எலிக் கட்சித் தொண்டர் : என்னங்க நாய்க் கட்சி, அடிக்கடி குலைத்துக் குலைத்து குழப்பம் விளைவிக்கிறாங்க...
பூனைக் கட்சித் தொண்டர் : குழப்பம் விளைவித்து நம்மாளுகள் சாவடைந்தால் தானே, அவங்க ஆட்சியில நிலைக்கலாம்...
Saturday, 31 August 2013
நல்ல நாடகம்
(ஞாயிறு விடுமுறை நாளாகையால் ஊர்க்கோழி உரிச்சுக் காய்ச்சித் தின்று முடிய தாய், தந்தை, பிள்ளைகள் வீட்டின் முன் பகுதியில் குளிர்களி வேண்டிக் குடித்த வண்ணம் இருந்தனர்.)
பிள்ளை-01 : அப்பா! ஓர் உதவி செய்வியளே!
தகப்பன் : இப்ப ஏலாது. கோழிக்கறியும் சோறும் செமிக்கப் படுத்து நித்திரை கொள்ளுங்கோ...
பிள்ளை-02 : அம்மா! ஓர் உதவி செய்வியளே!
தாய் : கொப்பர் படுக்கச் சொல்கிறார், பிறகு, எனக்கு ஏன் தொல்லை தாறியள்...
(இரண்டு பிள்ளைகளும் அறைக்குள் நுழைந்து சிறிது நேரத்தின் பின் வெளியே வந்து நின்று...)
இரண்டு பிள்ளைகளும் : அப்போய்! அம்மோய்! நாங்க படம் பார்க்கப் போறோம்...
தகப்பன் : என்ன படமடா?
இரண்டு பிள்ளைகளும் : உதில தான், "கல்லடியான்" படமாளிகையில தான்... "திண்டு வளர்ந்தான்" படந்தான்
தகப்பன் : படத்துக்குக் காசு எங்கால...
இரண்டு பிள்ளைகளும் : உங்கட கால்சட்டைக்குள்ளே கையைவிட்டு எடுத்தோம்...
தாய் : அப்பாடை காசைக் கொடுங்கோ! வாற கிழமை படம் பார்க்கலாம்...
தகப்பன் : சீ! சீ! இப்பவே போவோம்! காசைத் தாங்கோ...
இரண்டு பிள்ளைகளும் : இந்தாருங்கோ... வாங்கோ படத்துக்குப் போவோம்!
தாய் : பிள்ளைகளுக்கு இணங்கிப் போறது நல்லதுக்கில்லை...
தகப்பன் : எங்கட விருப்பத்தைத் திணித்தால், பிள்ளைகள் தங்கட கைவரிசையைக் காட்டத்தான் செய்வினம். பிள்ளைகளோட அணைஞ்சு போறது நல்லது தானே...
(பிள்ளைகள் விருப்பத்தை அறியணும் அவர்களுக்கு ஏற்றாற் போல இசையணும் என்றவாறு எல்லோரையும் படத்துக்குத் தந்தை கூட்டிச் செல்கிறார்.)
ஆளைத் தெரியுமா?
காதலன் : பா(கவிதை)ப் போட்டியென்றதும் திருவிளையாடலில் வரும் தருமி நினைவுக்கு வருகிறதே!
காதலி : எழுதிய பா(கவிதை)வுக்கு விளக்கமளிக்க ஆள் தேடிய தருமி தானே!
(இக்கருத்து எவரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. தங்கள் உள்ளம் புண்படும் ஆயின் என்னைத் தண்டிக்கவும்)
காதலி : எழுதிய பா(கவிதை)வுக்கு விளக்கமளிக்க ஆள் தேடிய தருமி தானே!
(இக்கருத்து எவரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. தங்கள் உள்ளம் புண்படும் ஆயின் என்னைத் தண்டிக்கவும்)
Wednesday, 21 August 2013
கடவுளே நிரம்பப் பிச்சை போடு
ஓடோடி நூறைக் காதலித்தேன்...
தேறியது ஒருத்தி என்றாலும்
எவராவது பிச்சை போட்டால் தான்
என் வீட்டு உலையில
அரிசி வேகுமென்பதை
அறிந்த அவளும் - என்னை
காதலிக்க மறுத்து விட்டாளே!
கடவுளே!
நிரம்பப் பிச்சை போடு
என் குடும்ப நிலை உயரவேணும்
அப்பதான் - வேறு
எவளாயினும் என்னைக் காதலிப்பாளே!
தேறியது ஒருத்தி என்றாலும்
எவராவது பிச்சை போட்டால் தான்
என் வீட்டு உலையில
அரிசி வேகுமென்பதை
அறிந்த அவளும் - என்னை
காதலிக்க மறுத்து விட்டாளே!
கடவுளே!
நிரம்பப் பிச்சை போடு
என் குடும்ப நிலை உயரவேணும்
அப்பதான் - வேறு
எவளாயினும் என்னைக் காதலிப்பாளே!
Friday, 9 August 2013
சாவா? வாழ்வா? மருத்துவரே கேட்கிறார்!
நம் மண்ணில் - ஏழைகளான
நம்மாளுகளை எண்ண
ஆண்டவனுக்கே
கண்ணில்லாட்டிப் பரவாயில்லை
அறிவு முட்டி முற்றிய - பார்வை
செறிவு மிகுந்த மருத்துவருக்குமா
கண்ணில்லை என்று - ஏழை
கண்ணீர் விட்டதை
நீங்கள் பார்த்தீர்களா?
தாங்க முடியாத நோயால்
அரச மருத்துவ மனைக்கு
விரைந்த நோயாளியைப் பார்த்து
இங்கு வசதி இல்லைப் பாரும்
அங்கு வசதி நிரம்ப - நாளைக்கே
வந்தால் செய்யலாம் சத்திரசிகிச்சை
என்றுரைக்கலாமா
இன்றே சாகத் துடிக்கும் நோயாளியிடம்!
கேட்டுப் பாரும்
நாட்டு மக்கள் நலம் பெற
நோயாளிகளுக்காய் மருத்துவமனைகளையும்
நோய் தீர்க்கும் மருத்துவர்களுக்கான படிப்பையும்
இலவசமாக அரசு வழங்க
பலமாகத் தனி்யார் மருத்துவமனைக்கு
வாவென்று அழைக்கும் மருத்துவரிடம்
ஏனென்று கேட்கத் துணிவற்ற
ஏழையாலே என்ன தான் செய்யமுடியும்?!
ஏழை சாகத் துடிக்கையிலே
கோழை மருத்துவர் கேட்ட பணத்தை
தேடிப் பெற முடியாமையால்
வாடி நின்ற ஏழை
கண்ணீர் விட்டபடி
மண்ணில்
மூச்சடைத்துச் சாவடைந்தார்!
தமிழனுக்கு முடிவோ விடிவோ எப்போது?
ஈழத் தமிழர் நிலைய
கொஞ்சம் பாருங்களேன்...
48 ஆண்டுகளுக்கு மேலாக
விடுதலைக்காகப் போராடியும்
தோல்வியைத் தழுவுவதற்கு இடையில்
உலகெங்கும் 48 நாடுகள்
விடுதலை அடைந்துவிட்டன...
அன்று 48 போராளிக்குழுக்கள்
இன்று 48 அரசியல் குழுக்கள்
தலைமைக்கும் பதவிக்கும் மோதிக்கொள்ள
வசதியுள்ளவர் எல்லோரும்
வெளிநாடுகளுக்குப் பறந்தோட
எஞ்சிய கொஞ்சமும்
ஈழத்தில் சாவது தொடர
ஈழமே சிங்கள நாடாகிறது...
இப்படியே போனால்
ஈழத்தில்
தமிழர்கள் இருக்க வாய்ப்பில்லையே!
வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு
ஓர் எட்டப்பன் போல
பண்டாரவன்னியனுக்கு
ஓர் காக்கைவன்னியன் போல
தலைவர் கரிகாலனுக்கு(வே.பிரபாகரன்)
ஓர் கருணா அம்மான்(வி.முரளீதரன்) போல
எத்தனையோ ஒற்றர்கள் இருப்பதால் தான்
தமிழர் அழிவதே முடிவாயிற்று!
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனைவரும் தாழ்வு" என
தமிழர் உணர்ந்தால்
ஒரே தலைமை ஒரே கோட்பாடென
ஓரணியில் திரண்டால்
தமிழனுக்கு விடிவு கிட்டலாம்!
உலகின் எந்த மூலையிலும்
வாழும் தமிழரே
ஈழத்தில்
தமிழர் அற்றுப் போனாலும்
உங்கள் நாடுகளிலாவது
தமிழர் அழியாமல் பேண
ஓரணியில் இணையுமாறு
2008, 2009 ஈழப் போரில்
பாதிப்புற்றவர் கெஞ்சுகின்றனர்!
கொஞ்சம் பாருங்களேன்...
48 ஆண்டுகளுக்கு மேலாக
விடுதலைக்காகப் போராடியும்
தோல்வியைத் தழுவுவதற்கு இடையில்
உலகெங்கும் 48 நாடுகள்
விடுதலை அடைந்துவிட்டன...
அன்று 48 போராளிக்குழுக்கள்
இன்று 48 அரசியல் குழுக்கள்
தலைமைக்கும் பதவிக்கும் மோதிக்கொள்ள
வசதியுள்ளவர் எல்லோரும்
வெளிநாடுகளுக்குப் பறந்தோட
எஞ்சிய கொஞ்சமும்
ஈழத்தில் சாவது தொடர
ஈழமே சிங்கள நாடாகிறது...
இப்படியே போனால்
ஈழத்தில்
தமிழர்கள் இருக்க வாய்ப்பில்லையே!
வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு
ஓர் எட்டப்பன் போல
பண்டாரவன்னியனுக்கு
ஓர் காக்கைவன்னியன் போல
தலைவர் கரிகாலனுக்கு(வே.பிரபாகரன்)
ஓர் கருணா அம்மான்(வி.முரளீதரன்) போல
எத்தனையோ ஒற்றர்கள் இருப்பதால் தான்
தமிழர் அழிவதே முடிவாயிற்று!
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனைவரும் தாழ்வு" என
தமிழர் உணர்ந்தால்
ஒரே தலைமை ஒரே கோட்பாடென
ஓரணியில் திரண்டால்
தமிழனுக்கு விடிவு கிட்டலாம்!
உலகின் எந்த மூலையிலும்
வாழும் தமிழரே
ஈழத்தில்
தமிழர் அற்றுப் போனாலும்
உங்கள் நாடுகளிலாவது
தமிழர் அழியாமல் பேண
ஓரணியில் இணையுமாறு
2008, 2009 ஈழப் போரில்
பாதிப்புற்றவர் கெஞ்சுகின்றனர்!
நேற்று, இன்று, நாளை
நான் காணும்
நம்மாளுகளின் வாழ்க்கையில்
முன் நிகழ்வு, பக்க விளைவு, பின் விளைவு
எல்லாம் ஏனென்று எண்ணிப்பார்த்தேன்!
நேற்றை மட்டும் கணக்கில் எடுத்தவன்
இன்று மீள முடியாமல்
துயருறுகிறான்!
நேற்றே
இன்றை மட்டும் கணக்கில் எடுத்தவன்
விடிகாலை எழுந்ததும்
என்ன செய்வதென்று தெரியாமல் முளிசுகிறான்!
இன்றே
நாளையை மட்டும் கணக்கில் எடுத்தவன்
விடிய விடிய
நன்றே முன்னேறினாலும்
முழுமையான மகிழ்வைத் தேடுகிறான்!
நேற்றைய படிப்பையும்
இன்றைய தேவையையும்
நாளைய இருப்பையும்
என்றும் கணக்கில் எடுத்தவன்
வெற்றியோடு மகிழ்வாய்
இருப்பதைக் காண்கின்றேன்!
நம்மாளுகளின் வாழ்க்கையில்
முன் நிகழ்வு, பக்க விளைவு, பின் விளைவு
எல்லாம் ஏனென்று எண்ணிப்பார்த்தேன்!
நேற்றை மட்டும் கணக்கில் எடுத்தவன்
இன்று மீள முடியாமல்
துயருறுகிறான்!
நேற்றே
இன்றை மட்டும் கணக்கில் எடுத்தவன்
விடிகாலை எழுந்ததும்
என்ன செய்வதென்று தெரியாமல் முளிசுகிறான்!
இன்றே
நாளையை மட்டும் கணக்கில் எடுத்தவன்
விடிய விடிய
நன்றே முன்னேறினாலும்
முழுமையான மகிழ்வைத் தேடுகிறான்!
நேற்றைய படிப்பையும்
இன்றைய தேவையையும்
நாளைய இருப்பையும்
என்றும் கணக்கில் எடுத்தவன்
வெற்றியோடு மகிழ்வாய்
இருப்பதைக் காண்கின்றேன்!
வேறுபாடு
தோள் மூட்டுத் தெறிக்க
கட்டுக் கட்டாக
பொத்தகங்கள் சுமந்தது
அந்தக் காலம்...
கனதி குறைந்த கைப்பையிலே
குட்டி மடிக்கணினியை
தோளில் மாட்டிக்கிட்டு
பள்ளிக்கு நடைபோடுவது
இந்தக் காலம்...
அந்தக் கால, இந்தக் கால
வேறுபாடுகளுக்கிடையே
நம்மாளுகள்
பள்ளிக்குப் போகாமல் ஒளிப்பது
துன்பக் காலம்...
ஏடும் எழுதுகோலுமென்ன
குட்டி மடிக்கணினியென்ன
சுமப்பது சுமையல்லவென
மூளை முழுவதும்
அறிவைத் திரட்டியவர் வாழ்வே
பொற் காலம்!
கட்டுக் கட்டாக
பொத்தகங்கள் சுமந்தது
அந்தக் காலம்...
கனதி குறைந்த கைப்பையிலே
குட்டி மடிக்கணினியை
தோளில் மாட்டிக்கிட்டு
பள்ளிக்கு நடைபோடுவது
இந்தக் காலம்...
அந்தக் கால, இந்தக் கால
வேறுபாடுகளுக்கிடையே
நம்மாளுகள்
பள்ளிக்குப் போகாமல் ஒளிப்பது
துன்பக் காலம்...
ஏடும் எழுதுகோலுமென்ன
குட்டி மடிக்கணினியென்ன
சுமப்பது சுமையல்லவென
மூளை முழுவதும்
அறிவைத் திரட்டியவர் வாழ்வே
பொற் காலம்!
Tuesday, 6 August 2013
காதலும் திருமணமும்
ஒருவன் : திருமணம் ஆவதற்கு முன்னர் நீங்கள் காதலிக்கவில்லையா?
மற்றவன் : நான் மணமுடித்த கறுப்பி, பத்தாவது காதலியென்றால் பாருங்கோவேன்...
மற்றவன் : நான் மணமுடித்த கறுப்பி, பத்தாவது காதலியென்றால் பாருங்கோவேன்...
தொழிலா? வருவாயா?
ஒருத்தி : என்னடி உன்னுடைய ஆள் வெளிநாட்டில என்கிறாய், அங்கே என்ன கீழ்நிலை வேலை செய்யுறாங்கோ?
மற்றவள் : வேலை என்னவாச்சும் உனக்கென்ன, என்னுடைய ஆள் நிரம்பப் பணம் அனுப்புறாங்கோ... அது போதாதா?
மற்றவள் : வேலை என்னவாச்சும் உனக்கென்ன, என்னுடைய ஆள் நிரம்பப் பணம் அனுப்புறாங்கோ... அது போதாதா?
Subscribe to:
Posts (Atom)