக மாட்டாதே...
உணர்வுகள் கலந்து எழுதாவிடின்
படைப்புகள் உருவாக மாட்டாதே...
சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கு
தமிழில் தீராக் காதல் - அது தான்
பிறமொழி கலந்து எழுதினால்
தமிழ் படைப்பல்ல என்கிறான்!
Wednesday, 27 August 2014
Tuesday, 26 August 2014
சிறப்பு நடைபேசி (Smart Phone) தரும் நன்மைகளை அறிவீர்களா?
கீதா: சிறப்பு நடைபேசி (Smart Phone) எமக்கு நன்றாக உதவுதே!
கயன்: எப்படி? எப்படி?
கீதா: நாங்க நடந்து கொண்டே வலைப்பூக்கள், வலைப்பக்கங்கள் பார்த்துக் கொண்டே செல்லலாம்!
கயன்: அது சரி! ஆனால், சிலர் சாகிறாங்களே! (மேலே படத்தைப் பாருங்கள்)
கீதா: எப்படி? எப்படி?
கயன்: நடைவழியே / வழி நெடுக சிறப்பு நடைபேசி (Smart Phone) பார்த்துக் கொண்டே செல்வதால் சிலர் விபத்துக்குள்ளாகிச் சாகிறாங்களே!
கயன்: அது சரி! ஆனால், அது சிறப்பு நடைபேசிப் (Smart Phone) பயனாளர்களின் தவறே!
ஈற்றில் சரி! சரி! என இருவரும் பிறந்த நாள் சாப்பாடுண்ண உணவகம் ஒன்றிற்குச் சென்றனர்.
Sunday, 24 August 2014
மக்களாயமே எனது பல்கலைக்கழகம்
"சமூகம்" என்பது வடசொல் - அதன்
தமிழ் வடிவம்
"மக்களாயம்" என்றே பொருள்படும்!
நான் என்றால்
மக்களாயத்தில் ஓர் உறுப்பினரே!
அதனால் தான் - என்னை
"மக்களாயத்தில் தங்கியிருக்கிறேன்" என்று
உங்களால் கூற முடிகிறதே!
நாம்
முழு நிறைவோடு(சுதந்திரமாக) வாழ
மக்களாயம் உடன்படாது என்பது
முற்றிலும் பொய்யே!
நம்மாளுகளின் ஒழுக்கத்தைப் பேண
வேலியாக நின்று
காவல் செய்வது மக்களாயமே!
என்னை
எடுத்துக் கொண்டால் பாரும்...
வெற்றிலை, பாக்குப் போட்டாலென்ன
புகையிலை, சுருட்டு பற்றினாலென்ன
அழகி ஒருத்தி பின்னே சுற்றினாலென்ன
அற்ககோல்(மது) குடித்தாலென்ன
விடுதியில் கன்னியோடு களிப்புற்றாலென்ன
சிவப்பியிருக்க கறுப்பியோடு காதலித்தாலென்ன
கடைத் தெருவில் களவெடுத்தாலென்ன
பணித்தளத்தில் கையூட்டுப் பெற்றாலென்ன
எண்ணிப் பார்த்தால் - நான்
பண்ணிய கெட்டது எல்லாவற்றையுமே
நாடறியச் செய்வதும் மக்களாயமே!
பால் கடைக்கு முன்னே
பனம் கள்ளுக் குடித்ததைக் கூட
பள்ளிக்கூட ஆசிரியருக்குப் போட்டுடைத்து
பிரப்பந் தடியால அடிவேண்டித் தந்ததும்
மக்களாயமே என்றால்
மக்களாயத்தின் கண்காணிப்பு
எவ்வளவு வலுவானது என்பதை
நீங்கள் அறிவீர்கள் தானே!
நம்மூர்
மக்களாயத்திடம் சிக்காமல் தப்ப
வெளியூர் போய்
கெட்டது செய்து சிக்கியோரும்
இருக்கிறார்கள் என்றால்
ஊருக்கூர் மக்களாயம்
பலவூரை இணைத்த வலையாக இருப்பதை
எவரும் ஏற்கத்தானே வேண்டும்!
சந்திக்குச் சந்தி
சந்திக்கும் நம்மாளுகள் பேசிக்கொள்வதை
"நாட்டு நடப்புப் பறையினம்" என்று
நாம் இருப்போம்
ஆனால்,
அங்கே அவர்கள் பறையிறதை
காது கொடுத்துக் கேட்டால் தெரியும்
"அவள் அவனோடு ஓடிப் போயிட்டாள்"
"அவளை அவன் தூக்கிட்டுப் போயிட்டான்"
"வயிற்றுப் பிள்ளையைக் கரைத்தவளாச்சே"
என்றெல்லாம்
ஆளாலைப் பற்றி அலசுவரே!
இப்படித்தான் பாருங்கோ
சந்திக்குச் சந்தி
சந்திக்கும் நம்மாளுகளால் தான்
செய்தி வேகமாகப் பரவுகிறது என்றால்
மக்களாய வலையமைப்பின் பலம்
என்னவென்று நான் பாடுவேன்!
கெட்டதைச் சுட்டும் மக்களாயம்
குறித்த கெட்டது நிகழாமல்
வழிகாட்டலையும் மதியுரையையும்
வழங்கத் தவறுவதில்லை என்பதை
சந்திக்குச் சந்தி
சந்திக்கும் குழுவில் நானுமிருந்தே
நாலும் கற்றறிந்தேன்!
பட்டப் படிப்பு படிக்காத
நான் கூட
கொஞ்சம் கொஞ்சம் படித்ததை
அறிமுகம் செய்த மக்களாயம்
என்னில் பிழை பிடித்தாலும்
சரிப்படுத்தப் புகட்டிய அறிவே
என்னை அறிஞனாக்கியது என்றால்
மக்களாயமே
எனது பல்கலைக்கழகம் என்பேன்!
Wednesday, 20 August 2014
தைப்பொங்கல் 2010
பொங்கலோ பொங்கல்...
கதிரவன் முகம் பார்த்து
வேளான்மை விளைச்சல்
பெற்றெடுத்த உழவர்கள்
பொங்கும் பொங்கல்!
பால் வடியும்
பானை முகம் பார்த்து
பொங்குவோர் எண்ணுவது
இம்முறை எப்பக்கம்
விளைச்சல் பெருகும் என்பதையே!
தை பிறந்தால் வழி பிறக்குமென
எம்மவர்
பொங்கல் பானை கீழிறங்க முன்னரே
கதிரவனைப் பார்த்து
நடப்பு ஆண்டு
எண்ணங்களைப் பெருக்குவரே!
கதிரவனுக்குப் பொங்கிப் படைத்ததும்
பழையன கழிந்து, கெட்டவை ஒழிந்து
நன்மைகள் பல...
நமக்குக் கிடைக்குமென நம்பியே
எல்லோரும் கூடி உண்டு மகிழ்வரே!
நம்பிக்கைகள் தான்
எங்களுக்கு வழிகாட்டும்
ஒளி விளக்குகள்!
இவ்வாண்டுத் தையிலும்
நல்லன இடம்பெற, வெற்றிகள் குவிய
நம்பிக்கைகள் ஈடேற
உலகிற்கு ஓர் ஒளி முதல்வன்
எம்முடன் இருப்பானென நம்புவோம்!
புலிகள் அழிந்த பின்; ஈழப் போர் நின்ற பின்; வந்த 2010 தைப்பொங்கல் குறித்து எழுதிய பாவிது.
கதிரவன் முகம் பார்த்து
வேளான்மை விளைச்சல்
பெற்றெடுத்த உழவர்கள்
பொங்கும் பொங்கல்!
பால் வடியும்
பானை முகம் பார்த்து
பொங்குவோர் எண்ணுவது
இம்முறை எப்பக்கம்
விளைச்சல் பெருகும் என்பதையே!
தை பிறந்தால் வழி பிறக்குமென
எம்மவர்
பொங்கல் பானை கீழிறங்க முன்னரே
கதிரவனைப் பார்த்து
நடப்பு ஆண்டு
எண்ணங்களைப் பெருக்குவரே!
கதிரவனுக்குப் பொங்கிப் படைத்ததும்
பழையன கழிந்து, கெட்டவை ஒழிந்து
நன்மைகள் பல...
நமக்குக் கிடைக்குமென நம்பியே
எல்லோரும் கூடி உண்டு மகிழ்வரே!
நம்பிக்கைகள் தான்
எங்களுக்கு வழிகாட்டும்
ஒளி விளக்குகள்!
இவ்வாண்டுத் தையிலும்
நல்லன இடம்பெற, வெற்றிகள் குவிய
நம்பிக்கைகள் ஈடேற
உலகிற்கு ஓர் ஒளி முதல்வன்
எம்முடன் இருப்பானென நம்புவோம்!
புலிகள் அழிந்த பின்; ஈழப் போர் நின்ற பின்; வந்த 2010 தைப்பொங்கல் குறித்து எழுதிய பாவிது.
Tuesday, 19 August 2014
புதிதாக என்ன பண்ணுவோம்?
விடிந்தால் புதிய நாள் - அன்று
புதிதாக என்ன தான்
அமையப்போகிறது?
எல்லோரும்
நேற்றைய முகங்களே...
எல்லாம்
நேற்று நடந்தவைகளே...
அப்படியே தான்
ஆண்டுகள் மாறினாலும்
ஆள்களின் அகவை ஏறினாலும்
பட்டறிவெனச் சொல்லியே
பழசுகளைக் கிளறி விடாமல்
புதிய நாளில்
புதிதாக எத்தனை தான்
எண்ணிவிட முடியும்...
அடைய வேண்டியதை
அன்பாலே அடைவோம்...
காண வேண்டியதை
நல்லதாகக் காண்போம்...
பார்க்க வேண்டியதை
பணிவோடு பார்ப்போம்...
கேட்க வேண்டியதை
இனிமையாகக் கேட்போம்...
செய்ய வேண்டியதை
நன்மைக்கே செய்வோம்...
தொடங்க வேண்டியதை
வெற்றி கிட்டுமெனத் தொடங்குவோம்...
எண்ணங்கள் தான்
எமக்கு வழிகாட்டுவன....
அப்படியாயின், எண்ணம் போல்
எல்லாம் ஈடேறுமாம் என்றால் சரியா?
இல்லைப் பிழை தான்!
எண்ணுவதெல்லாம்
நல்லெண்ணங்களாக இருப்பதனாலேயே
எல்லாம்
நன்மையிலும் வெற்றியிலும் முடிய
எங்கள்
ஆளமான உள்ளம்(ஆழ் மனம்)
எம்மை இயக்குகிறதே!
புதிய நாளில்
புதிதாக என்ன பண்ணுவோம்?
எங்கள் உள்ளத்தில்
நாள் தோறும்
நல்லெண்ணங்களை விதைப்போம்
நல்லனவெல்லாம் பெறுவோமே!
Friday, 15 August 2014
நல்லுறவும் நமது முடிவிலேயே...
பணத்தை வைத்தோ
படிப்பை வைத்தோ
இணையாத உறவது
அன்பை வைத்தே
அணைந்த உறவிலேயே...
விரிசல் வந்தால் போதுமே
நல்லுறவும் கெட்டுப் போகுமே!
உள்ளத்திலே
உண்மை அன்பிருக்க
உடனடி முடிவும்
உறவை முறிக்கலாமே...
அன்பின்றித் தொற்றிய உறவை
அன்பாக அணைத்தாலும்
நெருங்கிய உறவாகலாமே...
உறவு கெட்டுப் போகாமல்
பார்த்துக் கொண்டால் நன்றே!
நம்மவர் நல்வாழ்விலே
பழகிய உறவுகள் பாதியில் பிரியலாம்
காலம் கரைய
தவறுகள் உணரத் தேடியே வரலாம்
பழசை மறந்து - நாம்
பணிவாய் நல்லுறவைப் பேணுவோமே!
நிலையற்ற வாழ்விலே
நிலையான உறவின்மைக்கு
மனித முடிவே எதிரி...
தடுமாறும் உள்ளத்தை
தளரவிடாமல் பேணினால் தானே
உறுதியான முடிவெடுத்தே
நிலையான உறவைப் பேண இடமுண்டே!
நாம் எடுக்கின்ற
ஒவ்வொரு நல்ல முடிவிலேயும் தான்
நெடுநாள் நிலைக்கக் கூடிய
நமது உறவுகளைப் பேண முடிகிறதே!
படிப்பும் சான்றும்
"படித்ததன் பயனென்ன படித்தே அறிந்தால்
படித்தவர் எவரென்று அறி!" என்று
நான் சொன்னால் பயனில்லைப் பாரும்
அவரவர் பட்டறிந்தால் பயனுண்டே!
பயனீட்டும் பயனர் கூறுவதே
உங்கள் படிப்பின் சான்றென்பேன்!
படித்தவர் எவரென்று அறி!" என்று
நான் சொன்னால் பயனில்லைப் பாரும்
அவரவர் பட்டறிந்தால் பயனுண்டே!
பயனீட்டும் பயனர் கூறுவதே
உங்கள் படிப்பின் சான்றென்பேன்!
Thursday, 14 August 2014
நிறைவு (சுதந்திரம்) கிட்டுமா?
நான்
விரும்பியவாறு
பறக்க வேண்டும்
நீந்த வேண்டும்
நடக்க வேண்டும்
மொத்தத்தில்
என் விருப்பப்படி
வாழ வேண்டும்
வாழ்வில்
அச்சம்(பயம்) இன்றி
மகிழ்வோடு முன்னேற வேண்டும்
என் அடையாளம்
என் மொழியின் அடையாளம்
என் இனத்தின் அடையாளம்
என் நாட்டின் அடையாளம்
சுட்டி
உலகம்
என்னை விரும்ப வேண்டும்
இத்தனையும்
கிடைக்காத வரை
எனக்கு
நிறைவு(சுதந்திரம்) இல்லையே!
2012 இந்திய குடியரசு தினத்தை ஒட்டி எழுதியது.
அந்த நாள் நினைவுக்கு வர
அந்த நாள் நினைவை மீட்டிய
ஒளிஒலிநாடா ஒன்று
என்னை
சில வரிகள் எழுதத் தூண்டுகிறதே!
வன்னிப் பெரும் நிலப்பரப்பில்
இடம்பெற்ற ஈற்றுப் போரில்
சிக்குண்டு விடுதலையான
என் வாழ்வையும்
மீட்டுப் பார்க்கின்றேன்!
ஒளிஒலிநாடாவில்
என்னைத் தேடிப் பாருங்கள்...
குண்டு பட்டு வீழ்ந்திருக்கலாம்...
வானவூர்திகள்
குண்டு மழை பொழிய
மண்கிடங்கில் மறைந்திருக்கலாம்...
சாவா வாழ்வா என்றவாறு
குற்றுயிராகத் துடிக்கலாம்...
உண்ண உணவின்றி
சேலைத் துணியால் வடித்து
சேற்று நீர் குடிக்கலாம்...
சிலர் காய்ச்சிக் கொடுத்த
கஞ்சிக்கு
நீண்ட வரிசையில் காத்திருக்கலாம்...
இன்னும் எழுதலாம்;
அந்த நாள் நினைவுக்கு வர
அழுகையும் வர
எழுதுகோலும்
எழுத மறுக்கிறதே!
http://www.youtube.com/watch?v=h4sGy6jPdWM&feature=share
ஒளிஒலிநாடா ஒன்று
என்னை
சில வரிகள் எழுதத் தூண்டுகிறதே!
வன்னிப் பெரும் நிலப்பரப்பில்
இடம்பெற்ற ஈற்றுப் போரில்
சிக்குண்டு விடுதலையான
என் வாழ்வையும்
மீட்டுப் பார்க்கின்றேன்!
ஒளிஒலிநாடாவில்
என்னைத் தேடிப் பாருங்கள்...
குண்டு பட்டு வீழ்ந்திருக்கலாம்...
வானவூர்திகள்
குண்டு மழை பொழிய
மண்கிடங்கில் மறைந்திருக்கலாம்...
சாவா வாழ்வா என்றவாறு
குற்றுயிராகத் துடிக்கலாம்...
உண்ண உணவின்றி
சேலைத் துணியால் வடித்து
சேற்று நீர் குடிக்கலாம்...
சிலர் காய்ச்சிக் கொடுத்த
கஞ்சிக்கு
நீண்ட வரிசையில் காத்திருக்கலாம்...
இன்னும் எழுதலாம்;
அந்த நாள் நினைவுக்கு வர
அழுகையும் வர
எழுதுகோலும்
எழுத மறுக்கிறதே!
http://www.youtube.com/watch?v=h4sGy6jPdWM&feature=share
மக்களால் நன்கு அறியப்பட்டவனாக (பிரபலமாக)
என்னை
உங்களுக்கு
அதிகம் அறிமுகம் செய்பவர்கள்
என் எதிரிகளே...
எதிரிகள்
என்னைப் படிக்காதவன் என்பர்
ஆனால்
நீங்களோ
நான் படித்ததைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை கள்ளச் சான்றிதழ் பெற்றவன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனது தகுதியின் படி
நேர்மையான சான்றிதல் எனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைக் கெட்டவன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனது நல்லதைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் கள்ளன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனது நேர்மையைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பெண்பிள்ளைப் பொறுக்கி என்பர்
ஆனால்
நீங்களோ
எனது கற்பைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பலரைக் காதலித்தவன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனக்குக் காதலியில்லையெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பல மனைவிக்காரன் என்பர்
ஆனால்
நீங்களோ
என் மனைவி யாரெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை அரசியல்வாதி என்பர்
ஆனால்
நீங்களோ
நான் மக்கள் தொண்டனெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பொல்லாதவன் என்பர்
ஆனால்
நீங்களோ
நான் நல்லவனெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை இழிவுபடுத்துகையில் நம்பாமல்
நீங்களோ
என் சூழலைப் பகுப்பாய்வு செய்து
என் உண்மையைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை அழிக்க வருகையில்
நீங்களோ
என் உயிரைக் காத்த
என் சூழலிலிருந்த பொதுமக்களே!
எதிரிகளுக்குத் தெரியாதது
சான்று காட்டியே
இழிவுபடுத்த வேண்டுமென்று...
அதனாலன்றோ
என்னை
நீங்கள் பகுப்பாய்வு செய்ய முடிந்ததே
இதனாலன்றோ
உங்களுக்குள்ளே - நான்
அறிமுகமாக முடிந்திருக்கிறதே!
மக்களுக்குள்ளே என்னை இழிவுபடுத்தினால்
நான்
மக்களால் நன்கு அறியப்பட்டவனாவேனென
எப்ப தான்
எதிரிகள் படிக்கப் போகிறார்களோ
எனக்கும் தெரியவில்லையே!
Subscribe to:
Posts (Atom)

