Wednesday, 31 July 2013

நம்மூரைப் போல வருமா?

ஒரு நாளும் காணாத
தெருமுகம் தான்
அவன்!
அண்ணே! அண்ணே!
நாலு காசு
கொடுங்க அண்ணே...
போக்குவரவுக்குப் பணம்
இல்லாமல்
செய்திட்டாங்கண்ணே!
அடிக்கடி
படிக்கத் தோன்றும்
அவன் வரிகள்!
உறவுக்காரங்க
விறகுக்கட்டை போல
இருந்துட்டாங்கண்ணே!
ஊரில என்றால்
பச்சைத் தண்ணியோட
காலம் போயிருக்கும்...
வேற்றூரில
மாற்றினத்தின் முன்னே
என்னை நம்ப எவருமில்லாத
இவ்விடத்தில
இருக்க வழியில்லாமல்
ஊருக்குப் போக உதவுங்கண்ணே!
அடுத்துத் தொடுத்துச் சொன்ன
அவ்வளவும் - என்
உள்ளத்தைத் தைத்தது!
நானோ பிச்சைக்காரன்...
கட்டைக் கால்
சட்டைப் பைக்குள்ளே
கையை விட்டு
கைப்பிடி குற்றிக் காசுகளை
அள்ளிக் கொடுத்தேன்!
"எந்த ஊரானாலும்
நம்மூரைப் போல வருமா?
எந்நாடானாலும்
நம்நாட்டுக்கு ஈடாகுமா?"
என்றாடிப் பாடி
ஊருக்குப் போற பேருந்தில
துள்ளிப் பாய்ந்தேறினான்
அந்தத் தெருமுகம்!

இளமையில் படிக்காட்டி...

படிக்க, வேண்டிய
அகவையில் இருந்தவர்
பெற்றோர் ஏழ்மையால்
படிப்பை விட்டதால்
துடிக்கும் துயர வாழ்வில்
நம்மவர் தேடும்
வருவாயும் வேலையும் கிட்டாமல்
தெருவழி அலையும்
இன்றைய
நிலைப்பாட்டைப் பாரும்!

ஏழை வீடு

ஓட்டைகள் நிரம்பிய
ஓலைக் குடிசையைப் பார்
வீட்டாரை எழுப்புற மாரிமழை தேடிவர
யாரிடம் சொல்லியழலாமென
ஏழைகள் வீட்டின் உண்மையை
சாலைகள் வந்தேறிக் காணுவீர் நீங்களே!

Sunday, 14 July 2013

பெறுமதியைப் பார்த்துக் காதலிப்பேனுங்க...

ஆண்: காதலர் நாளில் நீங்கள் என்னைக் காதலியுங்களேன்!

பெண்: உங்களிடம் இருக்கின்ற பணத்தின் பெறுமதியைப் பார்த்துத் தான் சொல்லுவேனுங்க!

-------------வேறு--------------

பெண்: காதலர் நாளில் நீங்கள் என்னைக் காதலியுங்களேன்!

ஆண்: உங்களைப் பெத்தவங்க கொடுக்கிற சீர்வரிசையின் பெறுமதியைப் பார்த்துத் தான் சொல்லுவேனுங்க!

நீ என்னைக் கட்டுவியா?

ஆண்: நீ என்னைக் கட்டுவியா?

பெண்: நானோ மகளுக்குத் துணை தேடுகிறேன்!
நீ என்னைக் கட்டுறியோ?

-----------வேறு------------------

பெண்: நீ என்னைக் கட்டுவியா?

ஆண்: ஒன்றுக்கு இரண்டைக் கட்டிப்போட்டு
முளிசுகிறேன். நீயோ மூன்றாவதாக வரலாமா?

படிப்பில்லாத தொழில்

ஆசிரியர் : படிப்பைப் பயன்படுத்தாத தொழில் ஒன்று சொல்லுங்கோ?

மாணவர் : அதைக் கூடப் படிச்சால் தானே தெரிய வரும்!

நான் சாவடைந்தால் நால்வர் வேண்டும்!

நல்ல உறவுக்கு எள்ளையும் பங்கிட்டு உண்
வெல்ல முயன்றால் பயின்று பழகிக் கொள்
நாலு நட்புக்கு நல்ல அன்பு வேண்டும்
சுடலைக்கு நடைபோட நாலு நட்பு வேண்டும்
"உன்னை நீ அறி"

தண்டின புக்கை

சின்னவர் : என்னங்க பெரியவர் பொங்கிப் படைச்சாச்சோ?

பெரியவர் : வாங்கோ சின்னவர் பொங்கின புக்கையை விடத் தண்டின புக்கை நிரம்பக் கிடக்கு!

சின்னவர் : எப்படி ஐயா?

பெரியவர் : இன்று பிச்சை எடுப்பதிற்குப் பதிலாகப் புக்கை எடுத்தேன்!

சாகாமல் வாழப் பாருங்கோ

முகத்தார்: வலன்ரைன் நாளில என்ன பண்ணுவீங்கள்

சிவத்தார்: காதலில தோல்வியுற்றவர் செய்யிறதைத் தான்

முகத்தார்: அப்ப சாவீட்டுக்கு ஏற்பாடோ...?

கைக்கெட்டியதே போதும்

ஒருவர் : பணம், பொன், பொருள் எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டு ஓடுறியே! தேட்டம் இல்லையென்று அறிவாயா?

ஒடியவர் : கைக்கெட்டியதே எனக்குப் போதும்! எஞ்சியது; களவு எடுத்த என்னைப் பிடிக்க வரும் காவற்றுறைக்குக் கையூட்டு!