Tuesday, 6 January 2015

தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?

உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி

தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா? என்பது பதிவர்கள் பக்கமாய்க் கிளம்பும் கேள்விக்கணை இதுதான். உழவர் பெருநாள், ஞாயிற்றுப் பொங்கள், தமிழர் புத்தாண்டு எனப் பல சிறப்புக்களைக் கொண்ட தைப்பொங்கலே முதல் தேவை! அப்படியெனின் சிறுகதைப் போட்டியை என்ன செய்யலாம்? இரண்டாம் இடத்தில் வைக்கலாம். ஆயினும் முதலாம் இடத்துத் தைப்பொங்கலைப் பற்றி உலகம் எங்கும் படிப்பிக்க இரண்டாம் இடத்துச் சிறுகதைப் போட்டி உதவலாம் என்பதை; எவரும் மறக்கமாட்டார்கள் என்பதை நான் நம்புகின்றேன். ரூபன் குழுவினரின் பெரிய மதியுரைஞர்கள் பண்டிகை நாட்களில் போட்டி நடாத்துவதை இப்படித்தான் எண்ணிச் செயலில் இறங்கி இருப்பார்கள் என நம்புகின்றேன்.

உங்க நாட்டு, உங்க ஊரு, உங்க வீட்டு, சிலருக்கு காதலன்/ காதலி வீட்டுப் பொங்கல் பற்றி இழையோடி அப்பண்டிகை நாளில் நள்ளிரவின் பின் ஞாயிற்றுக் கதிர்கள் முற்றத்தில் வந்து விழ பொங்கல் பானை பொங்கி வழியும் வரை நடந்ததென்ன? அதனை ஒரு சிறுகதை ஆக்கி அனுப்பலாமே! 2015 பொங்கல் நாள் என்றதும் கடந்த காலப் பொங்கல் நாட்களில் நிகழ்ந்த சுவையான செய்திகளையும் சிறுகதை ஆக்கி அனுப்பலாமே!

என்னங்க சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா? அப்ப நான், நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் உங்கள் கூகிள்+, லிங்டின், டுவிட்டர், பேஸ்புக் சுவர் பகுதிகளில் கீழ்வரும் இணைப்பை அறிமுகம் செய்து உதவுங்கள்.
http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html

அல்லது உங்கள் வலைப்பூக்களில் இடது/வலது பட்டை விட்ஜற் ஆக கீழ்வரும் இணைப்பைப் புகுத்தி விடுங்கள்.
<a target="_blank" href="http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html" title="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி">
<img src="http://yarlpavanan.files.wordpress.com/2015/01/2015-01-01_074945.jpg" height="200" width="200" alt="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி"></img>
</a>

“எப்படி இருப்பினும் எனக்குச் சிறுகதை எழுத வராது” என்று பின்னடிப்பவர்களும் இருக்கிறார்கள் பாருங்கோ! அவர்கள் சின்னப் பொடியன் யாழ்ப்பாவாணன் எழுதிய கீழ்வரும் பதிவுகளைப் படித்த பின்னர் தானும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாமே!
கதைகள் புனையலாம் வாருங்கள்! (http://wp.me/pTOfc-aP)

என்னங்க நீங்கள் சிறுகதை எழுதக் கூடியவரா? “சிறுகதை எழுதுவது எப்படி?” என எதாவது பதிவு செய்திருக்கிறீர்களா? இந்தச் சிறுகதைப் போட்டியில் ஆகக் குறைந்தது நூறு பதிவர்களைப் போட்டியில் இணைக்கவல்ல பதிவுகளை உங்கள் வலைப்பூக்களில் ஆக்கி உதவுங்கள். அதற்குக் கீழ்வரும் இணைப்பைப் பாவிக்கலாம். இதனையே எனது பதிவின் தொடக்கத்தில் இட்டேன்.
<a target="_blank" href="http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html" title="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி">
<img src="http://yarlpavanan.files.wordpress.com/2015/01/2015-01-01_074945.jpg" height="480" width="640" alt="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி"></img>
</a>

தைப்பொங்கல் நாளை முன்னிட்டு நடைபெறும் சிறுகதைப் போட்டியில் அதிகமானோர் பங்குபற்ற ஒவ்வொருவரும் உதவுங்கள். போட்டியில் சிறப்படைய எல்லோரும் பங்குபற்றலாம். இப்போட்டியின் வெற்றியே அடுத்து வரும் போட்டிகளாக நகைச்சுவைப் போட்டி, நாடகப் போட்டி, பாட்டுப் போட்டி, மரபுக் கவிதையாக அந்தாதிப் போட்டி எனப் பல நடாத்த உதவுமென நம்புகிறேன்.




Tuesday, 30 December 2014

வறுமை

வறுமை என்பது
வாழ்க்கையை நடாத்த
ஏதுமின்றித் துயருறும் நிலையா?
வறுமை என்பது
கிடைக்க வேண்டியது
கிடைக்காமையால் ஏற்பட்டதா?
வறுமை என்பது
முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையா?
வறுமையை விரட்ட
முயலாமை இருந்ததா?
வறுமையைப் போக்க
வழிகள் கிட்டவில்லையா?
உடல்நலக் குறைவா
முடமான உடலா
தொழிலின்றி வறுமையை அணைக்க...
பாவலர்களே!
எங்கும் எதிலும் எப்போதும்
வறுமை இருப்பதாகப் பாடுவதை
நிறுத்துங்கள்...
வறுமையைப் போக்க
வழிகாட்டுங்கள்
வறுமையை விரட்டப் போராட
கற்றுக்கொடுங்கள்
வறுமை என்பது
மறுமையிலும் வாழ்வில் நெருங்க
இடமளிக்காமல் பாபுனையுங்களேன்!
பாவலர்களுக்கு வறுமையே
பாவன்மையை ஊட்டுமென்றால்
நம்மாளுகளை வறுமை நெருங்கினால்
நல்வாழ்வை அமைக்க
நெருங்கிய வறுமையும் வழிகாட்டுமே!
வறுமையால் சாவு
வறுமையால் பின்னடைவு
வறுமையால் மருத்துவராகவில்லை
வறுமையால் ஊரே ஒதுக்கியது
போதும் போதும் போதும்
வறுமை தந்த வெறுமையால்
இன்னும்
எத்தனையோ துயரச் செய்திகள்...
வறுமை தந்த துயரச் செய்திகளென
இனிமேலும்
எம் காதுக்கெட்டாமல் இருக்க
இனியொரு வழிசெய்வோம் வாருங்கள்!

வறுமை (http://tamilnanbargal.com/node/40668) என்ற கவிதைக்குப் பதிலாக எழுதியது.

பொய்யும் மெய்யும்

பார்ப்பதற்கும் அழகாயிருக்கும்
கேட்பதற்கும் அழகாயிருக்கும்
ஆனால், அதனை
ஆய்வு செய்தால் (தீர விசாரித்தால்) தான் பொய்!
அது தான்
அன்றைய ஆள்கள் சொன்னாங்க
"கண்ணால் பார்ப்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
முழுமையாய்
ஆய்வு செய்தால் தான் மெய்!" யென்று!

Tuesday, 23 December 2014

அடையாளம்

தேவை ஏற்பட்டால் மட்டுமே
நம்மாளுகள்
எதையாச்சும் எண்ணிப்பார்க்கிறார்கள்...
எதையாவது கண்டுபிடிக்கிறார்கள்...
உதவிகள் கிட்டும் வேளை
தேவைகள் ஏற்படாமல் போக
எண்ணிப்பார்க்க ஏதுமின்றி
கண்டுபிடிக்க ஏதுமின்றி
நம்மாளுகள் முட்டாளாகின்றனரே!
என்னைப் பொறுத்தவரையில்
கடவுள் போல வந்து உதவினார்களென
உதவியோருக்கும் நன்றி கூறுவேன்...
கடவுள் எம்மைப் படைத்தது போல
நானும்
ஏதாவது எண்ணிப் படைக்க வழிவிட்ட
உதவாதவர்களுக்கும் நன்றி கூறுவேன்...
ஏனெனில் - அது தான்
எனது அடையாளம் என்பேன்!

Friday, 19 December 2014

மூடி வைக்க முடியுமா?

ஆயிரம் முறை சொன்னாலும்
பொய் உண்மையாகாது
ஆயிரம் முறை மறைத்தாலும்
உண்மை பொய்யாகாது
ஆயிரம் முறை இருந்தாலும்
முழுப் பூசணியை
மூடி வைக்க இயலுமா?
அது போலத் தான்
ஆயிரம் உறவுகள் தடுத்தாலும்
உள்ளத்திலே உண்மைக் காதலை
மூடி வைக்க இயலுமா?

Saturday, 13 December 2014

காதலும் பூக்களைப் போலவே!


பூக்கள் என்றும் அழகானவை
அழகான பூக்கள் எம்மை இழுக்கும்
இழுக்கும் பூக்களில் கிடக்கும் முட்கள்
முட்செடிப் பூக்கள் மணம் தராதே!
மணம் தராத பூக்களில் ஏதுமில்லை
ஏதுமில்லாப் பூக்களில் தேனிருக்கும்
தேனிருக்காத பூக்களில் கள்ளிருக்கும்
கள்ளிருக்காத பூக்களில் வண்டுமிருக்காதே!
வண்டுமிருக்காத பூத்தானோ காதல் பூ
காதல் பூ என்பதாலோ அழகுப் பெண்
அழகுப் பெண் முகத்தில் பூசல்மாவோ
பூசல்மாப் பெண்ணில் மணம் வீசவோ!
மணம் வீசப் பூசுதண்ணியும் உண்டோ
உண்டெனப் பணமும் வெளிப்படுமோ
வெளிப்பட்ட பணத்திலும் மணத்திலும் காதலா?
காதலே காலம் கடந்து பிரிவதற்கே!
பிரிவதற்கேயான காதல் பூவா பெண்
பெண்ணைப் பூவாக்கி மணம்கெட வீசவா?
வீசிய பூவழுதால் காதல் தோல்வியா?
தோல்விக்கு உள்ளம் விரும்பாத பூக்களே!
பூக்களே பகை வேண்டாம் புரிந்திடு
புரிந்தால் ஆண்களும் காதல் பூவே
காதல் பூவாம் ஆண்களும் பணமிழப்பர்
பணமிழந்தவர் தோற்றிட காதலும் பூக்களாகவே!

பூவிற்கு இத்தனை பலமா?

காற்றைக் கிழித்துக் கொண்டுவரும் மணம்
கண்ணைப் பற்றி இழுத்துச்செல்லும் அழகு
"பூக்கள்!"
 
காற்றிலே மிதந்து வரும் மணம்
ஈற்றிலே என்னை இழுக்கும் தன்பக்கம்
"பூக்கள்!"

Wednesday, 10 December 2014

எப்பவும் நாங்கள்...

எப்பவும் நாங்கள்
எங்கட பக்கத்து நிலைமைகளை
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் உள்ளத்தை
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
எப்பவும் நாங்கள்
எங்கட விருப்பங்களைப் பற்றியே
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் விருப்பங்களை
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
எப்பவும் நாங்கள்
எங்கட தேவைகளைப் பற்றியே
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் தேவைகளை
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
எப்பவும் நாங்கள்
எங்களுக்கு உதவுவோரை அல்லது வருவாயை
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் எதிர்பார்க்கும்
உதவுவோரையோ வருவாயையோ
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
இப்படி எல்லாம்
எண்ணிப் பார்க்கின்ற வேளை
உன்னைப் போல
உன் அயலானையும் விரும்பு (நேசி)
என்றன்றே பெரியோர் சொல்லி வைச்சதை
எப்பவும் நாங்கள்
எண்ணிப் பார்ப்பதில்லையே!

Tuesday, 9 December 2014

தங்களுக்கான பரிசு, சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு, சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஓர் ஏழலில் (வாரத்தில்) அவை தங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும்.

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கித் தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர் விரிப்பை அறிந்துகொள்ள முடியும்.
http://www.tamilkkavitaikalcom.blogspot.com/2014/11/2014.html

தங்களுக்கான பரிசு, சான்றிதழ் கிடைத்ததும் அவை பற்றிய கருத்துகளை நீங்கள் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகள் 2015 தைப்பொங்கள் நாள் போட்டியில் கலந்துகொள்ள உள்ளோருக்கு ஊக்கம் தருமென நம்புகிறேன்.

2015 தைப்பொங்கள் நாள் சிறுகதைப் போட்டி விரிப்புக் கீழ்வரும் தளத்தில் விரைவில் வெளிவரும்.
http://www.tamilkkavitaikalcom.blogspot.com/

2014 தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்ட எல்லோருக்கும் தங்களுக்கும் தங்களைத் தெரிவுசெய்த நடுவர்களான பெரியோருக்கும் போட்டியை நடாத்திய ரூபன் குழுவினருக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறான போட்டிகள் வலைப்பூக்களில் நல்ல தமிழைப் பேணவும் சிறந்த படைப்புகள் வெளிவரவும் உலகெங்கும் தமிழைப் பரப்பவும் எனப் பல நன்மைகளைத் தருமென நம்புகிறேன். எனவே 2015 தைப்பொங்கள் நாள் சிறுகதைப் போட்டியில் எல்லோரும் பங்குபற்றுமாறு அழைக்கின்றேன்.

Thursday, 4 December 2014

என் இனிய உறவுகளே!


எனது வேலைப்பளு காரணமாக எனது வலைப்பூக்களில் பதிவுகள் இடவோ உறவுகளின் வலைப்பூக்களில் கருத்துப்பகிரவோ முடியவில்லை. 08/12/2014 திங்கள் தொடக்கம் வலைப்பூக்களில் வழமை போல் என்னைக் காணலாம்.

எல்லோரது ஒத்துழைப்புக்கும் எனது நன்றிகள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்