Monday 30 June 2014

சாவின் பின்னும் சாகமாட்டாய்


மரம் இருந்தால்
நிழல் தரும் பயனுண்டு
மனிதனாக இருக்கும்
நம்மாளுகளால் - ஏதும்
உலகுக்குப் பயனுண்டோ?
மரம் தரும் நிழல் போல
மனிதரும்
சூழ உள்ளோருக்கு நல்லது செய்ய
முன் வந்திருந்தால்
"வள்ளுவர், பாரதி போன்றோர்
தமிழுக்கு ஆற்றிய பணி போல..." என்று
உங்கள் பெயரையும் நினைவூட்ட
நாளைய தலைமுறை காத்திருக்கிறதே!
பிறந்தோம்
வாழ்ந்தோம் என்பதை விட
சாவின் பின்னும் வாழும்
வள்ளுவர், பாரதி போன்றோரைப் போல
சாவதற்கு முன்
நம்மைச் சூழவுள்ளோருக்கு
நல்லது செய்து கொண்டே சா...
சாவின் பின்னும் சாகமாட்டாய்
வாழ்ந்து கொண்டே இருப்பாய்!

3 comments:

  1. மரணமில்லா பெருவாழ்வுக்கு நல்ல வழி சொன்னீர்கள் !

    ReplyDelete
  2. நல்லது செய்து கொண்டே சா...
    சாவின் பின்னும் சாகமாட்டாய்
    வாழ்ந்து கொண்டே இருப்பாய்! ....
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  3. நல்வழி நயமாகச் சொன்னீர்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.