Tuesday 25 February 2014

பின்னர் தான் பின் விளைவும்...

நேற்று வந்தது சிறிதான பகையே
பகையே தந்தது பிரிவையும் இழப்பையும்
பகைக்க நேர்ந்தால் சட்டெனச் சீறுவதும்
சீறினால் வெட்டெனப் பிரிதலும் நிகழவே
நிகழ்விலே பிரிதலும் வருமென உணராமல்
பிரிந்தால் வந்திடும் தேவைக்குமே தேடிட
உறவும் இன்றியே இழப்பும் நேர்ந்திட
காலம்போக நினைத்துமே உணர்வீரே!

7 comments:

  1. கண்டிப்பாக காலம் ஒரு நாள் அனைத்தையுமே உணர வைக்கும்...

    உண்மையான வரிகள்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. உறவுகள் தொடர்கதையானால் காலம் கடந்து உணர வேண்டிய தேவை இருக்காது !உண்மைதான் நீங்க சொன்னது .!

    ReplyDelete
  3. வணக்கம்

    உண்மையான வரிகள்..... என்ன செய்வது காலம் செய்த விதி ......
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. ஆழமான அவசியமான கருத்துடன் கூடிய
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சினம் சேர்ந்தாரைக் கொல்லி!

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.