Wednesday 25 June 2014

எப்ப மாறும் இந்த நிலை



பிச்சைக்காரர்கள் திரட்டும் பணத்தை
வங்கியில் இடுவதும்
தானியங்கி (ATM) இயந்திரத்தில் எடுப்பதும்
வழக்கம் ஆயிட்டுது என்கிறீங்க...
ஒரு பிள்ளை மருத்துவர்
மறு பிள்ளை பொறியியலாளர்
மொத்தமாக எட்டுப் பிள்ளைகளும்
கல்வியிற் பெரியவர்களாயினும்
பெற்றவர்கள்
பிச்சையெடுப்பதை நிறுத்தாயினமாம்...
அட! கடவுளே!
பிள்ளைகள் மாறினாலும்
பெற்றவர்கள் மாறுவதாயில்லையே...
ஓ! அவர்கள்
மதிப்புக்குரிய பிச்சைக்காரர்கள்!
பிச்சை எடுத்துக் குடித்து வெறித்து
அலைபவர்களை விட
பிச்சை எடுத்துப் பிள்ளைகளைப் படிப்பித்து
ஆளாக்குபவர்களை
நாம் போற்ற வேண்டுமே...
ஓ! அவர்கள்
மதிப்புக்குரிய பிச்சைக்காரர்கள்!

5 comments:

  1. வணக்கத்துக்குரியவர்கள்கூட!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. இப்படியானவர்களை நாடு போற்ற வேண்டும... ஒருகனம் சிந்திக்கசொல்லுகிறது

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. படம் தந்த கவிதை அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மதிப்புக்குரிய பிச்சைக்காரர்கள்...! அருமை அருமை ஐயா

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.